தலை நிமிர்ந்து முன்னே செல்லடா
தடைகள் தொடுப்பவர் இங்கே எவனடா..
திரும்பும் திசைகள் பாதை தானடா
உன்னை தொடர்வார் பலர் உண்டடா..
வலியில்லா வாழ்க்கை ஏதடா அன்னை
வலி கொண்டதால் தான் உலகில் நீயடா
சரணம்
++++++++
வீழ்ந்தாலும் அருவியை போல் எழுந்திடுடா
தாழ்ந்தாலும் கதிரை போல் வளைந்திடடா
மறைந்தாலும் விதை போல் வந்திடடா
இறந்தாலும் சூரியன் போல் உதித்திடடா
முயற்சி ஒன்றையே மூச்சாய் மாற்றடா
விடாமுயற்சி கொள்வதால் வாழ்வே வருமடா
இதனை உணரடா இயங்கி உயருடா
சரணம்
++++++++
மலையும் பொடியாகும் உளியாய் இருந்திடடா
குளமும் கடலாகும் துளியாய் இருந்திடடா
வானம் வெளிச்சமாகும் ஒளியாய் இருந்திடடா
எங்கும் நிறைத்திடும் வளியாய் இருந்திடடா
நம்பிக்கை கொண்டு உன்னை
செதுக்கடா
தன்னம்பிக்கை உன்னை தலைநிமிர்ச் செய்யும்டா
தன்னம்பிக்கை உன்னை தலைநிமிர்ச் செய்யும்டா
இதனை உணரடா இயங்கி உயருடா
No comments:
Post a Comment