Sunday, December 23, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் : மொபைலும் மேனும்

நவீன திருக்குறள்
அதிகாரம் : மொபைலும் மேனும் 
**********************************

1. உலகமே கைகளில் வந்ததோ நம்முலகம்
அதனுள் மாட்டிக் கொண்டதோ?!

2. உள்ளங்கையில் உலகம்  சின்னதாக ஆனது
உறவுகளோ சின்னாபின்ன மானது.

3. பிறர்முகம் மறந்தோம் எண்களால் பின்னால்
நம்முகமும் மறப்போம் உன்னால்.!

4. மொபைலால் மனிதனின் மொபைலிட்டி போச்சு
மொத்தத்தில் முடவனாய் நிற்கலாச்சு.

5. கைப்பேசி இல்லாதார் கைவீசி நடப்பார்
நடக்கையில் தலைநிமிர்ந்தும் நடப்பார்.

6. தூரத்தும் சொந்தங்களும் வெகுதூர சொந்தங்களானது
சுகதுக்கத்துக்கு ஸ்டேட்டஸ்சே பதிலானது.

7. மொபைலுக்கு உள்ளே போவான் ஒருவனவன்
குடும்பங்களில் இருந்து வெளியேறுபவன்.

8. நான்கு திசைகளில் நல்லதொரு குடும்பம் 
நான்குபேர் கைகளிலும் கைப்பேசி.

9. தொலைக்காட்சியை ஓடவிட்டு பார்க்குறதைவிட தன்னுடைய
கைபேசியை பார்குறவன் அதிகம்.

10. தலைநிமிர்ந்து நடந்தவ ரெல்லாம் உன்னால்
தலைகுனிந்து நடக்க லாச்சே?!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...