Thursday, November 8, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - காதலென்பது

1. கண்களில் படும் நெஞ்சினில் சுடும்
வயிற்றினில் படபடக்கும் பட்டாம்பூச்சி 

2. நான்கு கண்களும் சேர்ந்து நமக்குள் 
காணும் ஒரே காட்சி.

3. தொட்டாலும் பட்டாலும் சதைப்பசி தாண்டிய 
ஓர் நளின உணர்வு.

4. பூட்டிப் பூட்டி பொத்தி வைத்தாலும்
எட்டி எட்டிப் பார்க்கும்.

5. உலகில் இயங்கும் சக்திகளுக்கெல்லாம் தலையானது
உள்ளங்களை பிணைக்கும் மாபெரும்சக்தி.

6. ஆனந்தம் கொள்ள வைத்து மூழ்கடிக்கும்
ஆனந்த கண்ணீரிலும் நனைக்கும்.

7. ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் அன்பின்
இறுக்கத்தின் புரிதலோடு பிரசவிப்பது.

8. இயற்கையானது தூய்மையானது நம்பிக்கையுடையது சிறுபிள்ளைத்தனமானது
மரணத்தை மரணிக்கச் செய்வது.

9. வயதின் விதி வாலிபத்தின் சதி
வென்றால் இருவரும் சதிபதி

10. இரண்டு இருதயங்களில் ஒருவரில் லப்
இன்னொருவரில் கேட்கும் டப்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...