தீபாவளி தீபாவளி
இல்லம் எங்கும் தீபஒளி தீபஒளி.
தீபாவளி தீபாவளி
தீமை நீங்கும் இன்பஒளி இன்பஒளி.
பார்க்கும் தெருவெல்லாம் மத்தாப்பு
சிரிக்கும் மனசெல்லாம் தித்திப்பு
சரணம்
**********
நல் எண்ணை தேய்த்து தீய எண்ணம் நீங்கு
புற வெளிச்சம் கொடுத்து உள் இருளை போக்கு
இன்முகம் காட்டி இனிதாய் குதூகலிக்கும் உறவுகள்.
விதவிதமாய் உடை அணிந்து ஆடிவிளையாடும் மழலைகள்.
வகை வகையாய் பலகாரம் செய்திட
முடியாமல் வடை சட்டிக்கும் வாய் வலித்திட
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்.
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும.
சரணம்
**********
சிறு சண்டைகளை சீக்கிரம் ஊசி வெடியாய் வெடி.
பயம் கொண்ட நெஞ்சினை பாயும் ராக்கெட்டாயாய் மாறு.
ஆட்டம்பாம் போல ஏறிடும் விலைவாசி புஸ்வானமாகட்டும்.
சரவெடியாய் நிம்மதி எங்கும் படபடவென வெடிக்கட்டும்.
சங்கு சக்கரமாய் வேலைகள் செய்திட
ஆசைகள் எல்லாம் மத்தாப்பாய் நிறைவேறி பூத்திட
பொய்புரட்டு சூதுலஞ்சம் பசிபட்டினி கருகட்டும்.
புதுஉதயம் புதுவாழ்வு புத்துணர்ச்சி பொங்கட்டும்.
No comments:
Post a Comment