காதல் பாடல்#28
காதல் யாதென அறிந்தேன்.
தெளிந்தேன் தெளிந்தேன் உன்னை நினைக்க
உலகம் நீயென தெளிந்தேன்.
நிறைந்தேன் உன் இதயத்தில் நிறைந்தேன்
பறந்தேன் வான் தொட்டுவிட பறந்தேன்
சரணம்
**********
அளந்தேன் அழகின் பேரழகியே இவளென்று அளந்தேன்.
பிளந்தேன் வாயின் கதவுதனை மூடாமல் பிளந்தேன்.
உலகம் தேடினாலும் கிடைக்காத மங்கை இவளென்பதை உணர்ந்தேன்.
வாழும் வாழ்விலும் கிடைத்திடாத பொன்னான வாழ்க்கை நீதானென்பதை உணர்த்தினேன்.
சரணம்
**********
நெளிந்தேன் காதல் காதலென்று என்னுள் குழைந்தேன்.
களைந்தேன் மௌனம் கூடாதென்று எண்ணம் களைந்தேன்.
காதல் அவளிடம் சொல்லிவிட நேரில் ஒருகைபார்த்திட துணிந்தேன்.
அவளை நேரில் பார்த்துவிட காதல் என்னை ஒருகைபார்த்திட தணிந்தேன்.
No comments:
Post a Comment