எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா
மழை வேண்டித்தானே நின்றோம் கஜா
பிழை செய்து போனாயே கஜா
மண்ணை பார்த்து வேலை செய்தோம் கஜா
மண்ணை வாரி தூவிட்டியே கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா
மழை வேண்டித்தானே நின்றோம் கஜா
பிழை செய்து போனாயே கஜா
மண்ணை பார்த்து வேலை செய்தோம் கஜா
மண்ணை வாரி தூவிட்டியே கஜா
பொண்ண போல பார்த்து வளர்த்தோம் கஜா
பொரட்டி போட்டு போயிட்டியே கஜா
கண்ணை போல கட்டி காத்தோம் கஜா
கண்ணில் கண்ணீர் வச்சிட்டியே கஜா
விண்ணை போல போற்றி புகழ்ந்தோம் கஜா
வில்லை வீட்டையும் ஒடச்சிட்டியே கஜா
ஆசை வச்சு காட காத்தோம் கஜா
காடு கழனியெல்லாம் மூழ்கி போச்சு கஜா
இயற்கை உன்னை சுவாசித்தோம் கஜா
இல்லாம ஓட்டாண்டி ஆக்கிட்டியே கஜா
காடு கழனியெல்லாம் மூழ்கி போச்சு கஜா
இயற்கை உன்னை சுவாசித்தோம் கஜா
இல்லாம ஓட்டாண்டி ஆக்கிட்டியே கஜா
கூரை ஓடெல்லாம் மட்டமாச்சு கஜா
கைகூப்பி நிற்க விட்டுட்டியே கஜா
நட்ட மரமெல்லாம் சாஞ்சது கஜா
பட்ட பாடெல்லாம் வீணா போச்சே கஜா
வாழை மரங்களை வளைச்சிட்டியே கஜா
வாழ்க்கையே சேதச்சிட்டியே கஜா
ராஜாவா வாழ்ந்தோம் இங்கே கஜா
கூஜா ஏந்த வச்சிட்டியே கஜா
செய்வது அறியாது தவிக்கின்றோம் கஜா
நல்ல வச்சி செஞ்சிட்டேயே கஜா
ஆடு மாடெல்லாம் செத்தாச்சு கஜா
வெறும் உயிரை வெச்சி நிற்கிறோம் கஜா
எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா
No comments:
Post a Comment