Saturday, November 24, 2018

கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

மழை வேண்டித்தானே நின்றோம் கஜா
பிழை செய்து போனாயே கஜா

மண்ணை பார்த்து வேலை செய்தோம் கஜா
மண்ணை வாரி தூவிட்டியே கஜா

பொண்ண போல பார்த்து வளர்த்தோம் கஜா
பொரட்டி போட்டு போயிட்டியே கஜா

கண்ணை போல கட்டி காத்தோம் கஜா
கண்ணில் கண்ணீர் வச்சிட்டியே கஜா

விண்ணை போல போற்றி புகழ்ந்தோம் கஜா
வில்லை வீட்டையும் ஒடச்சிட்டியே கஜா

ஆசை வச்சு காட காத்தோம் கஜா
காடு கழனியெல்லாம் மூழ்கி போச்சு கஜா

இயற்கை உன்னை சுவாசித்தோம் கஜா
இல்லாம ஓட்டாண்டி ஆக்கிட்டியே கஜா  

கூரை ஓடெல்லாம் மட்டமாச்சு  கஜா
கைகூப்பி நிற்க விட்டுட்டியே கஜா

நட்ட மரமெல்லாம் சாஞ்சது கஜா
பட்ட பாடெல்லாம் வீணா போச்சே கஜா

வாழை மரங்களை வளைச்சிட்டியே கஜா
வாழ்க்கையே சேதச்சிட்டியே கஜா

ராஜாவா வாழ்ந்தோம் இங்கே கஜா
கூஜா ஏந்த வச்சிட்டியே கஜா

செய்வது அறியாது தவிக்கின்றோம் கஜா
நல்ல வச்சி செஞ்சிட்டேயே கஜா

ஆடு மாடெல்லாம் செத்தாச்சு கஜா
வெறும் உயிரை வெச்சி நிற்கிறோம் கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...