Tuesday, November 27, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #4

1.   தின்பதே  நோய்க்கு வழிவகுக்கும் தின்னா 
திருப்பான் நோயில்லா திருப்பான்.

2. அறிஞர்களாலும் ஞானிகளாலும் உணரவைக்க முடியாததை
அனுபவம் உணரவைத்து விடும்.

3. விழுந்தாலும் அழுதாலும் எழுந்திடும் குழந்தையிடம்
வாழ்க்கையை கேளுங்கள் யாதென   

4. பலமில்லா உடம்போ பகலில் தூங்கும்
தூங்காது இரவில் மனசு

5. முன்னே செல்பவரிடம் கற்றுக்கொள் பின்னே
வருபவரிடம் எச்சரிக்கை கொள்

6. பிச்சை இடுவதும் கூட சுயநலமே
புண்ணியம் கிடைக்குமென்று இட்டால்.

7. மதிப்பீடு பணத்திற்கு உண்டு செலவழித்தால்
மனிதனுக்கும் உண்டு கடன்கேட்டால்.

8. வலியில்லா வாழ்க்கை வாழ விழைகின்றோம்
வலிமறக்க சிரித்தே வாழ்கின்றோம்.

9. உண்மையில் உழைத்து வரும் சம்பாத்தியம் 
பெரும்பாலும் உண்டியலுக்கு வருவதில்லை.

10. நல்லவனென்று நிலைநிறுத்த பிறரை கெட்டவனென்றால்
நல்லவனென்பது நிலைக்காது வெகுநாள்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...