நவீன திருக்குறள்
அதிகாரம் - பெண்ணென்பவள்
------------------------------ ----------------------------
1. கருவிலே உதித்ததும் கள்ளிப்பால் என்றோரை
கழுத்தறுத்து தாய்ப்பால் பருகியவளோ.!
2. அன்னையில் தொடங்கி பெண்மையில் அடங்கி
ஆண்மையில் முடங்கி நிற்பவளோ.!
3. உடலற்ற உயிரை உயிராய் கருவாக்கி
உடலாக்கிய பிறப்பின் உச்சமவளோ.!
4. சொல்லப் போவது யாதென அறியாத
இரகசியம் கொண்ட பெண்(Pen)ணிவளோ.!
5. புரியாத புதிராய் விளங்காத விடையாய்
முடியாத முடிவுமாய் விளங்குபவளோ.!
6. உயிராய் நினைத்து உயிரை வைத்து
உருகுலையா உறவை காப்பவளோ.!
7. அன்பாய் அன்பும் கொஞ்சும் கெஞ்சும்
அரவணைக்கும் அன்புத் தாய்மையோ.!
அரவணைக்கும் அன்புத் தாய்மையோ.!
8. இல்லாள் இல்லாது இருக்காது இல்லமது
இருந்தால் இல்லமில்லை அது.
9. வாய்ப்பளித்து வாய்ப்பிளக்க வாழ்வுதனை அளித்ததால்
வாழ்க்கையில் யாதுமாகி நிற்பவளோ.!
10. இருப்போரிடம் விழிப்பாய் நெருப்பாய் இருப்பாய்
உயர்வாய் சிறப்பாய் இருப்பாய்.!
No comments:
Post a Comment