Friday, December 28, 2018

காதல் பாடல்#29

உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட
எந்தன் வாழ்வே நீதானென தந்து சொல்லி காட்ட
அம்மம்மா நெஞ்சம் துள்ள
காதலோ கையால் அள்ள
போவென்று மேகத்தை நானும் தூது சொல்ல
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?

சரணம்
********

விடியும்வரை என்னுடன் இருக்கிறாய்
விடிந்தவுடன் மறைந்து செல்கிறாய்
கண்ணுக்குள் காதல் வார்க்கிறாய்
நெஞ்சுக்குள் ஆசை வளர்க்கிறாய்
நினைக்கிறேன் மறுகணம் தோன்றுகிறாய்
மறக்கிறேன் போக மறுக்கிறாய்
காற்றாய் என்னை வருடுகிறாய்
காதலால் என்னை வறுக்கிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?
சரணம்
*********
நடக்கிறேன் பாதை ஆகிறாய்
படிக்கிறேன் பாடம் ஆகிறாய்
தவிக்கிறேன் ஆறுதல் ஆகிறாய்
முழிக்கிறேன் விடைகள் ஆகிறாய்
பேசுகிறேன் வார்த்தை ஆகிறாய்
சிரிக்கிறேன் சத்தம் ஆகிறாய்
உளறுகிறேன் அர்த்தம் ஆகிறாய்
தெளிவாகிறேன் நித்தம் ஆகிறாய்
சொல்லம்மா செல்லம்மா கண்ணம்மா காதல் செய்தி?

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...