Tuesday, October 30, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - எதிரும் புதிரும்

நவீன திருக்குறள்
அதிகாரம் - எதிரும் புதிரும்
*************************************
1. பணக்காரன் ஆவது எப்படி என்கின்ற
புத்தகம் விற்கிறான் ஏழைச்சிறுவன்.

2. ஒல்லியாய்தான் இருக்கிறது பெயர் என்னவோ
அதற்கு வைத்திருக்கிறார்கள் குண்டூசினு.

3. நேரமே சரியில்லையென்று அலுத்துக்கிறார் கடைக்காரர்
செய்வதோ கடிகார வியாபாரம்.

4. வேலை கிடைத்தது வேலை காலியில்லை
என்று போர்டு எழுத.

5. மதுஒழி என்றார் இயலாமையால் சிரிக்கிறார்
மதுக்கடை நோட்டுகளில் மகாத்மா.

6. மதவாதத்தை ஒழிக்க வேண்டும் தெருமுனையில்
பிரச்சாரம் செய்கிறது சாதிக்கட்சி.

7. பிறரின் எதிர்காலம் காட்டும் கிளியின்
எதிர்காலம் கூண்டுக்குள் கிடப்பதே.

8. மாடிமாடியாய் கட்டி உயர்ந்தாலும் குடிசையை
பார்க்க தலைகுனியத்தான் வேண்டும்.

9. கம்பியை நிமிர்த்த சுத்தியால் அடிக்கிறான்
தொழிலாளி உடம்பை வளைத்து.

10. ஓடிக்கொண்டிருந்தவன் இறந்தான் அவன் கைக்கடிகாரம்
ஓடிக்கொண்டிருக்கிறது டிக் டிக்.


No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...