Monday, October 22, 2018

பேதம்

வானமும் மேகமும் மழையும் பேதம் பாக்கல
நிலமும் மரமும் காற்றும் பேதம் பாக்கல
நீரும் நதியும் கடலும் பேதம் பாக்கல
நெருப்பும் தீயும் சுடரும்  பேதம் பாக்கல
காடும் மலையும் இயற்கையும்  பேதம் பாக்கல
பிறகு மனிதா நம்மில் ஏனடா பேதம் பாக்குற?

சரணம்
**********
உருவங்கள் வேறானாலும் வந்தவழி போகும்வழி ஒண்ணுதானே
உள்ளங்கள் மாறினாலும் உள்வழி செல்லும்வழி ஒண்ணுதானே
நடை உடை பேச்சு எல்லாம் நாமே கண்டது
நீதி நியாயம் தண்டனை எல்லாம் நாமே வகுத்தது
நிலம் நதி நீர் எல்லாம் நாமே பிரிச்சது
பணம் பட்டம் பதவி எல்லாம் நாமே சொன்னது
கொஞ்சம் யோசிச்சு பாரடா இயற்கை இதுபோல் யோசிச்சா பூமியில் வாழ்வதே ஏதடா
நீயென்ன நானென்ன இங்கடா இயற்கை முன்னே யாவரும் ஒன்றென வாழ்வதே சிறப்பட

சரணம்
**********
மேலோர் கீழலோரில்லை ஒருவருக்கு ஒருவர் தேவைதானே
ஏற்றத்தாழ்வு தேவையில்லை உடம்பின் குருதி சாட்சிதானே
இயற்கையை பிரிச்சு எங்கும் எதற்கும் சண்டை போட்டான்
ஆணும் பெண்ணும் சமமென ஏற்க அரசியல் செஞ்சான் 
மனிதம் மறந்து மனிதனை ஏனோ கொன்று குவிச்சான்
இயற்கை அழிவின் போதே உணர்ந்து கைய கோர்கிறான்
இன்னும் வேஷங்கள் என்னடா மனிதனை மனிதனாய் ஏற்றிட நம்மில் பேதங்கள் நீக்கடா
வாழ்ந்திட இயற்கை வேணுமடா மனிதன் மண்ணில் நிலைத்திட இயற்கையை காப்பது கடமையடா

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...