திமிர் பிடித்த தலைக்கனம்.
கெடுதல் நினைக்கும் மூளை.
காமம் தொடுக்கும் கண்கள்.
பிறரிடம் ஒட்டு கேட்கும் காது.
உழைப்பில்லாமல் சுவாசிக்கும் மூக்கு.
கொடுங் சொற்கள் உதிர்க்கும் நாக்கு.
கண்டதை கண்டபடி பேசும் வாய்.
எதற்கும் மனம் வராத நெஞ்சம்.
உதவ முன்வராத கரங்கள்.
கையூட்டு வாங்கும் கைகள்.
காட்டி கொடுக்கும் விரல்.
அடுத்தவர் உணவை விழுங்கும் வயிறு.
வளைந்து நெளிந்து கொடுக்கும் இடுப்பு.
வழி மாறி நடக்கும் கால்கள்.
நம்ப வைத்து செய்யும் துரோகம்.
தன்னையே தகர்க்கும் கோபம்.
அழிக்க துடிக்கும் தீய எண்ணம்.
இப்படி கொடும் ஆயுதங்கள் சுமந்த
உலகின் மிகப்பெரிய ஆயுதம்
மனிதனே,
ஆக்கமும் அழித்தலும் அவனிடமே.
அழிப்பதை அழித்து
நல் ஆயுதம் செய்வோம்..
No comments:
Post a Comment