Friday, October 26, 2018

கடவுள்

மனதை அறிந்து கொள்ளடா அதற்கு கடந்து உள்ளே செல்லடா 
உன்னை புரிந்து கொள்ளடா அதன் பெயரே கடவுள் தானடா
உன்னை நீ அறிவதால் இறைவனே மனிதனாகிறான்.
பிறரை நீ அறிவதால் மனிதனே இறைவனாகிறான்.

சரணம்
*********
இரு கைகளை உயர்த்தி கும்பிடுவதை விட
இரு கைகள் கொண்டு உழைத்திடு
பல மதங்களை உயர்த்தி கொண்டாடுவதை விட
ஒரு மனிதம் நமக்கென வாழ்ந்திடு
அன்பால் வரும் பிறரை அணைத்திடு
உன்னிடம் கேட்டு வருவோர்க்கு அளித்திடு
இந்த பூமியில் உன்னை படைத்ததன் பலனை செய்திடு.
அன்பே கடவுள் என்பதை உலகிற்கு உணர்த்திடு.

சரணம்
**********
நமக்கு தெரியாத உருவத்தை வணங்குவதை விட
நமக்கு  தெரிந்த தாய்தந்தையை வணங்கிடு.
நாம் கடவுள் கடவுள் என்பதை விட
கட உள்ளே மனதின்உள்ளே என்றிடு.
பிறருக்கு செய்யும் உதவியில் தெரிகிறான்.
பிறரிடம் சிரிக்கும் சிரிப்பில் இருக்கிறான்.
இந்த பூமியில் அனைத்திற்கும் கடவுள் கடவுள் என்றிருந்தால்
மனிதன் மனிதன் என்பது எதற்கென உணர்த்திடு.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...