கோடி கோடியாய் பணம் என்னடா
சிரிக்க மறந்தவன் பிணம் தானடா
எதை கண்டு நீ சிரிக்க மறந்தடா
சிரிக்க தெரிந்தவன் மனிதன் தானடா
உண்மையை உணர்ந்து கொள்ளடா
சிரிப்பே வாழ்வின் மருந்தடா
சரணம்
**********
சிரிக்க சிரிக்க பேசுடா வரும் சிக்கல் தீரும் பாரடா
சிரிக்க சிரிக்க பழகுடா வரும் உறவுகள் தரும் அழகுடா
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் சிரிச்சா மனதோ லேசாகும்.
துயரம் துரோகங்கள் தந்தாலும் சிரிச்சா எல்லாம் தூசாகும்.
வருவதும்
பிரிவதும்
பிறப்பதும் இறப்பதும் இயற்கையடா
இன்பமும் துன்பமும் சோகமும் கவலையும் செயற்கையடா
இதை புரிந்த மனம் சிரித்தே விரிக்கும் றெக்கையடா
இன்பமும் துன்பமும் சோகமும் கவலையும் செயற்கையடா
இதை புரிந்த மனம் சிரித்தே விரிக்கும் றெக்கையடா
சரணம்
**********
நோக்கம் இன்றி சிரிடா வரும் நோய்கள் ஓடும் பாருடா.
வலிகள் போக சிரிடா புதிய வழிகள் வரும் பாருடா.
சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்றே பெயராகும்.
சிரிக்க வைக்கும் மனிதனுக்கு புனிதன் என்பதே சிறப்பாகும்.
பணமும் பதவியும் ஆசையும் ஆஸ்தியும் வந்துபோகும்டா.
இதையே பெரிதென நினைக்கும் மனமோ வெந்துசாகும்டா.
இதனை புரிந்து எதற்கும் சிரித்து வாழ்ந்தால் இன்பம்தானடா.
No comments:
Post a Comment