Thursday, November 1, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - பாடம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - பாடம்
************************

1. தலைக்கணம் மிகுந்தவன் வாழ்க்கையில் அழிந்து
போவான் சொல்கிறது தீக்குச்சி. 

2. நேற்றென்ன கிழித்தாய் இன்றென்ன கிழிக்கப்போகிறாய்
கிழிக்கவந்தாய் கேட்கிறது காலண்டர்.

3. அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்துகிறது நிழல் 
கருப்புதானென்று இரத்தம் சிகப்புதானென்று. 

4. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கம் இறுதியைநோக்கி
கற்பிக்கிறது வாழ்க்கை புத்தகம்.

5. என்னுடனே ஓடிவா இல்லையென்றால் உன்னைவிட்டு
ஓடிவிடுவேன் காட்டுகிறது கடிகாரம்.

6. ஆயிரம் தடைகள் வந்தாலும் போராடி
முன்னேறு  என்கிறது வாழை.

7. என்னைப்போல் இருந்துவிடு பூத்துக்கொண்டே காலமும்
இருப்பாய் நிரூபிக்கின்றது பூச்செடி.

8. காற்றென்னை தூற்றினாலும் துரத்தினாலும் வேலையை
செய்வேனென்று அழுகிறது மேகம்.

9. சமுதாயத்தை தலைநிமிர்த்தியது தலைகுனிந்து போதும் 
பெருமிதம் கொள்கிறது எழுதுகோல்.

10. எதிர்பார்ப்புகளுடன் ஏமாற்றங்களையும் சேர்த்துக்கொள் வெற்றிதான்
வாழ்க்கையில் அறிவிக்கிறது தோல்வி.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...