சிலநேரப் பார்வையில் அரவணைப்பாய் கதகதப்பாய்
சிலநேரப் பார்வையில் குறுகுறுப்பாய் கண்ணடிப்பாய்
சிலநேரப் பார்வையில் என்னை
மயக்கி மூழ்கடித்தாய்.
சிலநேரப் பார்வையில் என்னை அசத்தி கிறங்கடித்தாய்.
பலநேரம் பாடாய்படுத்தும் அந்த பார்வைக்குள்
என்னை எங்கோ கடத்தினாய்.
சரணம்
**********
சில நேரப் பார்வையிலே பல நேரம் புத்தம் புதிதாய் பிறக்க வைத்தாய்.
சில நொடி வேளையிலே பல கணம் காதல் காதலாய் பூக்க வைத்தாய்.
சட்டென்ற பார்வையில் என்னை
பட்டென்று வீழ்த்தி வாழ்த்தி எழுந்திட வைக்கிறாய்.
காதல் காதல் என்றழ வைக்கிறாய்.
உனது பார்வை என்ன அரிவாளா கூர்வாளா
வெட்ட வெட்ட காதல் என்னுள் முளைக்குதடி.
சரணம்
**********
விழி வெண் படலத்தின் நடு கருவிழி இருக்கிறது என்பதை பொய்கச் செய்கிறாய்.
அது உன் இரண்டு காந்த கண் உருண்டைகளென வைத்துக் கொண்டு இழுக்கிறாய்.
பார்கின்ற பொழுதில் என்னை
விர்றென்று இழுத்து நெஞ்சில் சர்றென நுழைக்கிறாய்.
காதல் வம்புக்கு காதலாக அழைக்கின்றாய்.
உனது பார்வை என்ன ஈட்டியா கத்தியா
காதல் கலை கொண்டு என்னை செதுக்குதடி.
No comments:
Post a Comment