Monday, October 15, 2018

காதல் பாடல் # 19

காதல் சொல்ல வந்தேன்
கண்கள் பார்த்து நின்றேன்
சிலையாகி போனேன்
அழகு சிலை உன்னை பார்க்க
சிலையாகி போனேன்
இருந்தும் மீண்டும் மீண்டும்

சரணம்
**********
உந்தன் கண்களை பார்க்க மீன்கள் இருபுறம் ஓடுதடி
எந்தன் நெஞ்சினில் முட்கள் கோர்க்க இதயம் தவிக்குதடி
மின்சாரமாய் உடலெங்கும் பாய்ந்திட காதல் காதலென்று துடிக்குதடி
மின்னலாய் உயிரெங்கும் சென்றிட காதல் காதலென்று அடிக்குதடி
சொல்வேனோ சொல்லாமல் போவேனோ
சொல்லாமல் கண்களுக்குள் வீழ்வேனோ
இருந்தும் மீண்டும் மீண்டும்

சரணம்
**********
உந்தன் கண்ணின் இமைகள் மூடிதிறந்திட மதுவே தோற்றதடி  
உன்னை கண்டதும் தேகம் பூவாய்பறந்திட காற்றினில் மிதக்குமடி   
பார்வையாய் பரவியெங்கும் நின்றிட சுவாச மூச்சென்று ஆனதடி
வண்ணத்துபூச்சியாய் வானிலெங்கும் படபடக்க கண்கள் உனதுகண்களே காரணமடி
சொல்வேனோ சொல்லாமல் போவேனோ
சொல்லாமல் கண்களுக்குள் வீழ்வேனோ
இருந்தும் மீண்டும் மீண்டும்

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...