Tuesday, October 16, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #3

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #3
++++++++++++++++++++++++++++++++
1.  புரியாத வார்த்தை வாசித்தும் புரியாத 
வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை.

2. அழுவது கோழையாகாதே விழுவது தோல்வியாகாதே
பிறரை நம்புவது நன்மையாகாதே.

3. அன்பாய் இருப்பவரிடம் அன்பை மறைக்காதே
மறந்தும் இருப்பதுபோல் நடிக்காதே.

4. வாழ்க்கையில் ஓடுகின்றான் இல்லாதவனும் இருப்பவனும்
வயிற்றை நிறைக்க குறைக்க.

5. வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்
எல்லைக்குள் வாழ்க்கையை அமைத்துவிடாதே.

6. கனவுகளில் மூழ்கி வாழ்க்கையை வாழாதே
மற்றவர்களின் கனவுகளில் வாழ்.

7. அகிலத்தை ஆளும் ஆராய்ச்சியில் நீளும்
அன்பெனும் தாரக மந்திரம்.

8. உன்னை நேசிக்க வாழ்க்கையை நேசி
வாழ்க்கையும் உன்னை நேசிக்கும்.

9. வாழ்க்கை என்றால்? யோசிக்கிறேன் அனுபவங்கள்
வாரி வழங்குகிறது அர்த்தங்களை..!

10. புன்னகை சிந்த எதற்க்கும் தயங்காதே
புத்தொளி பிறக்கும் மறவாதே.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...