Wednesday, October 3, 2018

காதல் பாடல் # 17



சொர்க்கம் நீயென கண்டேன்
சொக்கி சொக்கி போனேன்.
மார்க்கம் நீயென வந்தேன்
மயங்கி மயங்கி நின்றேன்.
உன்னிலே கண்டேன் நான் சொர்க்கம் அது என்னவென்று.
அத்தனையும் நான் சொல்ல எண்ணில் அது அடங்காது.

சரணம்
**********

நான் பார்க்க நீ முறைக்க அதுவல்லவோ சொர்க்கம்
நான் பேசிட நீ அதட்ட அதுவல்லவோ சொர்க்கம்
நான் கொஞ்ச நீ கொட்ட அதுவல்லவோ சொர்க்கம்
நான் கெஞ்ச நீ மிஞ்ச அதுவல்லவோ சொர்க்கம்
நான் ரசிக்க நீ சிரிக்க அதுவல்லவோ சொர்க்கம்.
நான் தரிசிக்க நீ சிக்க அதுவல்லவோ சொர்க்கம் 
கண்களில் கண்ணீர் வருமுன்னே அதை கைகளில் ஏந்திட சொர்க்கம்.
கடைசி வரையில் உன்னை எனது மார்பினில் தாங்கிட சொர்க்கம்.

சரணம்
**********

கனவில் கூட நீ வந்திட அதுவல்லவோ சொர்க்கம். 
உப்பு மூட்டை தூக்கி காலமும் சுமந்திட சொர்க்கம் 
கைகள் வீசிட அதை பற்றி நடந்திட சொர்க்கம்
பாத சுவடுகள் வழி பதிந்து நடந்திட சொர்க்கம் 
விடும் மூச்சு காற்றை நான் சுவாசி வாழ்ந்திட சொர்க்கம் 
வாழும் காலம் உன்னை நினைத்தே உருக சொர்க்கம்
உலகம் அழிந்தாலும் நமது காதல் வாழ்ந்திட செய்வது சொர்க்கம்.
நாம் அழிந்தாலும் நமது காதல் உலகம் வாழ்த்திட சொர்க்கம்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...