எழுந்து வா பாடல்
??????????????????
எழுந்து வா விரைந்து வா தோழா
விழுந்ததே எழுகதானே தோழா!
நடந்ததை நினைப்பதால் தோழா
பயன்ஏதும் இல்லைதானே தோழா!
ஏற்றி விட வருவாரென எண்ணாதே தோழா
நீயே எழக் கற்று கொள் வெற்றி அதுதானே தோழா!
சரணம்
????????
அறிவை திறந்து வா
அச்சம் துறந்து வா தோழா!
ஆயுதம் புதைத்து வா
அன்பை விதைத்து வா தோழா!
விழுந்தால் விதையாக இரு தோழா!
எழுந்தால் விருட்சமாக மாறு தோழா!
வா வா எழுந்து வா தோழா
வானம் தொட்டு விட வேண்டுமென்று வையமும் வென்று விட கூடுமென்று வா வா விரைந்து வா தோழா!
சரணம்
????????
கால்களில் ரெக்கை வை
கைகளில் நம்பிக்கை வை தோழா!
கண்களில் நேர்மை வை
கனவுகளில் உண்மை வை தோழா!
அறிவினை விரிவாக்கம் செய் தோழா!
அண்டமும் உனதாகும் கேள் தோழா!
வா வா எழுந்து வா தோழா
வானம் முழுதும் உன் பெயரெழுத வையம் முழுதும் உன் புகழெழுத
வா வா விரைந்து வா தோழா!
No comments:
Post a Comment