Wednesday, June 20, 2018

மகளை பற்றி பாடல்

மகளை பற்றி பாடல்
**********************

மகளே செல்லமகளே
பூவாய் பிறந்தவளே. பூவாகி நின்றவளே பூமுகமாய் சிரிப்பவளே.
பூக்களெல்லாம் தலைவணங்கும் பூவுலக தலைமகளே.
பூக்களும் உன்னை சூடிக் கொள்ள ஏங்கிடும் குலமகளே.

சரணம்
*********

சிரிப்பையும் அழுகையும் அழகென்று அறிய வைத்தாய்.
யாழினிது குழலினிது அர்த்தம் புரிய வைத்தாய்.
ஆணாதிக்க திமிர் உடையை உரிய வைத்தாய்.
அன்பே கடவுள் என்பதை தெரிய வைத்தாய் அன்பு மகளே!
இன்பப்புள்ளியில் தொடங்கி
துன்பத்தை முற்றுப்புள்ளியாக்கி
நான் வரைந்த வண்ண மிகு கோலம் நீ அன்பு மகளே!!

சரணம்
*********

அன்பையும் பாசத்தையும் கற்றுதந்த முதல் ஆதாரமே.
மண்ணோ விண்ணோ கண்டிடாத அழகு முத்தாரமே.
உலக மானுட பிறவிகளின் முதல் வித்தாரமே.
என்றும் வாழ்க்கையில் மகளே இல்லை சேதாரமே அன்பு மகளே!
உன்னன்பில் தொடங்கி
உன்னன்பிலேயே முடிகிறதே
நான் சுற்றும் எல்லை இல்ல உலகம் நீ அன்பு மகளே!!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...