அம்மா பாடல்
###########
பல்லவி
#######
அம்மா என்றால் அதில் உலகம் அடங்குதம்மா.
உயிர்கள் அனைத்தும் அந்த சொல்லில் அடங்குமம்மா.
உலகில் கடவுள் என்றொன்று சொன்னால் அது அம்மாதானே.
தன்னலம் பார்க்காது நம்நலம் மட்டுமே பார்க்கும் அன்னை தாயே
பல்லாண்டு வாழ்க நீயே.
சரணம்
#######
தன் உயிரை பணயம்வைத்து உயிராய் பெற்றவள்.
தன் இரத்தத்தை பாலாக்கி பரிவோடு ஊட்டுபவள்.
தன் தூக்கத்தை துறந்து இசையோடு தாலாட்டுபவள்.
தன் பசியை மறந்து பிள்ளைக்கு உணவளிப்பவள்.
அன்பிலும் அரவணைப்பிலும் உனக்கு ஈடேதம்மா.
கொடுப்பதிலும் விட்டுக்கொடுப்பதிலும் நீ நீயே அம்மா.
உண்மையில் நான் வெறும் மெய்யே உன்னால் தானே ஆனேன் நான் உயிர்மெய்யே.
சரணம்
#######
தன் மனம் வாடினாலும் நொடிக்காது காப்பவள்.
தன் தேவையை நினைக்காது குடும்பதிற்காக உழைப்பவள்.
தன் உலகம் பிள்ளை குடும்பம்மென வாழ்பவள்.
தன் வாழ்வை நமக்காக சுகமாய் கரைபவள்.
துன்பத்தை தவிடுபொடியாக்கும் வல்லமை நீயேஅம்மா.
உயிராவதும் உயிராயிருப்பதும் நீ நீயே அம்மா.
உண்மையில் நான் வெறும் மெய்யே உன்னால் தானே ஆனேன் நான் உயிர்மெய்யே.
No comments:
Post a Comment