Sunday, June 3, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - உண்மை தத்துவம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - உண்மை தத்துவம்
@@@@@@@@@@@@@@@@@@

1. செல்வத்திற்காக ஆரோக்கியம் இழப்பான் பின்நாளில்
செல்வத்தை செலவளிப்பான் ஆரோக்கியத்திற்காக.

2. நாளை நாளையென்று இருக்கும் நாட்களை
கழிப்பான் நேரமில்லையென்றும் புலம்புவான்.

3. எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை வீணாக்குவான் பிற்காலத்தில்
கடந்தகாலத்தை நினைத்தே ஏங்குவான்.

4. ஆசை ஆசையென்று சேர்த்து கொள்வான்
பேராசையால் ஆபத்தை பார்ப்பான்.

5. எப்படி நீ யோசிக்கிறாயோ அப்படிதான்
உன் வாழ்க்கை அமையும்.

6. அடக்கம் அடங்காமை இரண்டும் அடங்கும்
முடங்கும்நாள் அனைவருக்கும் அடக்கம்.

7. நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கையை நம்பி
முயற்சியை கைவிட்டு விடாதே.

8. விலை கொடுத்து ஆயிரம் வாங்கினாலும்
வாங்கயியலா ஆபரணம் பண்பு.
 
9. ஆயிரம் சதுரடியில் மாளிகை கட்டுவான்
ஆறடிநிலம்தான் செந்தமென்று தெரியாமல்.

10. மரணமில்லை என்பதுபோல வாழ்வான் ஏதேனும்
நிகழ்ந்தால் மரணமே வாழ்வென்பான்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...