காதல் பாடல்#4
பல்லவி
--------------
நீயோ ஒரு காதல் புத்தகம்
அன்பே உன் வாசகன் நான்
படிக்க படிக்க திகட்டாத சிறுகதையே
முடிக்க முடிக்க தொடரும் தொடர்கதையே
விதையாய் என்னுள் விழுந்து விருட்சமான கவிதையே
சரணம்
-------------
வாசிக்க வாசிக்க ஆகின்றேன் நானோ கவிஞன்.
நேசிக்க நேசிக்க ஆகிறாய் நீயோ அறிஞன்.
பக்கத்திற்கு பக்கம் புரட்ட புரட்ட படிக்கிறேன் பாடம்.
துணுக்குக்கு துணுக்கு திரட்ட திரட்ட அனைத்தும் மனப்பாடம்.
எனது எழுத்துகளில் வார்த்தைகளில் வாக்கியத்தில் வாய்மொழி அகராதி நீ நீ நீ.
சரணம்
--------------
தேடிட்டு தேடிட்டு நிற்கையில் புரியா வாக்கியம்.
கோடிட்டு கோடிட்டு படிக்கையில் ஆவாய் முக்கியம்.
வயசிற்க்கு வயசு துடிக்க துடிக்க வாராதே பாரம்.
மனசிற்க்கு மனசு படிக்க படிக்க ஆவாயோ சம்சாரம்.
எனது வாழ்க்கையின் பக்கங்களை வடித்துவிட்டு பார்க்கையில் முழுவதும் நீ நீ நீ.
No comments:
Post a Comment