காதல் பாடல்#3
*****************
அடியே உன்னதானே நெனச்சிருக்கேன் புள்ள.
அந்த நெனப்புலதான் உயிர்நிலைக்கும் உள்ள.
நீ இல்லாட்டா நான் உலகத்துல ஒண்ணுமில்ல.
நீதானே என் வாழ்வின் உலக எல்ல.
சரணம்
********
உன்னை காணது கண்களில் தூக்கம் இல்ல
இமைகள் மூடினால் கனவில் நீதானே புள்ள.
நீதானே அழகுனு உன்னைபத்தி ஊரே சொல்ல
எனக்கோ நீ காணா அதிசயம் புள்ள.
சொல்ல சொல்ல இனிக்கும் உள்ள உள்ளுக்குள்ள ஏதோ துள்ள
மனம் தொட்டு சத்தியமாய் சொல்ல
உன்னபோல எவளும் உலகத்துல இல்ல.
சரணம்
*********
என்னை கொள்ளை செய்தது நீதானே புள்ள
புதுபுது கவிதைகள் வடிக்க வைத்தாயே மெல்ல.
எனக்குள் சலனம் விதைத்தாயே புள்ள
எனையே முழுதாய் களவாடி போனாயே நல்ல.
அள்ள அள்ள குறையாது உள்ள
உன்மேலஉள்ள நேசம் புள்ள.
இந்த உலகம் காணாத காதல் உன்மேல எதற்கும் ஈடுஇணையே இல்ல.
No comments:
Post a Comment