Friday, June 22, 2018

காதல் பாடல்#5



காதல் பாடல்#5
*****************

உன்னாலே உன்னாலே
உளறுகிறேன் உறங்கையிலே.
தன்னாலே தன்னாலே
தவிக்கிறேன் தனிமையிலே.
நான் என்ன செய்ய என்ன செய்ய கண்ணுக்குள்ள நீதானே.
நான் உன்ன மட்டும் உன்ன மட்டும் நெஞ்க்குள்ள வைச்சேனே.

சரணம்(ஆண்)
****************
சுற்றி சுற்றி பார்க்குறேன் தலைசுற்றி நிக்குறேன்
பார்க்கும் இடமெல்லாம் உன்முகம்.
முட்டி முட்டி மோதுறேன் தூக்கமின்றி தவிக்குறேன்
தூங்கத்தில் கனவெங்கும் உன்வரம்.
பூவை பார்த்தா ரசிக்கிறேன் எனக்குள் நானே சிரிக்குறேன்.
மழலையாக மாறி தவழ்கிறேன் மடியில் ஏறி குதிக்குறேன்
காதல் இதுதானானு எனக்குள்ள நானே கேட்குறேன்
சொல் செல்லமே செல்லம்.

சரணம் (பெண்)
******************

ஏனோ எனை மறக்குறேன் பசிதூக்கம் இழக்குறேன்
காரணம் எல்லாமே உன்லீலை.
தேனே மானே படிக்குறேன் தேர்விலும்மே எழுதுறேன்
காரணம் யோசித்தால் உன்ரகளை.
உன்னையே நித்தம் யோசிக்கிறேன்
எனக்குள் மாற்றம் உணர்கிறேன்
கண்ணிமை மூட மறுக்கிறேன் இமைகள்மூட கனவில் மிதக்கிறேன்.
காதல் இதுதானானு எனக்குள்ள நானே சொல்கின்றேன்
கண்ணே எந்தன் கண்ணாலனே.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...