நம்பிக்கை பாடல்
&&&&&&&&&&&&&&
பல்லவி
&&&&&&&
ஆயிரம் தடைகள் வருமடா
அதை நீ உடைத்து செல்லடா
துணிவே துணையாய் கொள்ளடா
துணிந்தே எதையும் செய்யடா
வேதனைகளை வேரறுத்து காட்டடா
சோதனைகளை சாதனைகளாய் மாற்றடா!
சரணம்
&&&&&&&
ஊரார் சொல்லில் இல்லையடா
உனது உள்ளத்தில் இருக்கிறது மாற்றமடா.
உள்ளங்கை ரேகையில் இல்லையடா
உனது நம்பிக்'கையில் இருக்கிறது வாழ்க்கையடா.
நீ வெறும் தீயல்ல எரிமலை என்று சொல்லடா.
வரும் தோல்வியை தோளில் தூக்கி வைத்து அதன் தோளில் ஏறி வெற்றிக்கொடி கட்டடா.
சரணம்
&&&&&&
உன்னை அறிந்து கொள்ளடா
உன்னால் முடியும் என்றே சொல்லடா.
எதற்கும் பயந்தால் ஆகாதடா
அதை உழைத்தே விரட்டி ஓட்டடா.
வா முடியாது என்றல்ல வாழமுடியும் என்று சொல்லடா.
வரும் தொல்லைகளை தொலைவில் துரத்தி விரட்டு கனவு எல்லையில் ஏறி உண்மைக்கொடி வீசடா.
No comments:
Post a Comment