கவிதையும் பெண்ணும் பாடல்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
பெண்ணே உன்னை உனக்கு தெரியுமா
நீதானே கவிதை என்பது புரியுமா?
படைப்பிலே நீயும் கவிதையும் ஒன்றென்பதை உலகம் தெளியுமா அறியுமா!?
சரணம்
%%%%%%
வார்த்தை கோலங்களோ அவள் மாயாஜாலங்கள்.
சிரிக்கும் சிரிப்போ வரும் எதுகை மோனை.
நடையில் இடையினம் பேசினால் மெல்லினம் கோபித்தால் வல்லினம்.
கவிதையால் நீ அழகோ உன்னால் கவிதைக்கு அழகோ.
இரண்டுமென்றால் அழகிற்கு அழகோ.
சரணம்
%%%%%%
எழுத்தை கோர்ப்பதாலோ அவள் வார்த்தையாகிறாள்.
வார்த்தைக்கு வார்த்தை வரும் வர்ணனை வாழ்க்கை.
எழுத்தில் புதுகவிதை ஆச்சர்யத்தில் ஹைக்கூ நிகரில்லா மரபுகவிதை.
கவிதையால் நீ அழகோ உன்னால் கவிதைக்கு அழகோ.
இரண்டுமென்றால் அழகிற்கு அழகோ.
No comments:
Post a Comment