Thursday, May 31, 2018

தாலாட்டு பாடல்

தாலாட்டு பாடல்
""""""""""""""""""""""

பல்லவி
"""""""""""""""
மேகத்தை எடுத்து மெத்தை செய்தேன் நீ உறங்க.
வானத்தை குடை பிடிக்க சொன்னேன் நீ கிறங்க.
அழகே கண்ணே ஆராரோ ஆரிரரோ.
அமுதே பொன்னே ஆரிரரோ ஆராரோ.

சரணம்
"""""""""""""""
காற்று வந்து கீதம் பாடும்
நிலவும் சேர்ந்து வேதம் ஓதும்
செல்லமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.
வானவில் புதிய வர்ணம் சேர்க்கும்
நட்சத்திரம் எல்லாம் கூடி பேசும்
செல்வமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.

சரணம்
"""""""""""""""
பாட்டி வந்து கதைகள் சொல்ல
தாத்தா அம்பாரை கூட்டி செல்ல
செல்வமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.
அப்பா உன்னை அள்ளி அணைக்க
அம்மா என்றும் உன்னருகினில் இருக்க
செல்லமே கண்ணுறங்கு ஆராரோ ஆரிரரோ.

Wednesday, May 30, 2018

இது காந்தி தேசமா? பாடல்

என்னன்னவோ நடக்குது நாட்டுல
நடப்பதோ ரூபா நோட்டுல
எல்லாத்தையும் பாருடா ரோட்டுல
சொல்ல போறேன் கேளுடா பாட்டுல.
இறைவா இது காந்தி தேசமா?
இல்லை அனைவரும் போடும் வேசமா?

சரணம்
**********
கையில காசுவச்சா இடிக்கலாம் நசுக்கலாம் எப்படியும் வண்டிய ஓட்டலாம்.
பணம்னா சட்டத்தையே வளைக்கலாம் மாத்தலாம் வேறாக மாத்தி எழுதலாம்.
போகும் பெண்ணிடம் திட்டம் போட்டு அவள் நகை அல்லாது அவளையும் கொய்கிறான்.
சாகும் வரையில் அடித்து விட்டு வீட்டு நகை உடைமை அனைத்தையும் அடிக்கிறான்.
இறைவா இதென்ன கொடுமை மனிதனின் மடமை.
மனிதன் மனிதனை நேசிக்காவிடில் அழிக்காமல் இருக்கலாம் அன்றோ?

சரணம்
**********
பையில பணமிருந்தா மிரட்டலாம் விரட்டலாம் எவனையும் விலைக்கு வாங்கலாம்.
பணத்துகாக செய்யுறான் இல்லாட்டா அரைகுறை செய்யுற மாதிரி நடிக்குறான்.
பட்டினி இருந்தாலும் இருப்பான் குடிக்க கடன் கிடைச்சா பட்டினிக்கும் சேர்த்தே குடிப்பான்.
இலஞ்சம் என்பதே அரசாச்சு காரணம் அவனவன் பணிகளுக்கு அதிகாரி காசு கேட்கலாச்சு.
இறைவா இதென்ன கொடுமை மனிதனின் மடமை.
தேவைக்கு பணம் என்பதுமாறி அழிவிற்கு பணம் நியாயமா?

Tuesday, May 29, 2018

காதல் பாடல்#2

காதல் பாடல்
+++++++++++++
தேன்மிட்டாய் கம்மர்கட்டாய் இனிக்கிறியே!
சாந்துபொட்டாய் சந்தனபொட்டாய் மணக்கிறியே!
மின்னல் வெட்டாய் உன் கண்கள் விட்டாய் பின் இதயம் தொட்டாய் அன்பே!
என்னில் இட்டாய் உன் அன்பை சொட்டாய் பின் தேகம்  சுட்டாய் அன்பே!!

சரணம்
++++++++
நெஞ்சில் பதிந்திட்டாய் அதில் ஊஞ்சல் கட்டி ஆடிட்டாய்
நாளும் என்னை ஆட்டிவிட்டாய்.
உதிரம் கலந்திட்டாய் அதில் அனுக்கள் நிறைந் திட்டாய் என்னை நீயாக மாற்றிட்டாய்.
உன்னையே நினைக்கை வைத்திட்டாய் என்னை மறக்க செய்திட்டாய்
விட்டாய் அலைய விட்டாய்
சிட்டாய் பறக்க தேன்சிட்டாய்.

சரணம்
++++++++
வானில் வட்டமிட்டாய் எனை சேர பற்றி விட்டாய் நாளும் பொழுதும் சுற்ற விட்டாய்.
திரிந்தே நோட்டமிட்டாய் உனை போல எண்ணி விட்டாய் இல்லை யாரும் அளவிட்டாய்.
நட்சத்திர பூக்களாய் ஜொலிக்கவிட்டாய் வானமே வாழ்த்த வணங்கிட்டாய்.
இட்டாய் மாலை இட்டாய்
மொட்டாய் காதல் அரும்பும்மொட்டாய்.

Monday, May 28, 2018

காதல் பாடல்#1

காதல் பாடல்
""""""""""""""""""""""""
பல்லவி
&&&&&&&
தேனே மலைத் தேனே
உன்னை பருக உள்ளம் வழிந்தேனே.
மீனே கெண்டை மீனே
உன்னை ருசிக்க ஏக்கம் கொண்டேனே.
கெட்டி தயிரான என் மனதை
சட்டி மோறாக பின் கடைந்து போறவளே.

சரணம்
&&&&&&&
உன்னை பார்க்கையிலே என்னுள் ஏதோ கூடும் பரவசம்.
உன்னை ருசிக்கையிலே தேனா தித்திக்கும் நீயோ ஓர் அதிரசம்.
முறுக்கு போன்ற என் நெஞ்சை நொறுக்கிபுட்டு பின் முறுக்கிக்கிட்டு போறவளே சிறுக்கி,
சறுக்கு போன்ற உன் இதயத்தில் இறுக்கிக்கிட்டு பின் கிறங்கிட செய்தாளே ஒருத்தி.
லட்டா இருந்த என்ன உலுக்கி பூந்தி ஆனேனே தேடுறேன் என்னை நானே உன்னையே என்னில் பொறுக்கி.

சரணம்
&&&&&&&
உன்னை நினைக்கையிலே என்னுள் எச்சில் ஊரும் முக்கனி.
உன்னை சுவாசிக்கையிலே எண்ணெயில் பொறித்திடும் நீயோ ஓர் வடகறி.
தோசை போன்ற உன் முகத்தை காட்டிவிட்டு பின் சட்டினியிட்டு மெதுவடை ஆக்கிட்டா.
பொங்கல் போன்ற அவள் பற்களால் பேசிவிட்டு பின் சிரித்துவிட்டு காலி பண்ணிட்டா.
வெறும் தோசை என்ன ரவா தோசை ஆனேனே போடுறேன் அதிலே நெய் ஆகுறேன் உன்னில் ஸ்பெஷல்.

Saturday, May 26, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - பொது(சுய)நலம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - பொது(சுய)நலம்
**********************************
1. சுயநலம் விடுத்து பொதுநலம் காண்கின்
நரகம் ஆகும் சொர்க்கம்.

2. இருந்தால் புல்லாங்குழலாய் இருந்திடு கால்பந்தாய்
இருக்காதே உதை படுவாய்.

3. அன்று பொதுநலத்தின் எச்சம் இன்று
தன்னலத்தின் உச்சம் அரசியல்.

4. நட்பென்று பழகுவர் சிரிப்பர் வாய்ப்பென்றால்
மறைப்பர் சுயநலமாய் கழன்றிருப்பர்

5. குன்றின் மேலெரியும் விளக்கு பொதுநலம்
குன்றிதன்னுள் மறைப்பது சுயநலம்.

6. பிறர்நலம் தரும் பொதுநலம் அதில்
சுயநலம் கேடு தரும்.

7. சுயநலம் மட்டும் கசடு கற்றோற்கு
பொதுநலம் இருந்தென்ன பயன்.

8. தன்னலம் இல்லாதார் பொதுநலம் காண்பர்
அவன்நலம் யாரும் காணார்.

9. பொதுநலம் என்பது தாகமில்லாத தண்ணீர்குடம்
குடிக்கும் பிறர் தாகத்திற்காக.

10. நோயெல்லாம் நோயெல்ல மருந்திட மாறும்
சுயநலம் மாறா மனநோய்.

Friday, May 25, 2018

கிறுக்கல்கள் ✍ 10.2

கிறுக்கல்கள் ✍ 10.2

மக்கள் வாழ
தேவை வளர்ச்சி
மக்கள் அழிவை கொடுக்கும்
வளர்ச்சி தேவையா?
வேதாந்தா ஓடடா
வேணாம்டா நோயடா
வேணும்டா எங்கள் நிலம்டா
வேடிக்கை பார்ப்பவர்கள் நாங்கள் இல்லடா.

முத்தெடுக்கும் ஊரில்
மூச்செடுக்க சொல்லி
முடுக்கி விட்ட கூட்டம்
மூடர்களின் ஆட்டம்

எதிரியை விரட்ட சொன்னால்
எதிரியாய் பார்க்கிறான்
ஏறி மிதிக்கிறான்
ஏளனமாய் சுடுகிறான்

சுட்டவனை காப்பாற்ற
செத்தவனை தீவிரவாதியென
சட்டம் இயற்ற சொல்லும்
சனநாயகம் அய்யோ?

மக்களாட்சி எதற்கு?
மக்களை காக்கவா?
மக்களை துரத்தவா?
மக்களை கொல்லவா?

காக்க வேண்டிய அரசாங்கம்
காவு வாங்கிய கோலம்
கண்ணீர் அலங்கோலம்
கடவுளே இது நியாயமா?

Thursday, May 24, 2018

அப்பாவை பற்றிய பாடல்

அப்பாவை பற்றிய பாடல்
******************************

பல்லவி
**********
நான் போற்றும் தெய்வம் அப்பா நீதானே.
தெய்வங்கள் போற்றும் தெய்வமும் நீதானே.
நீதானே என் கோயில் நீதானே.
நீதானே நான் வணங்கும் தெய்வம் நீதானே.
தேடிதேடி உலகில் எங்கு பார்த்தாலும் அப்பாவுக்கு நிகர் அப்பாதானே.

சரணம்
**********
நடை அறியா பருவத்திலே நடக்க செய்தது நீதானே
விடை தெரியா விடலையிலே உரக்க உரைத்தது நீதானே.
கவலைகளில் சிக்காமல் வாழ்வின் வழிகளை வகுத்து கொடுத்தது நீதானே.
கோடிகள் கொட்டினாலும் மாடிகள் கட்டினாலும் ஈடில்லா வரம் அப்பா நீதானே.
ஆயிரம் உன்னால் கிடைத்தாலும் என் முதல் உலகம் முதல் தோழன் நீதானே.

சரணம்
**********
தோல்வி எனை நெருங்கயிலே அணைத்து தேற்றியது நீதானே.
தோளுக்கு தோள் கொடுத்து தூக்கி விட்டது நீதானே.
கேட்காமலே நினைத்ததை வாங்கி கொடுத்து அழகு பார்த்தது நீதானே.
ஊரில் தலைவன்னாலும் உலகில் அறிஞன்னாலும் என்றும் ஆசான் அப்பா நீதானே.
உலகம் என்பின் நின்றாலும் அதன் முதற் காரணம் மனம் மகிழ்பவன் நீதானே.

Monday, May 21, 2018

நாடா இது நாடா பாடல்

நாடா இது நாடா பாடல்
****************************
பல்லவி
#######
நாடா இது நாடா
ஏதோ நடக்குது போடா
கூடி கூடி போடுறான் திட்டம்
தனி தனி ஆளுக்கொரு சட்டம்
கையில தராச தந்துப்புட்டு
கண்கள தான் கட்டிபுட்டு வீதியில நீதி தேவதைய விட்டுட்டான்டா நம்ம ஆளு டோய்!

சரணம்
#######
நாடு முன்னேற சட்டங்கள வகுத்து பல திட்டங்கள் கொடுத்தான் அன்றைக்கு.
வீடு முன்னேற சட்டங்களை வளைத்து பல திட்டங்களில் அமுக்குறான் இன்றைக்கு.
வழக்குகள் மேல வழக்குகள் சேர தவறுகள் குறையல.
ஊருக்கு ஊர் தெருக்கு தெரு நீதிமன்றங்கள் பத்தல.
முடியும்னு போனா முடிந்த பாடல்ல எதிலும் நியாயம் கிடைத்த பாடல்ல.

சரணம்
#######
பீஸ்சு கிடைச்சா குற்றமே இல்லை என ஆக்கிடுவான் நம்மாளு தெரிஞ்சுக்கோ.
காசு கொடுத்தா நீதிமான் நீயே என எழுதி விடுவான் புரிஞ்சுக்கோ.
ஆளுக்கு ஆள் பதவிக்கு பதவி தண்டனை மாறுது.
தீர்ப்புக்கு மாறி தீர்ப்புனு சொல்ல தவறா நடக்குது.
கண்கள் திறந்து தண்டிக்க நீதிதேவதையே வாம்மா நியாயம் தந்துகண் பாரம்மா.

Friday, May 18, 2018

இது காதலா? பாடல்

இது காதலா? பாடல்
#################
பல்லவி
---------------
மலரே மலரே
நின் வாசம் என் சுவாசமே.
உயிரே உயிரே
என் உயிர் உன் உறவே.
நீ இல்லாத வாழ்க்கை இல்லை.
நீ இல்லாமல் நானும் இல்லை இல்லை
நீ மட்டும் என் வாழ்க்கையின் எல்லை எல்லை.
சரணம்
---------------
என் நிழலும் என்னை விட்டு உன் பின்னை தேடி தேடி போகுது.
உடல் திசுக்கள் உன்னை தினம் நினைத்து நினைத்தே சாகுது.
என்னை மறந்து எந்தன் உயிர் உன்னைதானே தேடுது.
இதுதான் காதல் என்று உள்ளம் பாடுது.
எங்கே எந்தன் இதயம் அன்பே உன்னை கேட்குது.
சரணம்
---------------
என் காலம் என்னை விட்டு உன் பின்னே சுற்றி சுற்றி சூழலுது.
எனது முகவரி உந்தன் முகம் பார்த்து பார்த்தே சொல்லுது.
உன்னை நினைத்து எந்தன் உடல் மனம்தானே வாடுது.
காதல்தான் காதல் என்று உதிரம் ஓடுது.
நீயே எந்தன் வாழ்க்கை அன்பே விண்ணே வாழ்த்துது.

Wednesday, May 16, 2018

நவீன திருக்குறள் : அதிகாரம் - அம்மா அப்பா

நவீன திருக்குறள்
அதிகாரம் : அம்மா அப்பா
$$$$$$$$$$$$$$$$$$$$$
1. அடிப்பார் பின் தவிப்பார் உடன்
அணைப்பார் அப்பா அம்மா.

2. இருக்கலாம் ஆயிரம் கதாநாயகி கதாநாயகன்
முதன்மை அப்பா அம்மா.

3. அருகிலே இருக்க சுற்றாதே கோவில்குளம்
வணங்கு அப்பா அம்மா.

4. அடிப்பட்டது குழந்தை அழுதன ஆறு
கண்கள் அப்பா அம்மா.

5. பெற்றதும் சுமந்தனர் பெற்றதையும் சுமப்பர்
சுமைதாங்கி அப்பா அம்மா.

6. உலகமே உன்னை உதறினாலும் உதறாத
உள்ளம் அப்பா அம்மா.

7. கேட்டும் கேட்காமலும் வேண்டியும் வேண்டாமலும்
அருள்பவர் அப்பா அம்மா.

8. வாழ்வில் சோத்தயும் சாவில் சொத்தையும்
கொடுப்பவர் அப்பா அம்மா.

9. கருஉரு தெருபெறு பேறுபெறு சருகுற
காரணி அப்பா அம்மா.

10. உச்சங்களின் உச்சம் உயிர்களில் உன்னதம்
உலகில் அப்பா அம்மா.

Tuesday, May 15, 2018

அழகி நீ பேரழகி பாடல்

அழகி நீ பேரழகி பாடல்
&&&&&&&&&&&&&&&&&&&
பல்லவி
%%%%%%
முட்ட கண்ணழகி நீ ஊரே பாராட்டும் பேரழகி
சொல்ல சொல்ல இனிக்கும் திகட்டாத பெயர் அழகி.
வட்ட முகத்தழகி நீ நிலவே வியக்கும் ஒளியழகி
மெல்ல மெல்ல மயக்கும் மங்காத மஞ்ச நிறத்தழகி.
சரணம்
*********
ஏழு மலை கடல் கடந்து போனாலும் உனை போல் அழகை காண முடியுமா?
ஏழு உலக அதிசயமும் உன்னிடத்தில் போட்டி போட முடியுமா?
பூக்களும் உனை தலையில் தூக்கி சூடி கொள்ளும்.
அந்த பூவும் அழகு உன்னை காணக்காண பொறாமை கொள்ளும்.
அழகி நீ பேரழகி தமிழே வியக்கும் பெயர் கொண்ட அழகி!
சரணம்
---------------
ஏழு வகை ஸ்வரம் கொண்டு வந்தாலும் உனை போல் ராகம் வடிக்க முடியுமா?
ஏழு கண்ட அறிஞனும் உன்னைபற்றி ஆய்வு செய்ய முடியுமா?
கடவுளும் உனை பார்க்கையில் வியந்து மதி மகிழும்.
அந்த கடவுளும் எப்படி உந்தன் படைப்பென ஆச்சரியம் கொள்ளும்.
அழகி நீ பேரழகி தமிழே வியக்கும் பெயர் கொண்ட அழகி!

Sunday, May 13, 2018

அன்றும் இன்றும்

கிறுக்கல்கள் ✍ 10.1
அன்றும் இன்றும்
###############
அன்று
வீடு நிறைய குழந்தைகள்
இன்று
வீட்டுக்கொரு குழந்தை 
அன்று
பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்
இன்று
சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்
அன்று
குறைந்த வருமானம்
நிறைந்த நிம்மதி
இன்று
நிறைந்த வருமானம்
குறைந்த நிம்மதி 
அன்று
படித்தால் வேலை
இன்று
படிப்பதே வேலை
அன்று
வீடு நிறைய உறவுகள்
இன்று
நிறைய வீடுகள் உறவுகள் இல்லை
அன்று
உணவே மருந்து
இன்று
மருந்துகளே உணவு
அன்று
முதுமையிலும் துள்ளல்
இன்று
இளமையிலேயே அல்லல்
அன்று
உதவிக்கு தொழில்நுட்பம்
இன்று
தொழில்நுட்பம்தான் எல்லாம்
அன்று
யோக வாழ்க்கை
இன்று
எந்திர வாழ்க்கை
அன்று
தியாகிகள் நாட்டை காப்பாற்றினர்
இன்று
அரசியல்வாதிகள் நாட்டை விற்கின்றனர்
அன்று
படங்களில் ஒரு குத்து பாட்டு
இன்று
குத்து பாட்டில் தான் படமே
அன்று
ஓடினோம் வயிற்றை நிறைக்க
இன்று
ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க
அன்று
அறிஞர்கள் பாதையில்
இன்று
இளைஞர்கள் போதையில் 
அன்று
ஒரே புரட்சி
இன்று
ஒரே கட்சி 
அன்று
சென்றார்கள் வளர்ச்சியில்
இன்று
சொல்கிறது சினிமா கவர்ச்சியில்
அன்று
சட்டசபை
இன்று
சட்டை கிழியும் சபை
அன்று
மக்கள் நலன் ஆட்சி
இன்று
சிக்கல் தரும் ஆட்சி
அன்று
ஊரே கூட கோலாகல விழா
இன்று
ஊருக்கே போக முடியாத மூடுவிழா
அன்று
கைவீசி நடந்தேம்
இன்று
கைப்பேசியுடன் நடக்கிறோம்
அன்று
ஜனநாயகம்
இன்று
பணநாயகம்
அன்று
விளைச்சல் நிலம்
இன்று
விலை போன நிலம்
அன்று
தொட முடியாத உச்சத்தில் காதல்
இன்று
தொட்டு முடியும் எச்சம் காதல்
அன்று
கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்
இன்று
கோடை விடுமுறையிலும் கைப்பேசியிடம் தஞ்சம்
அன்று
உயிரை கொடுத்து காதல் வாழ்ந்தது
இன்று
காதல் இல்லைனா உயிரை பறிக்கிறது
அன்று
நிறைந்தது மகிழ்ச்சி
இன்று
நடக்குது வெற்று நிகழ்ச்சி
அன்று
வாழ்ந்தது வாழ்க்கை
இன்று
ஏதோ வாழும் வாழ்க்கை

Friday, May 11, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - காலநேரம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - காலநேரம்
%%%%%%%%%%%%%%%%

1. இருமுள் ஆயுதங்களாய் மனிதர்களை துரத்துகிறது
பிறப்பு இறப்பு வரை.

2. விடிந்தும் விடியுமென காலங் காலமாய்
காத்திருப்பான் அவன் முட்டாள்.

3. காலம் பொன் போன்றது வருங்
காலமோ இருகண் போன்றது.

4. கடந்து போனால் திரும்ப முடியாது
முடியும் உடன் போனால்.

5. காலத்தை வென்றவன் வெற்றியாளன் கடந்த
காலத்தையே நினைப்பவன் தோல்வியாளன்.

6. காலத்தே செய் பயன் கடந்து
செய்தால் பயனும் வீண்.

7. கலிகாலத்தில் காலம் தவறினால் ஆகும்
அலங்கோலம் உன் எதிர்காலம்.

8. நம்பிக்கையோடு என்கை பற்றி சுற்று
சுற்றாவிடில் வாழ்க்கை அற்று.

9. ஆணைக்கும் பூனைக்கும் தெரியும் காலம்
அவரவர் கையில் என்று.

10. இறந்தகாலம் எடுத்து நிகழ்காலம் உடுத்து
எதிர்காலம் பொற்காலம் நடத்து.

Wednesday, May 9, 2018

மனிதனா நீ மனிதனா பாடல்

மனிதனா நீ மனிதனா பாடல்
#########################

பல்லவி
########

தேடி தேடி பார்க்குறேன்
மனிதர்கள் காணல.
ஓடி ஓடி ஒழியுறேன்
ஓநாய்கள் நடுவுல.
என்ன சொல்ல எப்படி சொல்ல தாங்கவில்ல.
மனுஷன் மனுஷனை கெடுக்குற காலம் ஓயவில்ல.
மாற்றம் மாற்றம் என்று சொன்னால் போகுமோ நிலை மாறுமோ?
மனிதன் தானாய் மனம் மாறினால் தான் போகுமே நீங்குமே?

சரணம்
########

நேரம் பார்த்து திட்டங்கள் பலது போடுறான்.
நேரா வந்தா கழுத்தில் மாலை சூடுறான்.
முகம் பார்த்து சிரிக்குறான் பின் முதுகில் ஏறி குத்துறான்.
வேலையை மறந்து அடுத்தவரிடம் மூக்கை நுழைக்குறான்.
வேவு பார்த்தே உடம்பு வெந்து சாகுறான்.
நல்லவன் போல் பேசுறான் பின் படுங் குழியில் தள்ளுறான்.
மனுஷன மனுஷன் புரளி பேசி அரளி வீசி தேவை இல்லாதத கிளரி ஏசுறான்.
மனிதா இது நியாயமா தர்மமா இது இப்படியே போகுமா முடிவாய் சொல் சொல்!.

சரணம்
########

காலம் பார்த்து கொள்ளை பலது அடிக்குறான்.
காமம் கொண்டு புள்ளையை கூட்டி கொடுக்குறான்.
காவல் போனா அடக்குறான் பின் நம்மில் பணம் பறிக்குறான்.
கட்சி தாவி காட்சிகள் பேசி நிற்குறான்.
ஏதோ பண்ணி காய்களை நல்லா நகர்துறான்.
அவனோ இவனோ பதுங்குறான் பின் ஒருவரை ஒருவர் தாக்குறான்.
ஏன்னு கேட்க ஆள போட்டு காலி பண்ணி இருக்குற இடம் இல்லா போக்குறான்.
மனிதா இது நியாயமா சொல்லடா நீ மனிதனா மிருகமா முடிவாய் சொல் சொல்!.

Sunday, May 6, 2018

வர்ணனை பாடல்

வர்ணனை பாடல்

பல்லவி
########

அழகும் உன்னை அழகென கொஞ்சும்
அந்த ஆகாய நிலவின் அழகை மிஞ்சும்
வானும் உன்னை ஏந்திட கெஞ்சும்
அந்த மேக கூட்டங்கள் நெருங்கிட அஞ்சும்
நட்சத்திர அந்தஸ்துக்கு வருமே பஞ்சம்
எல்லாம் உன்னிடம் வருமே தஞ்சம்
பெண்ணே நீதான் இயற்கையா
இல்லை இயற்கை தான் பெண்ணா

சரணம்
#######
பார்த்து பார்த்து படைத்தவனும் ஏங்குவான்
வானில் ஏறியே விண்ணை ஆளுவான் 
தூக்கம் இன்றியே அவனும் தூங்குவான்
சிறகு இன்றியே காற்றில் கலக்குவான்
காரணம் வேறல்ல பெண்ணே நீயேதான் இயற்கையே!
உதாரணமும் தேவையல்ல இயற்கையே நீயேதான் பெண்மையே!

சரணம்
#######
மழையும் துளியும் என்றே நனைப்பவள்
மண்ணும் மணமும் சேர்ந்தே இனிப்பவள்
நகமும் சதையென கலந்தே வளர்பவள்
உயிரும் உடலென இணைந்தே நகர்பவள்
உயிரின்றி ஊன்னல்ல மண்ணே நீயேநான் பெண்ணே!
நீயின்றி நானல்ல பெண்ணே நீயேநான் கண்ணே!

Wednesday, May 2, 2018

கிறுக்கல்கள் PART 5


கிறுக்கல்கள் 7.1

பல்லவி
**********
வந்த வழி போகும் வழி ஒன்றுதானே எண்ணிபாரு!
நீ என்னடா நான் என்னடா அன்புதானே நம்மில்பாரு!
ஏன்டா இப்படி இடையினில் ஆட்டம் பாட்டம்
கொஞ்சம் தவறினா
இறுதியில் விழுமே தப்பாட்டம்

சரணம்
*********
உனக்குனு எதுவுமில்ல எனக்குனு எதுவுமில்ல
நமக்குனு வச்சான்டா யாரோ ஒருவன்
ஆட்சியை புடிச்சாலும் ஆட்டிப் படைச்சாலும் ஆறடி நிலந்தான்டா நமக்கு சொந்தம்
காக்கைகுருவி விலங்கிற்கு தெரிவது கூட தெரியல அதன் ஒற்றுமையோ புரியல?
ஆயிரம் வந்தாலும் போனாலும் இறுதியில் வரும் என்றும் உண்மை மனிதமே
யோசிச்சு பாரேண்டா மாற்றம் வேணுமடா
உன்னால் முடியும் உனக்கு நிகர் நீதானடா!

சரணம்
*********
வந்தத வச்சுக்கடா போனத விட்டுருடா
நெனச்சத செஞ்சிருடா சின்ன தம்பி
கனாவா வந்தாலும் நனவா ஆக்கிடுடா நம்பிக்கை போதுமடா தங்க கம்பி
காயங்கள் வந்தாலும் ஆறும் காலம் வரும்
காலங்கள் போனாலோ திரும்பாதே
சோதனைகள் சேர்ந்தாலும்
சாதிக்க விடை வரும்
சோதிச்சு பார்க்காது வருந்தாதே
நினைத்து செயல்படடா விரைந்து செய்திடடா
உனக்கு நிகர் நீதானே ஈடு இணை யாரடா?


 கிறுக்கல்கள் 7.2

இருளில் ஏற்றப்படும் விளக்குகள்
இருளை அகற்றுவதில்லை மறைக்கின்றன.
அதுபோல்..
உனக்குள் உருவாகும் தோல்விகள்
வெற்றியை தடுப்பதில்லை தள்ளிவைக்கின்றன

முயன்றும் முடியாது போனால்
அது உன் தவறல்ல!! 
தொடர்ந்து முயன்றுக் 
கொண்டே இரு!!! 

உயிர் உள்ளவரை போராடு...!
உலகில் உள்ளவரை நடைபோடு...!


 கிறுக்கல்கள் 7.3

தோழா சிந்தி...

பதறிய காரியம் சிதறும்
சிதறிய வார்த்தை கொதறும்
கொதறிய உடல் உதறும்
உதறிய வாழ்க்கை தவறும்

தவறிய பின் யோசிப்போம்

என்ன பயன்?


கிறுக்கல்கள் 7.4

அன்பே...😍

ஆழ்கடல் என்றாலும் இறங்கத்தயார் 

கடினமான மலையிலும் 
ஏறத்தயார் 

கரடுமுரடான பாதையிலும் நடக்கத்தயார்

நெடுதூர  பயனமென்றாலும் போகத்தயார் 

உச்சி வான்மீதும் ஏறத்தயார்

எதிர்வரும் புயலையும் எதிர்க்கத்தயார்

நெருப்பையும் நெஞ்சோடு அணைக்கத்தயார்

இராமன் வில்லையும் வளைக்கத்தயார்

தாக்கும் தடைகளை தகர்க்கத்தயார்

அன்பே 😍 நீ என்னுடன்
கைகோர்த்து வாழ்க்கை
முழுவதும் நடந்தால்!!!

குறிப்பு :
இங்கு அன்பே😍 என்பது தன்னம்பிக்கை'யை குறிப்பிடுகிறேன்😜



கிறுக்கல்கள் 7.6

தோழா...

ஒவ்வொரு நாளும்
நீ போகுமிடம் புதியதுதான் 
ஒரு நாள் ஆகும் அது உன் 
கால்தடத்தின் முகவரிதான்..

தன்னம்பிக்கை கொள்
தளர்ந்து விடாதே!

போராடும் குணமிருந்தால் 
போர்க்களமும் 
உன் தெருவாகும்... 

பொதுநலமும் கொஞ்சம் கலந்திருந்தால் உன் தெருகூட பூந்தோட்டமாகும்... 

போராடு! பூமாலை சூடு! !



கிறுக்கல்கள் 7.7

உனக்காக
ஏணியாய் இருந்திருப்பார்கள்
ஏற சொல்லிகொடுப்பார்கள்
ஏற கற்றுக்கொடுபார்கள்
ஆனால்..
உன்னை யாரும் 
ஏற்றிவிட வேண்டும்
என எண்ணாதே! 
நீயே எழக் கற்றுகொள்!

அது தான்..
வெற்றியின் முதற்படி 
உன் வாழ்க்கையில்..👍


கிறுக்கல்கள் 7.7

நாட்டின் நிலை பாடல்
##################

பல்லவி
########

நல்லதெல்லாம் இருட்டில் கிடக்குது
இங்க கெட்டதெல்லாம் வெளியில் நடக்குது
நல்லத சொல்ல போனா முட்டாளுனு சொல்லுறான்
கெட்டதுக்கோ கூட்டங்கூடி கட்டவுட்டு வைக்குறான்
கெட்டதே இங்கு நல்லதாகி போச்சு
நல்லதோ கூனிகுறுகி போச்சு
மாறுமோ நிலை மாறுமோ
இல்ல தேசம்தான் தலைகீழ் ஆகுமோ

சரணம்
#######

பயமென்று இருளில் நடந்ததெல்லாம் துணிந்து வெளியே நடக்குதடா
தப்பென்று அறிவில் இருப்பதெல்லாம் தெரிந்து அரசே விற்குதடா
உருட்டலும் மிரட்டலும் ஒருபுறம் இருக்க
அதட்டலும் அரசியலும் இருகரம் அணைக்க
ஏனென்று கேள்வி கேட்க்கும் நாமெல்லாம் எதற்கென்று ஓடி ஒழியுறோமடா
மாறுமோ நிலை மாறுமோ
இல்ல தேசம்தான் தலைகீழ் ஆகுமோ

சரணம்
#######

மனமென்று பழகிய நாமெல்லாம் மறந்து எந்திரமாய் ஆனோமடா
உறவென்று இருந்த மனிதமெல்லாம் இறந்து
தந்திரமாய் நடந்தோமடா
ஆபாசமும் ஆத்திகமும் ஒருபுறம் மடக்க
ஆன்லைனும் ஆப்லைனும் இருபுறம் கெடுக்க
ஏனென்று கேள்வி கேட்க்கும் நாமெல்லாம் மானங்கெட்டு சிக்கி தவிக்கிறோமடா
மாறுமோ நிலை மாறுமோ
இல்ல தேசம்தான் தலைகீழ் ஆகுமோ


கிறுக்கல்கள் 7.8

நதிகளின் பயணம்
கடல் வரையே!
விதியின் பயணம்
அறியும் வரையே!
மெட்டுகளின் பயணம்
பாடல் வரையே!
மொட்டுகளின் பயணம்
கூந்தல் வரையே!
கண்களின் பயணம்
காட்சி வரையே!
எண்களின் பயணம்
வாழ்க்கை வரையே!
தென்றலின் பயணம்
தீண்டல் வரையே!
வைகறையின் பயணம்
கதிரவன் வரையே!
பொய்கையின் பயணம்
வற்றும் வரையே!
ஊடலின் பயணம்
கூடல் வரையே!
தேடலின் பயணம்
கிடைக்கும் வரையே!
காதலின் பயணம்
காமம் வரையே!
பிழைப்பின் பயணம்
உழைப்பு வரையே!
உழைப்பின் பயணம்
வெற்றி வரையே!

ஆனால்

மனதின் பயணம்
எது வரையே?🤔


கிறுக்கல்கள் 7.9

தோழா எதிலும் உன்னை..

நம்பு!
நம்ப வை!
நம்பி வை!
நம்பி கை வை! 
நம்பிக்கையை வை!
வெற்றியால்
நம்பிக்கையை காப்பாற்று!!



கிறுக்கல்கள் 8.0

எதற்கும் வை காலகெடு
விலகும் வரும் கேடு
உழைத்து மெனக்கெடு
இல்லாட்டா ஆகும்  மானக்கேடு
ஊரார் பேச வெட்கக்கேடு



கிறுக்கல்கள் 8.1

காதல்'தேன் பாட்டு
%%%%%%%%%%%%%%

பல்லவி
&&&&&&&

பார்த்தேன் பார்த்தேன் திகைத்தேன்
உணர்ந்தேன் உணர்ந்தேன் மலர்ந்தேன்
தவித்தேன் அழுதேன் விழுந்தேன்
எழுந்தேன் நினைத்தேன் பறந்தேன்
தேன் தேன் தேன் காதல்தேன்
தேன் தேன் தேன் மிதந்தேன்

சரணம்
$$$$$$$

சிந்தித்தேன் கவித்தேன் புணைந்தேன்
பார்த்தேன் மலைத்தேன் தமிழ்தேன்
உன்பெயரேதேன் தேன் தேன்.
காதல்தேன் கவிழ்ந்தேன் இழந்தேன்
கொடுத்தேன் இதழ்தேன் சுவைத்தேன்
அமிழ்தம்தேன் தேன் தேன்.
மனந்தேன் கொடுத்தேன் பறிகொடுத்தேன்
உள்ளந்தேன் தவித்தேன் பறிதவித்தேன்.

சரணம்
$$$$$$$

மறந்தேன் உயிர்மறந்தேன் மெய்துறந்தேன்
செந்தேன் உயிர்தேன் கலந்தேன்
உனையேநினைத்தேன் தேன் தேன்.
சிலிர்ந்தேன் மிளிர்ந்தேன் ஒளிர்ந்தேன்
குளிர்ந்தேன் மகிழ்ந்தேன் குழைந்தேன்
உன்சொலேதேன் தேன் தேன்.
மணந்தேன் செய்தேன் பிழைத்தேன்
இழந்தேன் உயிர்த்தேன் துறந்தேன்.


கிறுக்கல்கள் 8.2

தேநீர் கடையில் வீண் அரட்டை போதும்!

புகை கேடென அறிந்தும் புகைப்பது போதும்!

குட்டிசுவரில் வெட்டி கதை வீண் கதை போதும்!

பகலில் பெண்ணின் பின்னால் சுற்றியது போதும்!

இரவில் மது அருந்தி குடல் கெட்டது போதும்!

பெருமை என்று கிரிக்கெட் கமென்ட்ரி அடித்ததும் பார்த்ததும் போதும்!

ரசிகன் என்று பாலாபிஷேகம் செய்தது போதும்!

கண்ட புரளி பேசியதும் எல்லோறையும் கிண்டலடித்ததும் போதும்!

இளைஞனே..

போதும் போதும்
ஏமாறியது போதும்

எழுந்து வா! விரைவாக வா!
சரித்திரம் படைப்போம் வா!
உன்னில் புதுமை காண்போம் வா!
புது உலகம் செய்வோம் வா!


கிறுக்கல்கள் 8.3

பெற்று வளர்த்து
ஆளாக்கியவள் அம்மா
முதல் தாய்!

கைகோர்த்தது முதல்
உடனிருப்பவள் மனைவி
இரண்டாம் தாய்!!

இறுதி காலத்தில்
நானிருக்கிறேன்
என்பாள் மகள்
மீண்டும் முதல் தாய்!😍



கிறுக்கல்கள் 8.4

மௌனம் ஒரு

சிறந்த மொழி
அமைதிக்கான வழி
அகிம்சையின் போராட்டம்
இம்சையால் ஆர்பாட்டம்
தெரியாத குழப்பம்
தெளிந்த பக்குவம்
ஆகும் மனவதம்
அனைத்துக்கும் சம்மதம்



கிறுக்கல்கள் 8.5

ஆதார் உன்னை முழுவதும் எடுத்துக்கொண்டது.

ஜிஎஸ்டி உன் பணத்தை பதம் பார்த்து கொண்டிருக்கிறது.

நீட் கரம் நீட்டுவது போல் உயிரை வாங்குகிறது.

கட்சத்தீவு ஈழம் பரிதாபமாய் பறிபோனது.

பல்கலைக்கழக வேந்தர்கள் நியமனம் நம்மை அவமாம் செய்கிறது.

அணுஉலை நம் உடல் அணுக்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

சல்லிக்கட்டு நம் உணர்வுகளை சீண்டி விளையாடியது.

ஸ்டெர்லைட் ஆலை நம் விளைநிலத்தோடு விளையாடுகிறது.

மீனவர் பிரச்சனை தண்ணீரில் எழுதிய கதைகளாய் நடக்கிறது.

நீயுட்ரினோ மீத்தேன் நம் வாழ்வோடு வலிகளால் நீள்கிறது.

டாஸ்மாக் தமிழக மக்களின் மானத்தை வாங்கி கொண்டிருக்கிறது.

அனைத்தும் தலைக்கு மேல் போய் விட்டது
அனைத்தையும் தலையை சுற்றி போடு தமிழா..

தமிழா வா தமிழனாய் வா!
தடைகள் தகர்த்து வா!
மடைகள் திறப்போம் வா!
பொறுத்தது போதும் வா!
தமிழ்நாடு தேசத்தை மீட்போம் வா!!



கிறுக்கல்கள் 8.6

மழை வருமென உழவன்
கொண்ட நம்பிக்கை! 

மாற்றம் வேண்டி ஓட்டு போடும் 
மக்கள் கொண்ட நம்பிக்கை! 

மலர் மீது தேனீ வண்டு
கொண்ட நம்பிக்கை!

வாழ்வை நம்பி நடை போடும் 
முடவன் கொண்ட நம்பிக்கை! 

மனதில் உண்டு எதையும் 
செய்ய என்ற உன் நம்பிக்கை!

மகன் மகள் மீது பெற்றோர்
கொண்ட அதீத நம்பிக்கை! 

இறுதி வரை  வாழ்வோமென 
மனங்கள் சேரும் நம்பிக்கை! 

தடுமாறுகையில் கைகொடுக்கும் 
நட்பின் மீது நம்பிக்கை! 

இயலாத போது நம்பிக்கை என நம்பும்
இறைவன் மீது நீ கொண்ட நம்பிக்கை!

அற்புதங்கள் செய்து விடும்
முயற்சியின் மீது நம்பிக்கை!

உறவுகளை உயர்ந்ததாக்கும் 
மனிதர் மேல் நீ கொண்ட நம்பிக்கை!! 

நிலையில்லா உலகத்தில் 
நிலையென எந்நாளும் எப்பொழுதும்
துணை நிற்கும் நம்பிக்கை!! 

நம்புங்க உங்கள நீங்க
நம்புங்க நன்மையே வரும் நம்புங்க!!


______________________
'ரித்திர கதாநாயகியே

சா'தனை செல்வமே

சி'த்திரை மகளே😍

சீ'மை மொழிகளை ஆள்பவளே

சு'ந்தரத் தமிழ்மகளே

சூ'ரியனாய் உலகெங்கும் ஜொலிப்பவளே

செ'ந்தமிழாய் நாவெங்கும் இனிப்பவளே

சே'ய்யாய் மடியில் குதூகலிப்பவளே

சை'கையால் மனங்களை அசத்துவாய்

சொ'டக்கு போட்டும் சொல்வாய்

சோ'றும் சேறும் என்னால் என்று!

சௌ'பாக்கியமும் அடையாளமும் என்னால் என்று!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 💐💐💐


_______________________________
வைகாசி நிலவென
ஆனி' காற்றே
ஆடி வந்ததேரே..!

ஆவணி'ப் பொன்னே
புரட்டாசி'த் தேனே
ஐப்பசி'யின் பொழுதே..!

கார்த்திகை ஒளிர
மார்கழி குளிர
தை'தையென பிறந்தவளே..!

மாசி'ல்லா மலரே
பங்குனி' தளிரே..!

சித்திரை' மகளே..!

இப்பார் சிறக்க வரம் தாயேன்..!!

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் 💐💐💐



கிறுக்கல்கள் 8.8

மூடநம்பிக்கையை
மூட்டைக்கட்டு

முட்டுக்கட்டைகளை
முடித்துவிடு

தடைகளை
தகர்த்தெறி

விதியைகொல்
மதியைகொள்

அறிவை
விரிவாக்கு

தாய்த்தமிழை
தலைவணங்கு

சோதனைகளை
சாதனையாக்கு

விலாசத்தை
விசாலாமாக்கு

உலகத்தை
உன்கையில்அடக்கு

உழைப்பால்
உயர்வுகொள்

பெற்றோர்க்கு
பெருமைசேர்



கிறுக்கல்கள் 8.7

மகள் பற்றி பாடல்
++++++++++++++++++

பல்லவி
++++++++

உன்னாலே மகளே உலகம் புதிதாய் ஆனதே
தன்னாலே நிகழ்வது யாவும் தலைகீழ் ஆகுதே
தந்தை என அழைப்பாய் தாவிடும் மனசு
விந்தை ஆக செய்வாய் குறைந்திடும் வயசு
மகளே என் மகளே அழகின் மகளே!
துகளே நீ துகளே நிலவின் துகளே!

சரணம்
+++++++++

உன் விரல் பிடித்து நடக்கையில்
நானும் குழந்தை ஆகிறேன் தவழ்கிறேன்.
உன் மொழி நானும் பேசுகையில்
பேசும் மொழி மறக்கிறேன் மகிழ்கிறேன்.
நீ சிரிக்கையில் கவலைகள் போகும் தூரம் தூரம்
நீ அழைக்கையில் வாழும்நிலை ஆகும் வரம் வரம்
மகளே என் மகளே அழகின் மகளே!
துகளே நீ துகளே நிலவின் துகளே!

சரணம்
+++++++++

உன் அழுகல் போக பாடுகையில்
நானும் அழுந்தே அசைத்தேன் இசைந்தேன்.
உன் அழகு முகம் நினைக்கையில்
நாளும் புகழ்ந்தே இழைந்தேன் திரிந்தேன்.
நீ முழிக்கையில் விடியல்கள் பார்க்கும் முகம் முகம்
நீ பேசுகையில் இதயங்கள் சேர்க்கும் அகம் அகம்
மகளே என் மகளே அழகின் மகளே!
துகளே நீ துகளே நிலவின் துகளே!



கிறுக்கல்கள் 8.9

எத்தனை
கோயில்கள் தெய்வங்கள்
மந்திரங்கள் வேள்விகள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக பேய்களால்..

எத்தனை
சட்டங்கள் நீதிமன்றங்கள்
தீர்ப்புகள் தண்டனைகள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக திருடர்களால்..

எத்தனை
ஆயுதங்கள் படைகள்
போர்க்கப்பல் விமானங்கள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக தீவிரவாதிகளால்..

எத்தனை
பாடங்கள் படிப்புகள்
உரைகள் அறிவுரைகள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக முட்டாள்களால்..

எத்தனை
பதவிகள் பகட்டுகள்
அரசியல்கள் அறிவிப்புகள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக பச்சோந்திகளால்..

எத்தனை
பாசங்கள் நேசங்கள்
உணர்வுகள் உறவுகள்
இருந்தென்ன பயன்?
இத்தகை காமுக பிண்டங்களால்..

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென கருதுவர்

காமுகா உனக்கு
அம்மா என்ன அக்காள் என்ன
தமக்கை என்ன மகள் என்ன
அத்தை என்ன ஆயாள் என்ன
எல்லாம் ஒன்றுதானோ?

காமுகனே உறுப்பில்
ஆண் என்ற கர்வம்
கொண்டு அடக்கியாளத்
முடியாத நீயும் ஆணோ?
உன் அருவருப்பு செயலால்
உன்னுறுப்பு அறுபட
வேண்டும் கற்பழிக்க
நினைத்தால்😡



கிறுக்கல்கள் 9.0

எங்கு சென்றாலும்
எதை செய்தாலும்
இதன் கையைப் பிடித்து 
அழைத்துச் செல்.. 
உன் கை விடாது
நீ பிடித்த நம்பிக்கை..! 
அதை தளர விடாமல் காப்பது
நம் கையில்தான் இருக்கிறது ..! 
நம்பி கை பிடிங்க.. 
நம்மை காக்கும் நம்பிக்கை!👍



கிறுக்கல்கள் 9.1

அடுத்த நொடி யாதென
அறியாத அறிவுள்ள நாம்

விடியல் நமக்கென
நம்பிக்கை நாளென
துணிவே துணையென
நினைத்தது முடியுமென
முடியாததும் செய்வேமென

நகர்வோம் வெல்வோம்!!👍😍



கிறுக்கல்கள் 9.2

நாமங்கள் மாறலாம்!
நூல்கள் மாறலாம்!
நிலைகள் மாறலாம்!

உருவங்கள் மாறலாம்!
உணர்வுகள் மாறலாம்!
உள்ளங்கள் மாறலாம்!

வழிபாடு மாறலாம்!
வழிமுறை மாறலாம்! 
வணங்குவோர் மாறலாம்!

ஆனால் நம்பிக்கை நம்
அனைவருக்கும் ஒன்றே!!



கிறுக்கல்கள் 9.3

பல தியாகிகளும்
ஞானிகளும் பெரியவர்களும்

மது வேண்டாம் என்றார்கள்
மதம் வேண்டாம் என்றார்கள்
பகட்டு வேண்டாம் என்றார்கள்
பகை வேண்டாம் என்றார்கள்
இலஞ்சம் வேண்டாம் என்றார்கள்
வன்முறை வேண்டாம் என்றார்கள்

மாதுவை மதி என்றார்கள்
இருப்பதை பகிர் என்றார்கள்
பக்குவமாய் வாழ் என்றார்கள்
அஹிம்சை நாடு என்றார்கள்
மக்களாட்சி செய் என்றார்கள்

அவர்கள் வேண்டாம் என்றதை 
எல்லாம் வேண்டுமென சேர்த்துவிட்டு 
வேண்டும் என்றதை வேண்டாம் 
என ஒதுக்கி தள்ளிவிட்டு 

அரசியல் செய்து
கொண்டிருக்கிறோம் அர்த்தமில்லாமல்🤔



கிறுக்கல்கள் 9.4

என்னடா இது வாழ்க்கைனு 
சலித்து அலுத்துகொண்டால்

சுவாசமும் சுமையாகும்
கண் சிமிட்டல் கடினமாகும்
நடையும் தடுமாறும்
இன்னும் எளிமையா சொன்னா
இளைஞன் ஆனாலும் இயலாதவனாகிறாய் 

இனிமேல்தான் வாழ்க்கை
உள்ளதென்று எண்ணம்
கொண்டால் நீ முதுமையிலும்
இளைஞனாகி விடுவாய்.



கிறுக்கல்கள் 9.5

சில நிகழ்வுகளால்

சில காரணங்களால்

சில சம்பவங்களால்

உங்களை

சில நிறுவனங்கள்

நிராகரிக்க நேரிடலாம்.

நிராகரிப்புகளை நிராகரி

உனது அறிவால்

உழைப்பு தன்னம்பிக்கையால்

நீ தொடும் உச்சம் கண்டு

நிராகரித்தவர்கள் வியக்கும்படி

வருங்காலத்தில் செய்துவிடு

உலகமே உன்னை

அங்கிகரிக்கும்💐👍😎



கிறுக்கல்கள் 9.6

நவீன திருக்குறள்
அதிகாரம் - துரோகம்
*************************

1. சிறியதோ பெரியதோ செய்யும் துரோகம்
ஒருவரை அளவில்லா காயப்படுத்தும்.

2. உள்ளம் உள்ளில் மறைத்து சிரித்து
உதடு வெளியே பேசாதே.

3. சிரிக்க சிரிக்க தேன்வழியும் குழி
பறிக்க உயிர் வலிக்கும்.

4. முன்பின் யோசித்துப் பழகு இல்லையென்றால்
முன்பின் யோசிக்காமல் புறம்குத்துவான்.

5. எதிரியும் நண்பன் ஆகி விடலாம்
துரோகி என்றும் துரோகிதான்.

6. அம்பும் கழுத்தறுக்கும் ஆறும் ஆறாதே
அன்பால் கழுத்து அறுத்தல்.

7. உன்னுடன் இருப்பான் பின் சிரிப்பான்
கெடுப்பான் துரோகம் இழைப்பான்.

8. வெல்ல முயல்வான் எதிரி ஆரோக்கியம்
விழ்த்த துரோகம் நினைப்பான்.

9. கோள் மூட்டுவது துரோகம் இறுதிவரை
தோள் கொடுப்பது சிநேகம்.

10. துரோகமழித்து துரோகமெண்ணாத தூய்மை உள்ளத்தோடு
வாழும் மனிதனே உயர்ந்தவன்.



கிறுக்கல்கள் 9.7

நவீன திருக்குறள்
அதிகாரம் - உணவு சி(ச)ந்தை
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

1. சுவைநீர் இளநீர் நம்பானம் இருக்க 
எதற்கு நஞ்சுநீர் குளிர்பானம்.

2. நாஉற உடம்பும் வயிறும் உதும்
தவிர் எண்ணெயில் உறியதை.

3. பேக்கிரிக்கு போறவன் பேக்கு அதவிட
கேஎஃப்சிக்கு போனவன் புறம்போக்கு.

4. பரோட்டாவுக்கு சொல்டாட்டா இல்லாட்டா மக்கள்தொகையில்
தொலையும் உன் பயோடேட்டா.

5. உலகில் உண்டோ இட்லிக்கு ஈடுஇணை
உணர்வாரோ தமிழர் இதை.

6. நுங்கு கூழ்கம்பு மோர் உடம்பில்சேர்
ஆயுள் சேரும் பார்.

7. பன்னாட்டு உணவாய் போய் விலைபோய்
இலவசமாய் வாங்குவாய் நோய்.

8. பிரியம்வை தமிழ்  பாரம்பரியம் மீது
பிரியாது உயிரும் உடலும்.

9. இருக்கு நம்ம பழையசோறு கஞ்சி
இதற்கு ஈடுஇணை ஏது.

10. ருசிக்கு உணவு தவறு தவறேல்
பசிக்கு உணவு என்பதில்.



கிறுக்கல்கள் 9.9

தாய் தந்தையைச் சுற்றி 
கண்டான் உலகத்தை 
ஆனைமுகத்தான். 

சிலுவையில் அறையப்பட்டு 
முக்தி அடைந்தான் 
இயேசு. 

போதி மரத்தடியில் 
ஞானத்தை அறிந்தான் 
புத்தன். 

ஈற்றடியில் உலகளாவிய 
வாழ்வியல் முறைகளை 
எழுதினான் வள்ளுவன். 

சோதனை யாவருக்குமே 
எடுத்தாளும் விதமே 
சாதனை. 


கிறுக்கல்கள் 9.8

தினமும் மே தின'மே
போற்றும் மன'மே
தினம் வாழ்த்து'மே

தொழிலை தொழுவோ'மே
தொழிலாளி நம் வர'மே
தொழிலாளியை மதிப்போ'மே
உண்மையாய் உழைப்போ'மே
இலக்கை அடைவோ'மே

வாழ்க்கையில் உயர்வோ'மே

நாடும் முன்னேறு'மே

மே தின வாழ்த்துகள் 🙏


கிறுக்கல்கள் 9.9

பூமி உழ
சாமி தொழ
உழைப்பாளி தேவை!

பட்டறை முதல்
பட்டம் வரை
உழைப்பாளி தேவை!

விதைகள் தூவ
விண்கலம் காண
உழைப்பாளி தேவை!

பாதாளம் துளைக்க
பதவிகள் வகிக்க
உழைப்பாளி தேவை!

கருவறை தொடங்கி
கல்லறை முடிய
உழைப்பாளி தேவை!

தேவை அவர்களின்
ஈடில்லா சேவை

வாழ்க தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் தின வாழ்த்துகள் 💪🏻


கிறுக்கல்கள் 10.0

நவீன திருக்குறள்
அதிகாரம் - நாட்டுநடப்பு
###################

1. குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றான் புரிதலில்
தவறினான் சன்னிதியில் சல்லாபம்.

2. விலை ஏற ஏற ஏறியது விலைமட்டுமல்ல
இரத்தக் கொதிப்பும்தான்
பெட்ரோலால்.

3. வளங்களை சுரண்ட வந்தது திட்டம்
பெயர் கிளின் இந்தியா.

4. அவசரம் வேகம் நொடியில் விபத்து 
வடுவானது வாழ்நாள் முழுதும்.

5. நடக்காததும்  நடக்கும் நீ நடந்து
கொள்ளும் வகையில் நடந்தால்.

6. தன் முகம் காட்ட பிறர்
பின் முதுகு குத்துகிறான்.

7. பாதுகாப்பு தேடிப்போனால் தேவைப்படுகிறது
பாதுகாப்பு 
காவல் துறை அலுவலர்களுக்கு.

8. ஒருதலை காதலால் அவள்தலை எடுக்க
துணிந்தான் அந்த தறுதலை.

9. பணம் பத்தும் செய்யும் பதினொன்றாக
படிப்பையும் பெற செய்யும்.

10. அந்தகட்சி இந்தகட்சி எந்தகட்சிசொந்தகட்சி
வந்தாலும் இல்லைங்க மனசாட்சி.
WhatsApp Chat with கவிதை.txt
Displaying WhatsApp Chat with கவிதை.txt.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...