Tuesday, October 30, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - எதிரும் புதிரும்

நவீன திருக்குறள்
அதிகாரம் - எதிரும் புதிரும்
*************************************
1. பணக்காரன் ஆவது எப்படி என்கின்ற
புத்தகம் விற்கிறான் ஏழைச்சிறுவன்.

2. ஒல்லியாய்தான் இருக்கிறது பெயர் என்னவோ
அதற்கு வைத்திருக்கிறார்கள் குண்டூசினு.

3. நேரமே சரியில்லையென்று அலுத்துக்கிறார் கடைக்காரர்
செய்வதோ கடிகார வியாபாரம்.

4. வேலை கிடைத்தது வேலை காலியில்லை
என்று போர்டு எழுத.

5. மதுஒழி என்றார் இயலாமையால் சிரிக்கிறார்
மதுக்கடை நோட்டுகளில் மகாத்மா.

6. மதவாதத்தை ஒழிக்க வேண்டும் தெருமுனையில்
பிரச்சாரம் செய்கிறது சாதிக்கட்சி.

7. பிறரின் எதிர்காலம் காட்டும் கிளியின்
எதிர்காலம் கூண்டுக்குள் கிடப்பதே.

8. மாடிமாடியாய் கட்டி உயர்ந்தாலும் குடிசையை
பார்க்க தலைகுனியத்தான் வேண்டும்.

9. கம்பியை நிமிர்த்த சுத்தியால் அடிக்கிறான்
தொழிலாளி உடம்பை வளைத்து.

10. ஓடிக்கொண்டிருந்தவன் இறந்தான் அவன் கைக்கடிகாரம்
ஓடிக்கொண்டிருக்கிறது டிக் டிக்.


Monday, October 29, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - என்னவள்

நவீன திருக்குறள்
அதிகாரம் - என்னவள்
****************************

1. தொட்டாலும் விரிகிறது தொட்டாற் சிணுங்கி
காரணம் தொடுவது என்னவள்.

2. மகிழ்ச்சியில் குதித்து ஓடிவரும் அலைகள்
கடற்கரையில் நிற்கிறாள் என்னவள்.

3. அணிகலனா அறிவிப்பு மணியா காட்டிக்கொடுக்கும்
என்னவள் கால் கொலுசு.

4. காதலில்  கண்ணாமூச்சு தேடித்திரிகிறேன் எனக்குள்ளேயே
ஒளிந்து சிரிக்கிறாள் என்னவள். 

5. அழகான எதையும் கண்ணில் காட்டாதீர்கள் நினைவில்
சட்டென வருகிறாள் என்னவள்.

6. பூவிலிருந்து இதழ்களல்ல இதழ்களிலிருந்து உதிரும்
பூக்கள் என்னவளின் புன்னகை.

7. கவிதை எழுதினேன் என்னவளின் கண்ணத்தில்
அழகான ஆழமானதொரு முத்தம்.

8. கண்ணாடியில் அலங்காரம் செய்கிறாள் என்னவள்
அழகுற பொறாமையில் கண்ணாடி.

9. விர்ரென்று பாய்கிறது நரம்புகளில் மின்சாரம்
என்னவளே கண்களை மூடடி.

10. இரவில் நிலவிற்கு குழப்பம் போட்டிக்கு 
மொட்டை மாடியில் என்னவள்.

Friday, October 26, 2018

கடவுள்

மனதை அறிந்து கொள்ளடா அதற்கு கடந்து உள்ளே செல்லடா 
உன்னை புரிந்து கொள்ளடா அதன் பெயரே கடவுள் தானடா
உன்னை நீ அறிவதால் இறைவனே மனிதனாகிறான்.
பிறரை நீ அறிவதால் மனிதனே இறைவனாகிறான்.

சரணம்
*********
இரு கைகளை உயர்த்தி கும்பிடுவதை விட
இரு கைகள் கொண்டு உழைத்திடு
பல மதங்களை உயர்த்தி கொண்டாடுவதை விட
ஒரு மனிதம் நமக்கென வாழ்ந்திடு
அன்பால் வரும் பிறரை அணைத்திடு
உன்னிடம் கேட்டு வருவோர்க்கு அளித்திடு
இந்த பூமியில் உன்னை படைத்ததன் பலனை செய்திடு.
அன்பே கடவுள் என்பதை உலகிற்கு உணர்த்திடு.

சரணம்
**********
நமக்கு தெரியாத உருவத்தை வணங்குவதை விட
நமக்கு  தெரிந்த தாய்தந்தையை வணங்கிடு.
நாம் கடவுள் கடவுள் என்பதை விட
கட உள்ளே மனதின்உள்ளே என்றிடு.
பிறருக்கு செய்யும் உதவியில் தெரிகிறான்.
பிறரிடம் சிரிக்கும் சிரிப்பில் இருக்கிறான்.
இந்த பூமியில் அனைத்திற்கும் கடவுள் கடவுள் என்றிருந்தால்
மனிதன் மனிதன் என்பது எதற்கென உணர்த்திடு.

Monday, October 22, 2018

முகமூ(மு)டி


அஜித்


பேதம்

வானமும் மேகமும் மழையும் பேதம் பாக்கல
நிலமும் மரமும் காற்றும் பேதம் பாக்கல
நீரும் நதியும் கடலும் பேதம் பாக்கல
நெருப்பும் தீயும் சுடரும்  பேதம் பாக்கல
காடும் மலையும் இயற்கையும்  பேதம் பாக்கல
பிறகு மனிதா நம்மில் ஏனடா பேதம் பாக்குற?

சரணம்
**********
உருவங்கள் வேறானாலும் வந்தவழி போகும்வழி ஒண்ணுதானே
உள்ளங்கள் மாறினாலும் உள்வழி செல்லும்வழி ஒண்ணுதானே
நடை உடை பேச்சு எல்லாம் நாமே கண்டது
நீதி நியாயம் தண்டனை எல்லாம் நாமே வகுத்தது
நிலம் நதி நீர் எல்லாம் நாமே பிரிச்சது
பணம் பட்டம் பதவி எல்லாம் நாமே சொன்னது
கொஞ்சம் யோசிச்சு பாரடா இயற்கை இதுபோல் யோசிச்சா பூமியில் வாழ்வதே ஏதடா
நீயென்ன நானென்ன இங்கடா இயற்கை முன்னே யாவரும் ஒன்றென வாழ்வதே சிறப்பட

சரணம்
**********
மேலோர் கீழலோரில்லை ஒருவருக்கு ஒருவர் தேவைதானே
ஏற்றத்தாழ்வு தேவையில்லை உடம்பின் குருதி சாட்சிதானே
இயற்கையை பிரிச்சு எங்கும் எதற்கும் சண்டை போட்டான்
ஆணும் பெண்ணும் சமமென ஏற்க அரசியல் செஞ்சான் 
மனிதம் மறந்து மனிதனை ஏனோ கொன்று குவிச்சான்
இயற்கை அழிவின் போதே உணர்ந்து கைய கோர்கிறான்
இன்னும் வேஷங்கள் என்னடா மனிதனை மனிதனாய் ஏற்றிட நம்மில் பேதங்கள் நீக்கடா
வாழ்ந்திட இயற்கை வேணுமடா மனிதன் மண்ணில் நிலைத்திட இயற்கையை காப்பது கடமையடா

Saturday, October 20, 2018

காதல் பாடல் #20

சிலநேரப் பார்வையில் அரவணைப்பாய் கதகதப்பாய் 
சிலநேரப் பார்வையில் குறுகுறுப்பாய் கண்ணடிப்பாய் 
சிலநேரப் பார்வையில் என்னை மயக்கி மூழ்கடித்தாய்.
சிலநேரப் பார்வையில் என்னை அசத்தி கிறங்கடித்தாய்.
பலநேரம் பாடாய்படுத்தும் அந்த பார்வைக்குள் என்னை எங்கோ கடத்தினாய்.

சரணம்
**********
சில நேரப் பார்வையிலே பல நேரம் புத்தம் புதிதாய் பிறக்க வைத்தாய்.
சில நொடி வேளையிலே பல கணம் காதல் காதலாய் பூக்க வைத்தாய்.
சட்டென்ற பார்வையில் என்னை
பட்டென்று வீழ்த்தி வாழ்த்தி எழுந்திட வைக்கிறாய்.
காதல் காதல் என்றழ வைக்கிறாய்.
உனது பார்வை என்ன அரிவாளா கூர்வாளா
வெட்ட வெட்ட காதல் என்னுள் முளைக்குதடி.


சரணம்
**********
விழி வெண் படலத்தின் நடு கருவிழி இருக்கிறது என்பதை பொய்கச் செய்கிறாய்.
அது உன் இரண்டு காந்த கண் உருண்டைகளென வைத்துக் கொண்டு இழுக்கிறாய்.
பார்கின்ற பொழுதில் என்னை
விர்றென்று இழுத்து நெஞ்சில் சர்றென நுழைக்கிறாய்.
காதல் வம்புக்கு காதலாக அழைக்கின்றாய்.
உனது பார்வை என்ன ஈட்டியா கத்தியா
காதல் கலை கொண்டு என்னை செதுக்குதடி.

Friday, October 19, 2018

ஆயுதம் செய்வோம்..


திமிர் பிடித்த தலைக்கனம்.
கெடுதல் நினைக்கும் மூளை.
காமம் தொடுக்கும் கண்கள்.
பிறரிடம் ஒட்டு கேட்கும் காது.
உழைப்பில்லாமல் சுவாசிக்கும் மூக்கு.
கொடுங் சொற்கள் உதிர்க்கும் நாக்கு.
கண்டதை கண்டபடி பேசும் வாய்.
எதற்கும் மனம் வராத நெஞ்சம்.
உதவ முன்வராத கரங்கள்.
கையூட்டு வாங்கும் கைகள்.
காட்டி கொடுக்கும் விரல்.
அடுத்தவர் உணவை விழுங்கும் வயிறு.
வளைந்து நெளிந்து கொடுக்கும் இடுப்பு.
வழி மாறி நடக்கும் கால்கள்.
நம்ப வைத்து செய்யும் துரோகம்.
தன்னையே தகர்க்கும் கோபம்.
அழிக்க துடிக்கும் தீய எண்ணம்.

இப்படி கொடும் ஆயுதங்கள் சுமந்த 
உலகின் மிகப்பெரிய ஆயுதம்
மனிதனே,
ஆக்கமும் அழித்தலும் அவனிடமே.
அழிப்பதை அழித்து 
நல் ஆயுதம் செய்வோம்..

Tuesday, October 16, 2018

கூந்தல்


காதல்


கம்மலும் மல்லியும்


நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #3

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #3
++++++++++++++++++++++++++++++++
1.  புரியாத வார்த்தை வாசித்தும் புரியாத 
வாழ்க்கை வாழ்ந்தும் பயனில்லை.

2. அழுவது கோழையாகாதே விழுவது தோல்வியாகாதே
பிறரை நம்புவது நன்மையாகாதே.

3. அன்பாய் இருப்பவரிடம் அன்பை மறைக்காதே
மறந்தும் இருப்பதுபோல் நடிக்காதே.

4. வாழ்க்கையில் ஓடுகின்றான் இல்லாதவனும் இருப்பவனும்
வயிற்றை நிறைக்க குறைக்க.

5. வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்
எல்லைக்குள் வாழ்க்கையை அமைத்துவிடாதே.

6. கனவுகளில் மூழ்கி வாழ்க்கையை வாழாதே
மற்றவர்களின் கனவுகளில் வாழ்.

7. அகிலத்தை ஆளும் ஆராய்ச்சியில் நீளும்
அன்பெனும் தாரக மந்திரம்.

8. உன்னை நேசிக்க வாழ்க்கையை நேசி
வாழ்க்கையும் உன்னை நேசிக்கும்.

9. வாழ்க்கை என்றால்? யோசிக்கிறேன் அனுபவங்கள்
வாரி வழங்குகிறது அர்த்தங்களை..!

10. புன்னகை சிந்த எதற்க்கும் தயங்காதே
புத்தொளி பிறக்கும் மறவாதே.

Monday, October 15, 2018

துணிந்திடு

துணிந்திடு எதிர்த்துநில்
வருவதை ஒருகை பார்த்திடு
நினைத்திடு உடன்நடந்திடு
முடியுமென்று உடனே செயல்படு
எதனையும் எதிர்கொண்டு
தோல்வியை மிதித்து ஜெயித்திடு

சரணம்
***********
அன்பை காட்ட ஆகாயம் அளக்க துணிந்திடு
இம்சை அழிக்க ஈகை அளிக்க துணிந்திடு
உண்மை பேச ஊக்கம் ஏற்ற துணிந்திடு
எழுச்சி பெற ஏழ்மை ஒழிக்க துணிந்திடு
ஐயம் தீர்க்க ஒற்றுமை காக்க துணிந்திடு
ஓங்கும் கைகள் ஔவை போற்றி துணிந்திடு
அஃது துணிவையே தாரக மந்திரமாகிடு உனது துணிவையே தாரக மந்திரமாகிடு.
சரணம்
***********
அகிம்சை செய்ய ஆணவம் கொய்ய துணிந்திடு
இருளை விலக்க ஈடுபாடு காட்ட துணிந்திடு
உழைப்பை மதிக்க ஊரே துதிக்க துணிந்திடு
எண்ணம் சிறக்க ஏனென்று எதிர்க்க துணிந்திடு
ஐம்புலன் அடக்க ஒழுக்கம் காக்க துணிந்திடு
ஒளிகள் ஏற்றிட ஔவியம் தடுத்திட துணிந்திடு
அஃது துணிவையே தாரக மந்திரமாகிடு உனது துணிவையே தாரக மந்திரமாகிடு.

காதல் பாடல் # 19

காதல் சொல்ல வந்தேன்
கண்கள் பார்த்து நின்றேன்
சிலையாகி போனேன்
அழகு சிலை உன்னை பார்க்க
சிலையாகி போனேன்
இருந்தும் மீண்டும் மீண்டும்

சரணம்
**********
உந்தன் கண்களை பார்க்க மீன்கள் இருபுறம் ஓடுதடி
எந்தன் நெஞ்சினில் முட்கள் கோர்க்க இதயம் தவிக்குதடி
மின்சாரமாய் உடலெங்கும் பாய்ந்திட காதல் காதலென்று துடிக்குதடி
மின்னலாய் உயிரெங்கும் சென்றிட காதல் காதலென்று அடிக்குதடி
சொல்வேனோ சொல்லாமல் போவேனோ
சொல்லாமல் கண்களுக்குள் வீழ்வேனோ
இருந்தும் மீண்டும் மீண்டும்

சரணம்
**********
உந்தன் கண்ணின் இமைகள் மூடிதிறந்திட மதுவே தோற்றதடி  
உன்னை கண்டதும் தேகம் பூவாய்பறந்திட காற்றினில் மிதக்குமடி   
பார்வையாய் பரவியெங்கும் நின்றிட சுவாச மூச்சென்று ஆனதடி
வண்ணத்துபூச்சியாய் வானிலெங்கும் படபடக்க கண்கள் உனதுகண்களே காரணமடி
சொல்வேனோ சொல்லாமல் போவேனோ
சொல்லாமல் கண்களுக்குள் வீழ்வேனோ
இருந்தும் மீண்டும் மீண்டும்

Sunday, October 14, 2018

கொலுசு சப்தம்

சிந்தையில் சிதறவைக்கும் அந்த சப்தம்
விந்தையில் வியக்கவைக்கும் அந்த சப்தம்
சந்தையில் சரிவை காணாத அந்த சப்தம்
மந்தையில் அறிமுகம் பேணாத அந்த சப்தம்
அன்பே நீ நடத்தும் கால் கொலுசு தானடி அந்த சப்தம்

சரணம்
**********
சிலிர்தே பார்க்க வைக்கும் அந்த சப்தம்
மௌனம் காக்க பேசிடும் அந்த சப்தம் 
ஓடிவரக் கேட்கையிலே உருட்டல் சப்தம்
ஓடாமல் நிற்க்கையிலே உறங்கும் சப்தம் 
கொஞ்சும் போது மிஞ்சுதடி அந்த சப்தம்
மஞ்சத்தில் மீட்ட இசைக்குதடி அந்த சப்தம்
அன்பே நீ நடத்தும் கால் கொலுசு தானடி அந்த சப்தம்


சரணம்
**********
பூபறிக்க போகையிலே வரும் ஒத்த சப்தம்
முத்தமிட்டு போகையிலே வரும் மொத்த சப்தம் 
ஏழுஸ்வரமும் வியக்கும்  எட்டாஸ்வர சப்தம் 
எதனையும் மயக்கும் எழில்மிகு சப்தம் 
ஒய்யார நடையில் கொல்லுதடி அந்த சப்தம்
ஒசந்து பார்கையில் மெல்லுதடி அந்த சப்தம் 
அன்பே நீ நடத்தும் கால் கொலுசு தானடி அந்த சப்தம்

Wednesday, October 10, 2018

சிரிக்க சிரிக்க பேசுடா



கோடி கோடியாய் பணம் என்னடா
சிரிக்க மறந்தவன் பிணம் தானடா
எதை கண்டு நீ சிரிக்க மறந்தடா
சிரிக்க தெரிந்தவன் மனிதன் தானடா
உண்மையை உணர்ந்து  கொள்ளடா 
சிரிப்பே வாழ்வின் மருந்தடா

சரணம்
**********
சிரிக்க சிரிக்க பேசுடா வரும் சிக்கல் தீரும் பாரடா
சிரிக்க சிரிக்க பழகுடா வரும் உறவுகள் தரும் அழகுடா
ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் சிரிச்சா மனதோ லேசாகும்.
துயரம் துரோகங்கள் தந்தாலும் சிரிச்சா எல்லாம் தூசாகும்.
வருவதும் பிரிவதும் பிறப்பதும் இறப்பதும் இயற்கையடா 
இன்பமும் துன்பமும் சோகமும் கவலையும்  செயற்கையடா
இதை புரிந்த மனம் சிரித்தே விரிக்கும் றெக்கையடா

சரணம்
**********
நோக்கம் இன்றி சிரிடா வரும் நோய்கள் ஓடும் பாருடா.
வலிகள் போக சிரிடா புதிய வழிகள் வரும் பாருடா.
சிரிக்க தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்றே பெயராகும்.
சிரிக்க வைக்கும் மனிதனுக்கு புனிதன் என்பதே சிறப்பாகும்.
பணமும் பதவியும் ஆசையும் ஆஸ்தியும் வந்துபோகும்டா.
இதையே பெரிதென நினைக்கும் மனமோ வெந்துசாகும்டா.
இதனை புரிந்து எதற்கும் சிரித்து வாழ்ந்தால் இன்பம்தானடா.

Thursday, October 4, 2018

காதல் பாடல் # 18

அன்பே என்னுள் உலவு
நீதானே என்மனக் களவு
ஆசைக்கு இல்லையே அளவு 
நீங்குமே நம்முள் பிளவு
எண்ணிலடங்கா உன் அழகை 
வார்த்தையில் வரைய ஆசையோ ஆசை.

சரணம்
**********

கூந்தலோடு விளையாட கைவிரலாக ஆசை.
இதழோடு வழிந்தோட தேனாக ஆசை.
விழியோடு வளைந்தாட புருவமாக ஆசை. 
முத்துப்பல் சிரிப்பில் முத்துக்களாக ஆசை.
இடையோடு இசைந்தாட குழலாக ஆசை.
உன்னோடு கலந்தே நான் நீயாக ஆசை ஆசை.

சரணம்
**********
மார்போடு கோலமிடும் அணிகலனாக ஆசை.
மணிக்கட்டில் முத்தமிடும் கைவளையலாக ஆசை.
காதோடு கவிபாடும் கவிஞனாக ஆசை.
மேனி உறவாடும் நூலாடையாக ஆசை.
காலோடு இசையெழுப்பும் கால்கொலுசாக ஆசை.
உயிரோடு உயிராக நரம்பும் சதையாக ஆசை ஆசை.

Wednesday, October 3, 2018

காதல் பாடல் # 17



சொர்க்கம் நீயென கண்டேன்
சொக்கி சொக்கி போனேன்.
மார்க்கம் நீயென வந்தேன்
மயங்கி மயங்கி நின்றேன்.
உன்னிலே கண்டேன் நான் சொர்க்கம் அது என்னவென்று.
அத்தனையும் நான் சொல்ல எண்ணில் அது அடங்காது.

சரணம்
**********

நான் பார்க்க நீ முறைக்க அதுவல்லவோ சொர்க்கம்
நான் பேசிட நீ அதட்ட அதுவல்லவோ சொர்க்கம்
நான் கொஞ்ச நீ கொட்ட அதுவல்லவோ சொர்க்கம்
நான் கெஞ்ச நீ மிஞ்ச அதுவல்லவோ சொர்க்கம்
நான் ரசிக்க நீ சிரிக்க அதுவல்லவோ சொர்க்கம்.
நான் தரிசிக்க நீ சிக்க அதுவல்லவோ சொர்க்கம் 
கண்களில் கண்ணீர் வருமுன்னே அதை கைகளில் ஏந்திட சொர்க்கம்.
கடைசி வரையில் உன்னை எனது மார்பினில் தாங்கிட சொர்க்கம்.

சரணம்
**********

கனவில் கூட நீ வந்திட அதுவல்லவோ சொர்க்கம். 
உப்பு மூட்டை தூக்கி காலமும் சுமந்திட சொர்க்கம் 
கைகள் வீசிட அதை பற்றி நடந்திட சொர்க்கம்
பாத சுவடுகள் வழி பதிந்து நடந்திட சொர்க்கம் 
விடும் மூச்சு காற்றை நான் சுவாசி வாழ்ந்திட சொர்க்கம் 
வாழும் காலம் உன்னை நினைத்தே உருக சொர்க்கம்
உலகம் அழிந்தாலும் நமது காதல் வாழ்ந்திட செய்வது சொர்க்கம்.
நாம் அழிந்தாலும் நமது காதல் உலகம் வாழ்த்திட சொர்க்கம்.

கவிதைக்கே கவிதை


கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...