Saturday, September 29, 2018

விழித்தெழு மனிதா

போதும் போதும் மனிதா
பொறுத்தது போதும் மனிதா
மயக்கம் போதும் மனிதா
ஏமாந்தது போதும் மனிதா 
அடிமைகள் கொன்றே மனிதா
விழித்தெழு இன்றே புதிதா
எதிலும் நடப்பாய் தோதா
எதிர்காலம் காப்பாய் இனிதா


சரணம்
**********

உழுத காலம் மறந்து போச்சு 
தொழுதே காலம் வீணாப் போச்சு
ஊத்தி கொடுத்து யோசனை போச்சு 
போட்டு கொடுத்தே உள்ளதும் போச்சு
அரசியல் பேசி நேரம் போச்சு 
ஆன்ராய்டில் பேசியே கோரம் ஆச்சு
இலவசம் கொடுத்து புடுங்கலாச்சு 
காரணம் இங்கே பதுக்கலாச்சு
உரிமைகள் சொன்னா கைதாச்சு 
ஜனநாயகம் இங்கே  செத்தேபோச்சு
விட்டுக்கொடுத்தே இருப்பதெல்லாம் போச்சு 
விழித்து கொண்டா இனி வசந்தமாச்சு

சரணம்
**********

பட்டினி சாவுகள் அதிகமாச்சு
கொலை கொள்ளை பெருகி போச்சு
நீரும் நிலமும் பாழாபோச்சு 
நீதியும் நியாயமும் மாறிப் போச்சு
சிறுசுங்க வீதியில் உலவபயமாச்சு
கொடுமைகள் உலவிட அலங்கோலமாச்சு. 
சந்தையில் சரக்குகள் அரசாங்கமாச்சு 
சிந்தையில் சிகரெட்மது பதியலாச்சு
நடக்கும் அநியாயம் நியாமாச்சு
விட்டுக்கொடுத்தே இருப்பதெல்லாம் போச்சு 
விழித்து கொண்டா இனி வசந்தமாச்சு

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...