இதயங்கள் இடமாறினால் இயங்குவேன்
இல்லையென்றால் இல்லாமல் போவேன்.
உயிருக்கு உயிரானால் உருகுவேன்
உதறினாளென்றால் உடைந்து போவேன்.
அன்பே உன்னை பார்த்தது முதல் நானாக நானுமில்ல நீ இல்லாம நானுமில்ல.
சரணம்
*********
உன்னை பார்க்க பார்க்க அழகாகிறேன் அன்பே
உன்னை நினைக்க நினைக்க கனவானேன்.
உன்னை பற்றியே யோசிக்க யோசிக்க கவிஞனானேன்.
உன்னை பெயரை வாசிக்க வாசிக்க உலக காவியம் படைக்கிறேன்.
நான் என்னை மாத்திக்க மாத்திக்க நீயாக நானேனு தெரிகிறேன்.
அன்பே காதல் சொல்ல வாராயோ?!
சரணம்
**********
உன்னை துதிக்க துதிக்க பக்தனாகிறேன் அன்பே
உன்னை விதைக்க விதைக்க மரமாகிறேன்.
உன்னை நினைத்து குதிக்க குதிக்க மழலையாகிறேன்.
உன்னை பார்க்காது பதைக்க பதைக்க மனம் சிதறி போகிறேன்.
நான் என்னை சிதைக்க சிதைக்க மரித்தே நீயாக மாறுவேன்.
அன்பே காதல் சொல்ல வாராயோ?!
No comments:
Post a Comment