Monday, September 17, 2018

இரு

வளர்ந்தால் பனையாக இரு
உயர்ந்தால் தென்னையாக இரு
பறந்தால் பறவையாக இரு
விழுந்தால் விதையாக இரு
தேங்கினால் குளமாக இரு
பரவினால் ஒளியாக இரு
நிறைந்தால் காற்றாக இரு
வீசினால் தென்றலாக இரு
ஓடினால் நதியாக இரு
கொட்டினால் அருவியாக இரு
சிரித்தால் மனமாக இரு
உதவினால் மரமாக இரு
அழுதால் மேகமாக இரு
துணிந்தால் வானமாய் இரு
குனிந்தால் நெற்கதிராக இரு
நின்றால் சிலையாக இரு
நிமிர்ந்தால் மலையாக இரு
பொழிந்தால் மழையாக இரு
வாழ்ந்தால் வாழையாக இரு !

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...