கன்னம் சிவந்தவளே
கண்ணுக்கினியவளே
காட்சிகள் நிறைந்தவளே
கனவுகள் தருபவளே
கவிஞன் ஆக்குபவளே
கவிதை ஆனவளே
காதல் காதல் என்று எடுத்துரைத்தவளே.
காலம் நீயென கலந்து என்னில்நின்றவளே.
சரணம்
**********
சில்லென்று காற்றாய் சிரிப்பவளே
கொள்லென்று ஊற்றாய் கொடுத்தவளே
கொள்லென்று ஊற்றாய் கொடுத்தவளே
புல்லென்று பயிராய் வளர்ந்தவளே
நில்லென்று உயிராய் நின்றவளே
ஜில் ஜில்லென்று தேகம்தனில் ஓடுபவளே.
ஜல் ஜல்லென்று எண்ணம்தனில் ஆடுபவளே.
ஊக்கமானவளே ஊட்டமானவளே
உதிரமானவளே உயிரானவளே.
சரணம்
***********
இதயத்தில் ஈட்டியாய் இருப்பவளே.
உதயத்தில் சுட்டியாய் உதிப்பவளே.
சமயத்தில் வட்டியாய் இரட்டிப்பவளே.
இமயத்தில் கெட்டியாய் குடிபுகுந்தவளே.
இமயத்தில் கெட்டியாய் குடிபுகுந்தவளே.
விறு விறுவென்று நரம்புதனில் விருட்சமானளே.
குரு குருவென்று உதிரம்தனில் கலந்தவளே.
வாசமானவளே வசமானவளே
வாடிக்கையானவளே வாழ்க்கையானவளே.
No comments:
Post a Comment