Thursday, September 13, 2018

காதல் பாடல்#16

கன்னம் சிவந்தவளே 
கண்ணுக்கினியவளே
காட்சிகள் நிறைந்தவளே
கனவுகள் தருபவளே
கவிஞன் ஆக்குபவளே
கவிதை ஆனவளே
காதல் காதல் என்று எடுத்துரைத்தவளே.
காலம் நீயென கலந்து என்னில்நின்றவளே.

சரணம்
**********
சில்லென்று காற்றாய் சிரிப்பவளே 
கொள்லென்று ஊற்றாய்  கொடுத்தவளே 
புல்லென்று பயிராய் வளர்ந்தவளே
நில்லென்று உயிராய் நின்றவளே
ஜில் ஜில்லென்று தேகம்தனில் ஓடுபவளே.
ஜல் ஜல்லென்று எண்ணம்தனில் ஆடுபவளே.
ஊக்கமானவளே ஊட்டமானவளே
உதிரமானவளே உயிரானவளே.

சரணம்
***********
இதயத்தில் ஈட்டியாய் இருப்பவளே.
உதயத்தில் சுட்டியாய் உதிப்பவளே.
சமயத்தில் வட்டியாய் இரட்டிப்பவளே.
இமயத்தில் கெட்டியாய் குடிபுகுந்தவளே.
விறு விறுவென்று நரம்புதனில் விருட்சமானளே.
குரு குருவென்று உதிரம்தனில் கலந்தவளே.
வாசமானவளே வசமானவளே
வாடிக்கையானவளே வாழ்க்கையானவளே.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...