நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்க்கையின் புரிதல்
++++++++++++++++++++++++++++++++++
1. பாதிவழி விடாதவன் பாவவழி கெடாதவன்
இதன்வழி நடத்துபவன் நண்பன்.
2. தீயதோர் ஏதும் நெருங்காது உனக்கு
மூத்தோர் சொல்படி நடக்கையில்.
3. பொருளை திருடுபவன் மட்டும் திருடனல்ல
புலன்களை அடக்காதவனும் கூட.
4. தோல்வியுற காரணமானவர்களை மனதார நேசி
வெற்றியுற காரணமானர்கள் அவர்களே.
5. அடிமைத்தனம் முரட்டுத்தனம் ஆகாது அதனினும்
அசட்டுத்தனம் ஆகாது வாழ்விற்கு.
6. இரகசியமாக செய்த பாவம் உறுத்தும்
இறக்கும் வரை உறுத்தும்.
7. கடவுள் ஒப்புக்கொள்ளும் கல்லென்று மனிதா
ஒப்புக்கொள் பணமும் காகிதமென்று.
8. பணம் கொடுத்தும் வாங்க இயலாத
ஆபரணம் நம் குணம்.
9. தோல்வி என்பது ஒருவழி சாலையல்ல
வெற்றிக்கான எட்டுவழி சாலையாகும்.
10. என்னால் முடியுமென்பது நம்மீதுபோடும் அலங்காரம்
என்னால் மட்டுமென்பது அகங்காரம்.
No comments:
Post a Comment