வானம் இடிந்தால் என்ன
மேகம் உடைந்தால் என்ன
மின்னல் கிழித்தால் என்ன
மிதமாய் பொழிந்தால் என்ன
எண்ண எண்ண இதயம் நனையும் என்ன
மாயம் என்ன இதைவிட சொர்க்கம் என்ன
சரணம்
**********
புல்லில் நீ விழுவதால் நீயோ பனித்துளி
புவியில் நீ விழுவதால் நீயோ உயிர்த்துளி
மலையில் நீ விழுவதால் நீயோ நீர்வீழ்ச்சி
கடலில் நீ விழுவதால் நீயோ சமுத்திரம்
விழுந்து தேங்கி எழுந்து நடந்து ஓடோடி சேர்வதால் நீயோ நம்பிக்கை.
சரணம்
**********
கன்னத்தில் நீ விழுவதால் நீயோ கண்ணீர்
கழுத்தில் நீ விழுவதால் நீயோ குடிநீர்
உள்ளத்தில் நீ விழுவதால் நீயோ இரக்கம்
உழைப்பில் நீ விழுவதால் நீயோ வியர்வை
எங்கும் எதிலும் நம்மில் கலந்து ஒன்றாய் இருப்பதால் நீயோ ஜீவன்.
No comments:
Post a Comment