Tuesday, September 18, 2018

நீர்த்துளி

வானம் இடிந்தால் என்ன
மேகம் உடைந்தால் என்ன
மின்னல் கிழித்தால் என்ன
மிதமாய் பொழிந்தால் என்ன
எண்ண எண்ண இதயம் நனையும் என்ன
மாயம் என்ன இதைவிட சொர்க்கம் என்ன

சரணம்
**********
புல்லில் நீ விழுவதால் நீயோ பனித்துளி
புவியில் நீ விழுவதால் நீயோ உயிர்த்துளி
மலையில் நீ விழுவதால் நீயோ நீர்வீழ்ச்சி 
கடலில் நீ விழுவதால் நீயோ சமுத்திரம்
விழுந்து தேங்கி எழுந்து நடந்து ஓடோடி சேர்வதால் நீயோ நம்பிக்கை.

சரணம்
**********
கன்னத்தில் நீ விழுவதால் நீயோ கண்ணீர்
கழுத்தில் நீ விழுவதால் நீயோ குடிநீர் 
உள்ளத்தில் நீ விழுவதால் நீயோ இரக்கம்
உழைப்பில் நீ விழுவதால் நீயோ வியர்வை 
எங்கும் எதிலும் நம்மில் கலந்து ஒன்றாய் இருப்பதால் நீயோ ஜீவன்.

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...