Sunday, September 23, 2018

அழகோ அழகே



கொஞ்சும் தமிழழகே 
கெஞ்சும் மொழியழகே 
கொய்யா இதழழகே
கொய்யும் நீ தனியழகே 
கொடை கொடுக்கும் பேரழகே
கொள்ளை கொள்ளும் பெயரழகே

சரணம்
**********

கொல்லிமலை வியந்திடும் தலையழகே
கொக்குகள் கொத்திடும் கண்ணழகே
கொத்தமல்லி முகர்ந்திடும் பேச்சழகே
கொம்புத்தேன் வழிந்திடும் இதழழகே.
கொண்டை பூத்திடும் பூவழகே.
கொப்பரை காட்டிடும் நெஞ்சழகே.
கொடுவாளாய் வீசிடும் கையழகே.
கொடிமரம் நட்டு உலகம் போற்றும்  அழகோ உன்னழகே .

சரணம்
**********

கொடியிடை சறுக்கிடும் இடையழகே
கொசுவமும் மடிந்திடும் இடுப்பழகே.
கொத்தவரை காட்டிவிடும் விரலழகே.
கொக்கிக்கால் வரைந்திடும் பாதமழகே.
கொடுப்பினை நடந்திடும் நடையழகே.
கொலுசுகள் கொண்டாடும் சிரிப்பழகே
கொச்சிமஞ்சள் நிறைந்திடும் மேனியழகே.
கொடிமரம் நட்டு உலகம் போற்றும் அழகோ உன்னழகே .

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...