Saturday, September 22, 2018

கனவு பலிக்குமா! இல்லை பழிக்குமா?

பச்சை வண்ண போர்வையை பூமிக்கு போர்த்தினேன்
நீல நிற சேலையை எடுத்து வானுக்கு உடுத்தினேன்
விவ'சாய வண்ணங்கள் கொண்டு வானவில்லை தீட்டினேன்
காட்டருவியாக குதித்து விழுந்து ஓட கொண்டாடினேன்
பார்க்கும் இடங்களில் எங்கும் வயல்களை நிறுத்தினேன்
நெல்மணி கதிர்கள் குலுங்க எங்கும் விளையாடினேன்
நாற்று நடும் பாட்டோடு பாவையர்களை அமர்த்தினேன்
புல் சுமை கட்டை பூவையர்கள் சுமந்திட நடத்தினேன் 
மாடு ஆடு கோழி என அனைத்து உறவுகளிடமும் பேசினேன்.
ஏரில் கட்டிய காளைகளோடு காளையர்களை விரட்டினேன்
கவலைகளை மறந்து விவசாயம் செய்ய அறிவுறுத்தினேன்.
நீரில் தவளை வானில் குயில் பாடிட சொன்னேன்
தேன் குடிக்கும் வண்டுகளின் ரீங்காரமிட கெஞ்சினேன் 
சலசலக்கும் நீரோடையின் சங்கீதமிட பண்ணினேன்
தென்றல் காற்றின் சுகந்தம் நுகர்ந்து கொஞ்சினேன்
கண்ணீர் துளியை புல் ஏந்திட பனித்துளியாய் மாற்றினேன்.
மனிதர்கள் மனிதர்களாய் வலம் வர போற்றினேன்.
நாட்டின் முதுகெலும்பு நிமிர்த்தப்பட்டதாக உணர்த்தினேன்.

சொர்க்கம் வேறென்ன இதைவிட என்று மிஞ்சினேன்

அடடா இப்படி அழகாய் திளைத்து கொண்டிருக்க
சற்றேன்று கண் விழித்தேன் கனவு கலைந்தது 

கனவு பலிக்குமா! இல்லை பழிக்குமா?
நிஜமாய் போகுமா! இல்லை போகுமோ?

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...