Thursday, September 13, 2018

கடவுள் பாடல்

கடவுள் பாடல்
*****************
முழுமுதற் கடவுள் கடவுளின் முதல்வனே
விநாயகப்பெருமானே.
அன்பின் சொருபமே அற்புதம் புரிவானே
ஆணை முகத்தானே.
எங்கும் எதிலும் இருப்பவனே அழகும் அகிலம் படைத்தவனே.

சரணம்
**********
அன்னை பார்வதியின் அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின் ஆசை பாலகா!
அன்னையும் பிதாவும் அகிலமென்று அனைவருக்கும் உணர்த்தியோனே!
ஏகாந்தமானவனே! எளியவடிவோனே!
உமக்கு அருகம்புல் கொழுக்கட்டை படைப்பேனே!

சரணம்
**********

அறம் பொருள் இன்பம் அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி சுகம்தனை தருவாய்!
குழந்தைகளின் செல்லமே செல்வவளத்தினை அனைவருக்கும் தந்தருள்பவனே!
நன்மை புரிவானே! நாவன்மை கொடுப்பவனே!
உம்மை போற்றி  போற்றியே புகழ்வேனே!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...