கடவுள் பாடல்
*****************
முழுமுதற் கடவுள் கடவுளின் முதல்வனே
விநாயகப்பெருமானே.
அன்பின் சொருபமே அற்புதம் புரிவானே
ஆணை முகத்தானே.
எங்கும் எதிலும் இருப்பவனே அழகும் அகிலம் படைத்தவனே.
சரணம்
**********
அன்னை
பார்வதியின் அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின்
ஆசை பாலகா!
அன்னையும்
பிதாவும் அகிலமென்று அனைவருக்கும் உணர்த்தியோனே!
ஏகாந்தமானவனே!
எளியவடிவோனே!
உமக்கு
அருகம்புல் கொழுக்கட்டை படைப்பேனே!
சரணம்
**********
அறம் பொருள்
இன்பம் அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி
சுகம்தனை தருவாய்!
குழந்தைகளின்
செல்லமே செல்வவளத்தினை அனைவருக்கும் தந்தருள்பவனே!
நன்மை புரிவானே!
நாவன்மை கொடுப்பவனே!
உம்மை
போற்றி போற்றியே புகழ்வேனே!
No comments:
Post a Comment