Saturday, September 29, 2018

விழித்தெழு மனிதா

போதும் போதும் மனிதா
பொறுத்தது போதும் மனிதா
மயக்கம் போதும் மனிதா
ஏமாந்தது போதும் மனிதா 
அடிமைகள் கொன்றே மனிதா
விழித்தெழு இன்றே புதிதா
எதிலும் நடப்பாய் தோதா
எதிர்காலம் காப்பாய் இனிதா


சரணம்
**********

உழுத காலம் மறந்து போச்சு 
தொழுதே காலம் வீணாப் போச்சு
ஊத்தி கொடுத்து யோசனை போச்சு 
போட்டு கொடுத்தே உள்ளதும் போச்சு
அரசியல் பேசி நேரம் போச்சு 
ஆன்ராய்டில் பேசியே கோரம் ஆச்சு
இலவசம் கொடுத்து புடுங்கலாச்சு 
காரணம் இங்கே பதுக்கலாச்சு
உரிமைகள் சொன்னா கைதாச்சு 
ஜனநாயகம் இங்கே  செத்தேபோச்சு
விட்டுக்கொடுத்தே இருப்பதெல்லாம் போச்சு 
விழித்து கொண்டா இனி வசந்தமாச்சு

சரணம்
**********

பட்டினி சாவுகள் அதிகமாச்சு
கொலை கொள்ளை பெருகி போச்சு
நீரும் நிலமும் பாழாபோச்சு 
நீதியும் நியாயமும் மாறிப் போச்சு
சிறுசுங்க வீதியில் உலவபயமாச்சு
கொடுமைகள் உலவிட அலங்கோலமாச்சு. 
சந்தையில் சரக்குகள் அரசாங்கமாச்சு 
சிந்தையில் சிகரெட்மது பதியலாச்சு
நடக்கும் அநியாயம் நியாமாச்சு
விட்டுக்கொடுத்தே இருப்பதெல்லாம் போச்சு 
விழித்து கொண்டா இனி வசந்தமாச்சு

Tuesday, September 25, 2018

எழுவாய் நீ எழுவாய்


முழுதாய் முழுதாய்
முயல்வாய் முழுதாய்
முதலாய் முதலாய்
மூளையே முதலாய்
உழுவாய் உழுவாய்
பழுதினை உழுவாய்
தொழுவாய் தொழுவாய்
உழைப்பினை தொழுவாய்
எழுவாய் எழுவாய் அஞ்சாது
விழும்முன் எழுவாய்

சரணம்
%%%%%%
துன்பங்கள் போதும் இன்பங்கள் கொடுக்க நீ எழுவாய்
ஏமாற்றங்கள் போதும் மாற்றங்கள் தொடுக்க நீ எழுவாய் 
தரித்திரம் போதும் சரித்திரம் படைக்க நீ எழுவாய்
உவமைகள் போதும் உண்மைகள் உடைக்க நீ எழுவாய்
முடியாதென்பது போதும் முடியும் என்றே நீ எழுவாய் 

சரணம்
%%%%%%
அவமானங்கள் போதும் வெகுமானம் பெற்றிட நீ எழுவாய்
சோதனைகள் போதும் சாதனைகள் போற்றிட நீ எழுவாய்
வண்ணங்கள் போதும் எண்ணங்கள் துளிர்திட நீ எழுவாய்
அச்சங்கள் போதும் உச்சங்கள் தழுவிட நீ எழுவாய்
தடைகள் போதும் தகர்த்து எறிந்திட நீ எழுவாய்

Sunday, September 23, 2018

அழகோ அழகே



கொஞ்சும் தமிழழகே 
கெஞ்சும் மொழியழகே 
கொய்யா இதழழகே
கொய்யும் நீ தனியழகே 
கொடை கொடுக்கும் பேரழகே
கொள்ளை கொள்ளும் பெயரழகே

சரணம்
**********

கொல்லிமலை வியந்திடும் தலையழகே
கொக்குகள் கொத்திடும் கண்ணழகே
கொத்தமல்லி முகர்ந்திடும் பேச்சழகே
கொம்புத்தேன் வழிந்திடும் இதழழகே.
கொண்டை பூத்திடும் பூவழகே.
கொப்பரை காட்டிடும் நெஞ்சழகே.
கொடுவாளாய் வீசிடும் கையழகே.
கொடிமரம் நட்டு உலகம் போற்றும்  அழகோ உன்னழகே .

சரணம்
**********

கொடியிடை சறுக்கிடும் இடையழகே
கொசுவமும் மடிந்திடும் இடுப்பழகே.
கொத்தவரை காட்டிவிடும் விரலழகே.
கொக்கிக்கால் வரைந்திடும் பாதமழகே.
கொடுப்பினை நடந்திடும் நடையழகே.
கொலுசுகள் கொண்டாடும் சிரிப்பழகே
கொச்சிமஞ்சள் நிறைந்திடும் மேனியழகே.
கொடிமரம் நட்டு உலகம் போற்றும் அழகோ உன்னழகே .

Saturday, September 22, 2018

கனவு பலிக்குமா! இல்லை பழிக்குமா?

பச்சை வண்ண போர்வையை பூமிக்கு போர்த்தினேன்
நீல நிற சேலையை எடுத்து வானுக்கு உடுத்தினேன்
விவ'சாய வண்ணங்கள் கொண்டு வானவில்லை தீட்டினேன்
காட்டருவியாக குதித்து விழுந்து ஓட கொண்டாடினேன்
பார்க்கும் இடங்களில் எங்கும் வயல்களை நிறுத்தினேன்
நெல்மணி கதிர்கள் குலுங்க எங்கும் விளையாடினேன்
நாற்று நடும் பாட்டோடு பாவையர்களை அமர்த்தினேன்
புல் சுமை கட்டை பூவையர்கள் சுமந்திட நடத்தினேன் 
மாடு ஆடு கோழி என அனைத்து உறவுகளிடமும் பேசினேன்.
ஏரில் கட்டிய காளைகளோடு காளையர்களை விரட்டினேன்
கவலைகளை மறந்து விவசாயம் செய்ய அறிவுறுத்தினேன்.
நீரில் தவளை வானில் குயில் பாடிட சொன்னேன்
தேன் குடிக்கும் வண்டுகளின் ரீங்காரமிட கெஞ்சினேன் 
சலசலக்கும் நீரோடையின் சங்கீதமிட பண்ணினேன்
தென்றல் காற்றின் சுகந்தம் நுகர்ந்து கொஞ்சினேன்
கண்ணீர் துளியை புல் ஏந்திட பனித்துளியாய் மாற்றினேன்.
மனிதர்கள் மனிதர்களாய் வலம் வர போற்றினேன்.
நாட்டின் முதுகெலும்பு நிமிர்த்தப்பட்டதாக உணர்த்தினேன்.

சொர்க்கம் வேறென்ன இதைவிட என்று மிஞ்சினேன்

அடடா இப்படி அழகாய் திளைத்து கொண்டிருக்க
சற்றேன்று கண் விழித்தேன் கனவு கலைந்தது 

கனவு பலிக்குமா! இல்லை பழிக்குமா?
நிஜமாய் போகுமா! இல்லை போகுமோ?

Tuesday, September 18, 2018

நீர்த்துளி

வானம் இடிந்தால் என்ன
மேகம் உடைந்தால் என்ன
மின்னல் கிழித்தால் என்ன
மிதமாய் பொழிந்தால் என்ன
எண்ண எண்ண இதயம் நனையும் என்ன
மாயம் என்ன இதைவிட சொர்க்கம் என்ன

சரணம்
**********
புல்லில் நீ விழுவதால் நீயோ பனித்துளி
புவியில் நீ விழுவதால் நீயோ உயிர்த்துளி
மலையில் நீ விழுவதால் நீயோ நீர்வீழ்ச்சி 
கடலில் நீ விழுவதால் நீயோ சமுத்திரம்
விழுந்து தேங்கி எழுந்து நடந்து ஓடோடி சேர்வதால் நீயோ நம்பிக்கை.

சரணம்
**********
கன்னத்தில் நீ விழுவதால் நீயோ கண்ணீர்
கழுத்தில் நீ விழுவதால் நீயோ குடிநீர் 
உள்ளத்தில் நீ விழுவதால் நீயோ இரக்கம்
உழைப்பில் நீ விழுவதால் நீயோ வியர்வை 
எங்கும் எதிலும் நம்மில் கலந்து ஒன்றாய் இருப்பதால் நீயோ ஜீவன்.

Monday, September 17, 2018

இரு

வளர்ந்தால் பனையாக இரு
உயர்ந்தால் தென்னையாக இரு
பறந்தால் பறவையாக இரு
விழுந்தால் விதையாக இரு
தேங்கினால் குளமாக இரு
பரவினால் ஒளியாக இரு
நிறைந்தால் காற்றாக இரு
வீசினால் தென்றலாக இரு
ஓடினால் நதியாக இரு
கொட்டினால் அருவியாக இரு
சிரித்தால் மனமாக இரு
உதவினால் மரமாக இரு
அழுதால் மேகமாக இரு
துணிந்தால் வானமாய் இரு
குனிந்தால் நெற்கதிராக இரு
நின்றால் சிலையாக இரு
நிமிர்ந்தால் மலையாக இரு
பொழிந்தால் மழையாக இரு
வாழ்ந்தால் வாழையாக இரு !

Saturday, September 15, 2018

மாணவா வா மாணவா வா

மாணவா வா மாணவா வா
முன்னே கால் வைத்து வா முன்னேற்ற பாதையில் வா
முயன்று பார்ப்போம் வா முடியாதது இல்லை வா
உன்னால் ஆகும் வா துணிந்தே செய் வரும் நாள் உன் நாள் ஆகும் வா வா

சரணம்
"""""""""""""""

பெற்றோரை மதித்திடு பெருமைகள் பல சேர்த்திடு
மதியால் பெற்றிடு பெற்றதை நீயே மதிப்பிடு
தேவைப்பட்டால் கற்றிடு கற்பதினால் கூடும் மதிப்பீடு 
கற்க்கலாம் கற்பிக்கலாம் கலக்கலாம் 

சினத்தை விடு எதனையும் சிந்தையில் இடு 
சிந்தையால் தொடு எந்த சந்தையிலும் மேம்படு
வருவதை சந்தித்து விடு சாதித்து சிகரம் தொட்டுவிடு
சந்திக்காலாம் சிந்திக்கலாம் சாதிக்கலாம்


சரணம்
"""""""""""""""
அழுவதை கைவிடு அழகாய் உருவெடு 
ஆற்றல்களை அளவிடு அளவில்லா அறிந்திடு 
அச்சம்தனை அகற்றிடு அசத்தலாய் செய்திடு
அறியலாம் அறிவிக்கலாம் அறிஞனாகலாம்.

மதுவை உதைத்திடு மாதுவை மதித்திடு.
மதியை கூட்டிடு மதிப்பையும் கூட்டிடு.
மாதிரியாக இருந்திடு மந்திரியாக தெரிந்திடு.
மதிப்பிடலாம் மதிக்கலாம் மதிக்கநடக்கலாம்

Thursday, September 13, 2018

காதல் பாடல்#16

கன்னம் சிவந்தவளே 
கண்ணுக்கினியவளே
காட்சிகள் நிறைந்தவளே
கனவுகள் தருபவளே
கவிஞன் ஆக்குபவளே
கவிதை ஆனவளே
காதல் காதல் என்று எடுத்துரைத்தவளே.
காலம் நீயென கலந்து என்னில்நின்றவளே.

சரணம்
**********
சில்லென்று காற்றாய் சிரிப்பவளே 
கொள்லென்று ஊற்றாய்  கொடுத்தவளே 
புல்லென்று பயிராய் வளர்ந்தவளே
நில்லென்று உயிராய் நின்றவளே
ஜில் ஜில்லென்று தேகம்தனில் ஓடுபவளே.
ஜல் ஜல்லென்று எண்ணம்தனில் ஆடுபவளே.
ஊக்கமானவளே ஊட்டமானவளே
உதிரமானவளே உயிரானவளே.

சரணம்
***********
இதயத்தில் ஈட்டியாய் இருப்பவளே.
உதயத்தில் சுட்டியாய் உதிப்பவளே.
சமயத்தில் வட்டியாய் இரட்டிப்பவளே.
இமயத்தில் கெட்டியாய் குடிபுகுந்தவளே.
விறு விறுவென்று நரம்புதனில் விருட்சமானளே.
குரு குருவென்று உதிரம்தனில் கலந்தவளே.
வாசமானவளே வசமானவளே
வாடிக்கையானவளே வாழ்க்கையானவளே.

கடவுள் பாடல்

கடவுள் பாடல்
*****************
முழுமுதற் கடவுள் கடவுளின் முதல்வனே
விநாயகப்பெருமானே.
அன்பின் சொருபமே அற்புதம் புரிவானே
ஆணை முகத்தானே.
எங்கும் எதிலும் இருப்பவனே அழகும் அகிலம் படைத்தவனே.

சரணம்
**********
அன்னை பார்வதியின் அருந்தவ புதல்வா !
ஆடல் நாயகனின் ஆசை பாலகா!
அன்னையும் பிதாவும் அகிலமென்று அனைவருக்கும் உணர்த்தியோனே!
ஏகாந்தமானவனே! எளியவடிவோனே!
உமக்கு அருகம்புல் கொழுக்கட்டை படைப்பேனே!

சரணம்
**********

அறம் பொருள் இன்பம் அனைத்தும் தருவாய்!
சோகங்கள் நீக்கி சுகம்தனை தருவாய்!
குழந்தைகளின் செல்லமே செல்வவளத்தினை அனைவருக்கும் தந்தருள்பவனே!
நன்மை புரிவானே! நாவன்மை கொடுப்பவனே!
உம்மை போற்றி  போற்றியே புகழ்வேனே!

Tuesday, September 11, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #2

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்க்கையின் புரிதல் 
++++++++++++++++++++++++++++++++++

1. பாதிவழி விடாதவன் பாவவழி கெடாதவன்
இதன்வழி நடத்துபவன் நண்பன்.

2.  தீயதோர் ஏதும் நெருங்காது உனக்கு 
மூத்தோர் சொல்படி நடக்கையில்.

3. பொருளை திருடுபவன் மட்டும் திருடனல்ல
புலன்களை அடக்காதவனும் கூட.

4. தோல்வியுற காரணமானவர்களை மனதார நேசி
வெற்றியுற காரணமானர்கள் அவர்களே.

5. அடிமைத்தனம் முரட்டுத்தனம் ஆகாது அதனினும்
அசட்டுத்தனம் ஆகாது வாழ்விற்கு.

6. இரகசியமாக செய்த பாவம் உறுத்தும்
இறக்கும் வரை உறுத்தும்.

7. கடவுள் ஒப்புக்கொள்ளும் கல்லென்று மனிதா
ஒப்புக்கொள் பணமும் காகிதமென்று.

8. பணம் கொடுத்தும் வாங்க இயலாத
ஆபரணம் நம் குணம்.

9. தோல்வி என்பது ஒருவழி சாலையல்ல
வெற்றிக்கான எட்டுவழி சாலையாகும்.

10. என்னால் முடியுமென்பது நம்மீதுபோடும் அலங்காரம்
என்னால் மட்டுமென்பது அகங்காரம்.


Friday, September 7, 2018

காதல் ரொமன்ஸ் பாடல்#16

இதயங்கள் இடமாறினால் இயங்குவேன்
இல்லையென்றால் இல்லாமல் போவேன்.
உயிருக்கு உயிரானால் உருகுவேன்
உதறினாளென்றால் உடைந்து போவேன்.
அன்பே உன்னை பார்த்தது முதல் நானாக நானுமில்ல நீ இல்லாம நானுமில்ல.

சரணம் 
*********

உன்னை பார்க்க பார்க்க அழகாகிறேன் அன்பே
உன்னை நினைக்க நினைக்க கனவானேன்.
உன்னை பற்றியே யோசிக்க யோசிக்க கவிஞனானேன்.
உன்னை பெயரை வாசிக்க வாசிக்க உலக காவியம் படைக்கிறேன்.
நான் என்னை மாத்திக்க மாத்திக்க நீயாக நானேனு தெரிகிறேன்.
அன்பே காதல் சொல்ல வாராயோ?!

சரணம்
**********

உன்னை துதிக்க துதிக்க பக்தனாகிறேன் அன்பே
உன்னை விதைக்க விதைக்க மரமாகிறேன்.
உன்னை நினைத்து குதிக்க குதிக்க மழலையாகிறேன்.
உன்னை பார்க்காது பதைக்க பதைக்க மனம் சிதறி போகிறேன்.
நான் என்னை சிதைக்க சிதைக்க மரித்தே நீயாக மாறுவேன்.
அன்பே காதல் சொல்ல வாராயோ?!

பாட்டியும் குரங்கும்


காதலில்


Thursday, September 6, 2018

வெற்றி


தலையெழுத்து

அறியாமையை அகற்றி
ஆளுமையை ஏற்றி
இயலாமையை கழற்றி 
ஈகையை போற்றி 
உணர்வை ஊற்றி 
ஊக்கம் முற்றி
எதிர்ப்பை தூற்றி
ஏக்கம் மாற்றி 
ஐயம் தேற்றி 
ஒழுக்கம் பற்றி  
ஓடும்உலகம் சுற்றி 
ஔடதமாக பெறு வெற்றி 

அஃதே எழுது தலையெழுத்தை சூடும்  நெற்றி.

Tuesday, September 4, 2018

தெய்வத்தை


ஆசான்


தெய்வம்

முன் தெரிந்தது
மாதா பிதா குரு தெய்வம் என்று !
பின் தெளிந்தது
மாதா, பிதா, குருவே தெய்வம் என்று !

Saturday, September 1, 2018

காதல் ரொமன்ஸ் பாடல்#15

காதல் ரொமன்ஸ் பாடல்#15
*********************************

படவா செல்ல படவா பாடவா காதலை பாடவா.
தேடவா உன்னை தேடவா சூடவா நெஞ்சில் சூடவா.
தொடவா உயிர் வரை தொடவா.
கூடவா இறுதி வரை கூடவா.

சரணம்
**********

உன்னை நான் போர்வையாக மாற்றவா மாற்றி என் மீது போர்த்தவா.
மணக்கும் மண மாலையாக கோர்க்கவா அதில் என் ஜீவனை சேர்க்கவா.
கன்னம் கன்னம் தொடவா தொடவா
முத்தம் நித்தம் தரவா தரவா.
வாழ்வில் நீங்காத உறவா சொர்க்கம் நம்மில் பெறவா 
நீயே கிடைத்த வாழ்வின் வரம் வா வா

சரணம்
***********

காலை நான் கண்விழித்தால் நினைவா அன்பே நான் நீயே நிஜம்வா.
மாலை கண் உறக்கத்தில் கனவா கனவில் நான் தேடும் கனவா.
வாழ்க்கை ஓட்டத்தின் வரவா வரவா
வலிகள் வாட்டத்தின் செலவா செலவா
என்னில் இடபாகம் இடவா
ஒன்றாய் நாம் கலந்திடவா 
நீயே கிடைத்த வாழ்வின் வரம் வா வா

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...