Thursday, August 9, 2018

முத்தமிழ் அறிஞரே உன்புகழ் வாழ்கவே!!!

அரவாணிகளை
அலங்கரித்தார்
திருநங்கை என்று...

விதவைகளை
விளக்காக்கினார்
கைம்பெண் என்று...

உறவுகளுக்கு
உயிரூட்டினார்
உடன்பிறப்பே என்று...

நலிந்தோர்க்கு
நலம்செய்தார்
மானியம் என்று..

வலிந்தோர்க்கு
வாழ்வளித்தார்
வாரியம் என்று...

பல கலைகளுக்கு
பல்கலை செய்தார்
பல்கலைக்கழகம் என்று...

முடியதார்க்கு
முடியுமென்றார்
இலவசம் என்று...

சமமாயிரு சாதியை அறு
சமத்துவம் பெறு என்றார்
சமத்துவபுரம் என்று...

கலையுலத்தை
கலக்கிடச்செய்தார்
கலைமாமணி என்று...

கல்வி அனைவருக்கும்
சமம் என்றார்
சமச்சீர் என்று...

காவல்துறையை
காத்திட செய்தார்
ஆணையம் என்று...

சென்னையை
செம்மைப்படுத்தினார்
சிங்கார சென்னை என்று...

தமிழை
தரமேற்றினார்
செம்மொழி என்று...

சொல்லில் அடங்குமோ
சொல்வேந்தரை பற்றி...
சொல்ல சொல்ல முடியுமோ
செய்த செயல்களை பற்றி...

முத்தமிழ் அறிஞரே
உன்புகழ் வாழ்கவே!!!

No comments:

Post a Comment

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...