நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்வியல் தத்துவம்
_____________________________________
அதிகாரம் - வாழ்வியல் தத்துவம்
_____________________________________
1. செயல்கள் யாதாயினும் சோம்பலே எதிரியாவான்
கொள்ளும் தன்னம்பிக்கையே நண்பனாவான்.
2. பயம் யாதென இவ்வுலகில் கேட்போரும்
பயம் கொள்வார் இறப்பிற்கு.
3. இருப்பவை இருந்தும் இல்லாதது போல
இருப்பதுதான் மன இறுக்கம்.
4. அளவில்லா ஆசை மேல் ஆசைப்படுவது
குருடனுக்கு மேல் குருடனாவான்.
5. நல்லதை கேட்காதவன் செவிடன் கேட்டும்
நல்லதருணம் சொல்லாதவன் ஊமை.
6. கடவுள் யாதென்றால் கடவுளே கடவுளென
காட்டும் கருணை கொண்டவனை.
7. நல்இதயம் நலம்தரும் அதையும் தியாகமென்று
பற்றற்று வாழ்வதோ சுகம்தரும்.
8. கொடிது பாம்பின் விஷம் அதனினும்
கொடிது பெரியவர்களை அவமதித்தல்.
9. தாமரையிலை மேல் தண்ணீரை போல்
இளமை செல்வம் ஆயுள்
10. உயர்ந்த வாழ்வு என்பது யாதெனில்
குற்றங்கள் புரியாமல் வாழ்வதே.
No comments:
Post a Comment