யார் என்ன சொன்னாலும் கேட்டதில்லை
நானே இராஜாடா.
மனச மீறி எதிலும் நடந்ததில்ல
வேணாம் தாஜாடா.
யாரையும் எதர்க்கும் கெடுத்ததில்ல எதர்க்கும் எவனுக்கும் பயந்ததில்ல
உழைப்பையே நம்பி நம்பி ஓடுது வாழ்க்கை
சரணம்
++++++++
அன்புனு வந்து விட்டா வாலாட்டி நிப்பேனே நாயாட்டம்.
வெறும் வேசம்னு தெரிந்து போனா ஆடுவேன் பேயாட்டம்.
படிச்சி படிச்சி என்னாச்சி
வேலை கேட்டு தெருவுல நின்னாச்சி.
கையும் காலும் படைச்சானே
உள்ளம் உறுதியா தான் கொடுத்தானே
உழைச்சு நிலைமைய மாற்று
உள்ளத்தில் எனக்கு நானே இராஜாடா.
சரணம்
++++++++
ஏழைக்கு ஒரு பிரச்சனைனா எமனாக வந்து நிப்பேன்.
எதிரிக்கே சில பிரச்சனைனா எதிரில் நின்றும் காப்பேன்.
நட்புனா தோள் கொடுப்பேன் பெய்யா நடிச்சா தோல் உரிப்பேன்.
நியாயம் நிலைக்க போராடுவேன்
எனையே நம்பி நான் இருப்பேன்.
உழைச்சு நிலைமைய மாற்று
உலகத்தில் எனக்கு நானே இராஜாடா.
No comments:
Post a Comment