வர்ணனை பாடல்
*******************
கண்ணே வெட்கப்படு உன்னை பார்த்தால்
மருதாணியும் கடன் கேட்கும்.
பெண்ணே சிரித்துவிடு உன்னை பார்த்தால்
பூக்களோ உடன் வியக்கும்.
சுற்றும் பூமியும் நின்று உன்னை பார்க்கும்.
வானம் தலை நிமிர்ந்து உனக்காக குடை பிடிக்கும்.
அழகோ அழகின் அழகோ
இயற்கை போற்றும் பேரழகோ.
சரணம்
*********
மெல்லிய தென்றல் உன் முகம்
பாலினும் வெண்மை உன் அகம்
இருபது வயது மழலை உன் பேச்சு
ஆச்சரியம் கூட்டும் எரிமலை உன் மூச்சு
பாடும் குயிலின் ஓசை உன் குரல்
சிதறிய மயில் தோகை உன் கூந்தல்
சிப்பிக்குள் அடைக்க பட்டிருக்கும் முத்துக்கள் உன் பற்கள்
இமயம் போல் உயர்ந்திருக்கும் புருவங்கள்
மாசற்ற மாணிக்கம் உன் கண்கள்
சொல்ல சொல்ல இயற்கை கொஞ்சும் அழகு
மெல்ல மெல்ல இயற்கையே கெஞ்சும் அழகு.
சரணம்
*********
இரண்டு வாழைத்தண்டு கால்களிலே நாதஸ்வரம்.
ஓயாமல் ஒலிக்கும் இடி ஓசை கேட்கும் வரம்.
வெண்மேகம் தானே அவள் கொண்ட தேகம்.
வருமே அடிக்கடி என்னில் எனக்கே சந்தேகம்.
பொன்னகை திமிர் போனது காரணம் உன் புன்னகை.
முயலின் ஆட்டம் உன் நடை
பார்த்தால் மனம் சறுக்கும் மெல்லிடை
உடுத்திட மேலும் அழகாகும் உடுத்தும் உடை
உலகம் தேடும் அழகிற்கு நீதானே விடை.
சொல்ல சொல்ல இயற்கை கொஞ்சும் அழகு
மெல்ல மெல்ல இயற்கையே கெஞ்சும் அழகு.
No comments:
Post a Comment