காதல் பாடல் #12
------------------------------ -
தேடி தேடி பார்த்தாலும் அன்பே உன்ன போல வருமா.
கோடி கொட்டி கொடுத்தாலும் கண்ணே உனக்கு ஈடு யாரம்மா.
நாடி பிடித்து பார்க்கையிலே ஆயுள் ஓட்டம் நீயம்மா.
பாடி பேசி நிற்க்கையிலே வருவ தொல்லாம் உன் பெயரம்மா.
சரணம்
-------------
என் உறக்கத்திலும் உன்னை கொஞ்ச மனம் கெஞ்சுதம்மா.
என் கனவிலும் முத்தங்கள் கொடுக்க காதல் தாகம் தீரலம்மா.
அழகிற்கே உருவம் நீயம்மா.
கவிதைக்கு காரணம் நீயம்மா
அடியே செல்லம்மா காதல் சொல்லம்மா
எனையே கொல்லம்மா இல்லையேல் காதல் கொள்ளம்மா.
சரணம்
--------------
எந்த தேடலிலும் ஆரம்பம் முடிவு உந்தன் முகம்தானம்மா.
வந்த முடிவிலும் முடிவில்லா முகம் உந்தன் முகம்தானம்மா.
வாழ்வே நீதானே கன்னம்மா.
நீயில்லா வாழ்க்கை வீணம்மா.
அடியே செல்லம்மா காதல் சொல்லம்மா
எனையே கொல்லம்மா இல்லையேல் காதல் கொள்ளம்மா.
No comments:
Post a Comment