Thursday, August 30, 2018

முடியும் சாதித்திடு பாடல்

முடியும் சாதித்திடு பாடல்  
<><><><><><><><><><><><>
 
 
உன்னால ஆகாதுனு நீயே நினைச்சா வேற யாரால முடியும்னு நினைச்சு பாரு!
தன்னால நடக்குமுனு கனவு கண்டா சோம்பேறி ஆவாயே எண்ணிப் பாரு!
வருவதை எதிர்கொண்டு நடத்தி காட்டு
தருவதை ஆராய்ந்து முடித்து காட்டு 
பெறுவதை வைத்தே நீயும் வென்று காட்டு 
சரணம் 
<><><>
நீ காணும் ஒவ்வொரு தோல்வியையும் படித்துவிடு
நீ காணும் ஒவ்வொரு வெற்றியிலும் பணித்துவிடு
எதிர்வரும் சோதனைகள் அனைத்தையும் சோதித்திடு
எண்ணத்தில் வெளிப்பாடுகள் அவையாகஇருக்க போதித்திடு
எவனும் என்னவென்று கேட்பதற்குமுன் சாதித்திடு
எமனே குறுக்கிட நேர்ந்தால் காலால் மிதித்திடு
சரணம் 
<><><>
நீ தவறி செய்திடும் தவறு இருக்கலாம் சிலமுறை
நீ பதறி செய்யாதே எந்த காரியமும் பலமுறை
வந்தோம் தின்றோம் உறங்கினோமென்பது வரைமுறை
நின்றோம் ஜெயித்தோம் உரைத்தோம் என்பது வாழ்வுரை 
வாழ்வும் சாவும் மனிதர்க்கெல்லாம் ஒருமுறை
வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் வாழ்த்தட்டும் தலைமுறை

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #1

நவீன திருக்குறள்
அதிகாரம் - வாழ்வியல் தத்துவம்
_____________________________________

1. செயல்கள் யாதாயினும் சோம்பலே எதிரியாவான் 
கொள்ளும் தன்னம்பிக்கையே நண்பனாவான்.

2. பயம் யாதென இவ்வுலகில் கேட்போரும்
பயம் கொள்வார் இறப்பிற்கு.

3. இருப்பவை இருந்தும் இல்லாதது போல
இருப்பதுதான் மன இறுக்கம்.

4. அளவில்லா ஆசை மேல் ஆசைப்படுவது
குருடனுக்கு மேல் குருடனாவான்.

5. நல்லதை கேட்காதவன் செவிடன் கேட்டும்
நல்லதருணம் சொல்லாதவன் ஊமை.

6. கடவுள் யாதென்றால் கடவுளே கடவுளென 
காட்டும் கருணை கொண்டவனை.

7. நல்இதயம் நலம்தரும் அதையும் தியாகமென்று
பற்றற்று வாழ்வதோ சுகம்தரும்.

8. கொடிது பாம்பின் விஷம் அதனினும்
கொடிது பெரியவர்களை அவமதித்தல்.

9. தாமரையிலை மேல் தண்ணீரை போல்
இளமை செல்வம் ஆயுள்

10. உயர்ந்த வாழ்வு என்பது யாதெனில்
குற்றங்கள் புரியாமல் வாழ்வதே.


Monday, August 27, 2018

அப்பா அப்பா

மீசைய முறுக்கிக்கிட்டு ஆசைய மறைச்சிகிட்டு
உடன் வாழ்பவர்தான் அப்பா அப்பா.
பாரங்கள் சுமந்துகிட்டு வாரங்கள் கடந்துகிட்டு
நாளும் உழைப்பவர்தான் அப்பா அப்பா.
தாய்யை மிஞ்சும் தாய்தான் அப்பா அப்பா.
தெய்வம் சொல்லும் தெய்வம் அப்பா அப்பா.

சரணம்
**********
நாம் கேட்டு இல்லை என்ற சொல்லை இல்லாமல் செய்தவர் அப்பா அப்பா.
எனது ஆசைகளை தனது ஆசைகளாக எண்ணி வாழ்பவர் அப்பா அப்பா.
குடும்பம் கலங்காதிருக்க தன்னை கல்லாக்கி கொண்டவர் அப்பா.
தோளில் சுமந்து நமக்கு உலகம் காட்டியவர் அப்பா
உலகமே காட்டும் ஒப்பற்ற உறவுதானே அப்பா
நாம் பல உயரங்கள் அடைந்தாலும் சிகரங்கள் தொட்டாலும் பெரும் மகிழ்ச்சி அடைபவர் அப்பா அப்பா.


சரணம்
**********
நாம் அவரை நினைக்காத போதும் நம் வாழ்வையே நினைப்பவர் அப்பா அப்பா.
எனது தேவைகளை தனது தேவைகளாக பாவித்து நடப்பவர் அப்பா அப்பா.
கொஞ்ச தெரிந்திருந்தும் நெஞ்சில் சுகமாக சுமப்பவர் அப்பா
தோல்வி வந்த போதும் தட்டிக்கொடுத்து தோள் கொடுப்பவர் அப்பா
தோள் கொடுத்த ஒப்பற்ற முதல் தோழன் அப்பா.
நாம் பல நேரங்களில் அழுதால் கடும்முகம் வெளியே காட்டி உள்ளே அழுவார் அப்பா அப்பா.

Saturday, August 25, 2018

நானே இராஜாடா பாடல்

யார் என்ன சொன்னாலும் கேட்டதில்லை
நானே இராஜாடா.
மனச மீறி எதிலும் நடந்ததில்ல
வேணாம் தாஜாடா.
யாரையும் எதர்க்கும் கெடுத்ததில்ல எதர்க்கும் எவனுக்கும் பயந்ததில்ல
உழைப்பையே நம்பி நம்பி ஓடுது வாழ்க்கை

சரணம்
++++++++
அன்புனு வந்து விட்டா வாலாட்டி நிப்பேனே நாயாட்டம்.
வெறும் வேசம்னு தெரிந்து போனா ஆடுவேன் பேயாட்டம்.
படிச்சி படிச்சி என்னாச்சி 
வேலை கேட்டு தெருவுல நின்னாச்சி.
கையும் காலும் படைச்சானே
உள்ளம் உறுதியா தான் கொடுத்தானே
உழைச்சு நிலைமைய மாற்று 
உள்ளத்தில் எனக்கு நானே இராஜாடா.

சரணம்
++++++++
ஏழைக்கு ஒரு பிரச்சனைனா எமனாக வந்து நிப்பேன்.
எதிரிக்கே சில பிரச்சனைனா எதிரில் நின்றும் காப்பேன்.
நட்புனா தோள் கொடுப்பேன் பெய்யா நடிச்சா தோல் உரிப்பேன்.
நியாயம் நிலைக்க போராடுவேன்
எனையே நம்பி நான் இருப்பேன்.
உழைச்சு நிலைமைய மாற்று 
உலகத்தில் எனக்கு நானே இராஜாடா.

Wednesday, August 22, 2018

காதல் சுவாசம்


காதல்


அழகு பேரழகு

அழகு உலகினில் எதுவும் அழகு
அழகு படைப்பில் காணும் யாவும் அழகு.
அழகு மண்ணில் எதுவும் அழகு
அழகு விண்ணில் உலவும் யாவும் அழகு.
அழகு இயற்கையில் எல்லாம் அழகு பேரழகு.

சரணம்
**********
நிலா அழகு அதை சுமக்கும் இரவு பேரழகு.
தேன் அழகு அதை சுமக்கும் பூவோ பேரழகு.
அருவி அழகு அதை சுமக்கும் காடுமலை பேரழகு.
வயல்வெளி அழகு அதை சுமக்கும் மண் பேரழகு. 
பனித்துளி அழகு அதை சுமக்கும் புல்வெளி பேரழகு.
காற்றும் கடலும் மழையும் அழகு
மரமும் மலரும் மணமும் அழகு
வானவில்லும் வர்ணஜாலமும் வண்ணக்கோலமும்  அழகு
அதை சுமக்கும் இயற்கை அழகு பேரழகு.

சரணம்
**********
உள்ளம் அழகு அதை சுமக்கும் உறவுகள் பேரழகு.
காதல் அழகு அதை சுமக்கும் கவிதை பேரழகு.
நல்எண்ணம் அழகு அதை சுமக்கும் எண்ணம் பேரழகு
தாய்மை அழகு அதை சுமக்கும் பெண்மை பேரழகு.
மனிதம் அழகு அதை சுமக்கும் மனிதன் பேரழகு.
அன்பும் பாசமும்  நேசமும் அழகு
மனமும் குணமும் நட்பும் அழகு
நீதிகொண்டு நியாயம்பார்த்து கடமைசெய்தல் அழகு
அதை சுமக்கும் நெஞ்சம் அழகு பேரழகு.



Thursday, August 16, 2018

காதல் பாடல்#14

காதல் பாடல்#14

குண்டு குண்டு ரெண்டு கண்ணால காதல்தேன் செண்டு கொண்டு தந்தாயே.
கண்டு கண்டு உண்டு தன்னால காதலித்தேன் வண்டு வாண்டாய் பறந்தேனே.
மீண்டு மீண்டு வந்தால் மாண்டு மாண்டு போவேனே.
மீண்டும் மீண்டும் தந்தால் மீண்டு காதலோடு வாழ்வேனே.

சரணம்
*********
காதல் இல்லை என்று சொன்னால் இதயம் துண்டு துண்டாய் போகுமே.
உடையும் என்று கூறினால்உடல் துவண்டு துவண்டு போகுமே.
ஆம் என்று சொல் கண்ணே ஆயுள் நீண்டு நீண்டு போகுமே.

சரணம்
*********
காதல் கண்டு கொண்டு கொண்டால் மரணம் மாண்டு கூண்டாய் போகுமே.
உள்ளம் ரெண்டு சேர்ந்து கொண்டால் கள்ளம் பூண்டு பூண்டாய் போகுமே.
காதல் என்று சொல் பெண்ணே காத்து நின்று நின்று கிடப்பேனே.




எங்கே இருக்குது...

எங்கே இருக்குது ஐயா எங்கே இருக்குது
தேடி பார்க்குறேன் நானும் தேடி பார்க்குறேன்
காற்றில் பறக்குதோ ருபா நோட்டில் இளிக்குதோ
ஏட்டில் படிக்குதோ வெறும் பேச்சில் இருக்குதோ
பலர் இங்கு உடல் தந்து உயிர் தந்து பெற்ற சுதந்திரம்...

சரணம்
**********
அல்லும்பகலும் அயராது போராடி பெற்ற சுதந்திரம்
உதிரம் சிந்தி தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம்
மாடாய் செக்கிழுத்து அடிகளை தாங்கி பெற்ற சுதந்திரம்
அகிம்சை வழியிலும் வீரதீர வழியிலும் பெற்ற சுதந்திரம்
வெள்ளையனை விரட்டி வெற்றிக்கொடி காட்டி பெற்ற சுதந்திரம்.
வீறுநடை போட்டு எண்ணற்ற தியாகிளால் எண்ணிலடங்கா தியாகங்களால் பெற்று தந்த சுதந்திரம். (எங்கே இருக்குது...)

சரணம் 
**********

காசு கொடுத்து கல்வி பெறுவது தானோ சுதந்திரம்
சாதியை வளர்த்து சமத்துவம் பேசுவது தானோ சுதந்திரம்
நிலத்தை விற்று உணவை வாங்குவது தானோ சுதந்திரம்
மனதனை கொன்று மனிதநேயம் காப்பது தானோ சுதந்திரம்
போராடி போராடி உரிமைகளை பெறுவது தானோ சுதந்திரம்
பணக்காரன் குடிகாரன்  ஊழல்வாதி அரசியல்வாதி கொள்ளையன் காமவெறியன் கைகளில் உள்ளது தானோ சுதந்திரம் (எங்கே இருக்குது...)

Wednesday, August 15, 2018

இந்தியா


இன்றைய சுதந்திரமோ ?

ஒரு நாள் விடுமுறை
நீண்ட தூக்கம்
தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சிகள்
புதுப்புது திரைப்படங்கள்
பட்டிமன்றங்கள் பாட்டுமன்றங்கள்
கேலிகள் கூத்துகள் வியாபாரங்கள்
சட்டைப்பை மேலாடையில் மூவர்ணக்கொடி
கையில் இனிப்புகள் மிட்டாய்கள்
இணையதள பதிவுகள்
வாட்ஸாப்ப் DP STATUS

இதுதான் இன்றைய சுதந்திரமோ ?


Saturday, August 11, 2018

காதல் பாடல்#13

காதல் பாடல்#12

நாம் இணைந்த தளம் இணையத்தளம் அதுவே காதல்களம்.
நாம் இனிதாய் வாழ வேண்டிடும்தளம் நமக்கு இணையதளம்.
இனைவோம் இணையத்தில்
இனிக்கும் இதயத்தில்
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.

சரணம்
-------------
காதல் உணர்வுகளை அன்பே மின் சமிக்கையில் பரிமாறுவோம். 
காதல் உள்ளம் பரிமாற கூகுள் பயர் ஃபாக்ஸில்  அரங்கேற்றுவோம்.
டிஜிட்டல் காற்றில் காதல் ஆக்ஸிஜனை சுவாசிப்போம்.
டிஜிட்டல் டேட்டாவில் காதல் தீராது பூஜிப்போம்.
மின்னஞ்சலில் திரு மன செய்திகளை அனுப்புவோம் 
பேஸ்புக்கில் சிறுக சிறுக லைக்குகளை பெறுவோம் வாட்ஸ்சப்பில் காதல் ஸ்டேட்டசை பதிவோம்.
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.

சரணம்
********

இணைய உலாவியில் அன்பே இதயம் தனை உலாவவிடுவோம். 
மென்பொருள் குறியீடுகளில் நம் மனங்களை  புரிந்திடுவோம்.
முகத்தோற்றத்தில் மயங்கி முளைத்த காதலல்ல. 
அகத்தோட்டத்தில் உள்ளப்பூக்களாக மலர்ந்த உயர்ந்த காதலிது. 
காதலில் நமக்கு கைபேசியே காவலன் செய்யும் கால்களே நமக்கு தூதுவன் பேசும் வார்த்தைகளே ஆகும் காதல்டேட்டா.
காதல் செய்வோம் கண்ணிய காதல்
காதல் புரிவோம் கணினிக் காதல்.

Friday, August 10, 2018

புறப்படு இளைஞனே

வேண்டும் வேண்டும் உண்மை வேண்டும்.
வேண்டும் வேண்டும் நேர்மை வேண்டும்.
எங்கும் எதிலும் நல்லெண்ணம் வேண்டும்.
எதனையும் எதிர்க்க மனஉறுதி வேண்டும்.
நியாயமான ஞானம் நம்மில் பெற்றிட வேண்டும் வேண்டும்.
நிலையான செயல் மண்ணில் செய்திட வேண்டும் வேண்டும்.
புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே இளைஞனே.

சரணம்
--------------

அநீதி அநியாயம் தொலைக்க வேண்டும்,  நீதி நியாயம் நிலைக்க வேண்டும்.
சாதி மதங்கள் ஒழிந்திட வேண்டும், சமத்துவம் எங்கும் ஓங்கிட வேண்டும்.
கல்வி கல்லார்கும் கிடைக்க வேண்டும், கல்லாமை இல்லாமை ஆக்கிட வேண்டும்.
கொலையும் கொள்ளையும் அழிந்திடல் வேண்டும், கொள்கையும் கொடையும் இருந்திடல் வேண்டும்.
இளைஞர்கள் துணிந்து முன்வர வேண்டும், இந்தியா பார்புகழ் படைத்திட வேண்டும். 
புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே இளைஞனே.

சரணம்
*********

ஒழுக்கம் எதிலும் இருந்திடல் வேண்டும், ஓயாது உழைக்கும் எண்ணம் வேண்டும்.
ஊழல் இலஞ்சம் அகற்ற வேண்டும், உள்ளம் உறவுகள் போற்ற வேண்டும்.
மக்கள் உரிமை பெற்றிட வேண்டும், உண்மையான மக்களாட்சி மலர்ந்திட வேண்டும்.
எளிமை அரசியல் எழுச்சியுர வேண்டும், எதிலும் உன்னதம் அடைந்திட வேண்டும்.
விவசாயம் எங்கும் பெருகிட வேண்டும், வீடும்நாடும் நலம் பெற வேண்டும்.
புறப்படு புறப்படு இளைஞனே இளைஞனே.
செயல்படு இன்றே இளைஞனே இளைஞனே.

Thursday, August 9, 2018

நாற்காலி


முத்தமிழ் அறிஞரே உன்புகழ் வாழ்கவே!!!

அரவாணிகளை
அலங்கரித்தார்
திருநங்கை என்று...

விதவைகளை
விளக்காக்கினார்
கைம்பெண் என்று...

உறவுகளுக்கு
உயிரூட்டினார்
உடன்பிறப்பே என்று...

நலிந்தோர்க்கு
நலம்செய்தார்
மானியம் என்று..

வலிந்தோர்க்கு
வாழ்வளித்தார்
வாரியம் என்று...

பல கலைகளுக்கு
பல்கலை செய்தார்
பல்கலைக்கழகம் என்று...

முடியதார்க்கு
முடியுமென்றார்
இலவசம் என்று...

சமமாயிரு சாதியை அறு
சமத்துவம் பெறு என்றார்
சமத்துவபுரம் என்று...

கலையுலத்தை
கலக்கிடச்செய்தார்
கலைமாமணி என்று...

கல்வி அனைவருக்கும்
சமம் என்றார்
சமச்சீர் என்று...

காவல்துறையை
காத்திட செய்தார்
ஆணையம் என்று...

சென்னையை
செம்மைப்படுத்தினார்
சிங்கார சென்னை என்று...

தமிழை
தரமேற்றினார்
செம்மொழி என்று...

சொல்லில் அடங்குமோ
சொல்வேந்தரை பற்றி...
சொல்ல சொல்ல முடியுமோ
செய்த செயல்களை பற்றி...

முத்தமிழ் அறிஞரே
உன்புகழ் வாழ்கவே!!!

Wednesday, August 8, 2018

கலைஞர் எங்கள் CM


திட்டங்களின் நாயகன்


தாயே அஞ்சுகமே எத்தனை
திட்டங்கள் தீட்டினாயோ இத்தகை
பெருந்தலைவனை ஈன்றாடுக்க
திட்டங்கள் தீட்டவே
திட்டம் போட்டு வந்தாயோ?
திட்டங்களால் தமிழகத்தை
திக்குமுக்காட செய்த திராவிடனே!.
தமிழகத்தின் காரணகர்த்தா
செம்மொழி கண்ட தாத்தா
சொல்வேந்தர் செயல்வேந்தர்
ஒன்றா இரண்டா சொல்ல இதோ...
1. இலவச சைக்கிள் ரிக்க்ஷா வழங்கப்பட்ட திட்டம்.
2.  இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.
3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.
4. இலவச மின்சாரத் திட்டம்.
5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம்
6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்.
7. குடிசை மாற்று வாரியம் திட்டம்.
8. குடிநீர் வாரியம் திட்டம்.
9. இலவச வீடுகள் வழங்கும் திட்டம்.
10. துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.
11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்படும் திட்டம்.
12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி திட்டம்.
13. விவசாயிகளுக்கு கடன் ரத்து திட்டம்
14. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த் திட்டம்.
15. நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள்.
16. மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து திட்டம்.
17. முட்டைகள் வாழைப்பழம் வழங்கும் திட்டம்.
18. புதிய பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள்.
19. இலவச பேருந்து பாஸ் திட்டம்.
20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி.
21. சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் திட்டம்.
22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.
23. தமிழ் செம்மொழி என அறிவிப்பு.
24. தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம்.
25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை திட்டம்.
26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு நிதி உதவி திட்டம்.
27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி திட்டம்
28. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.
29. திருமணம் ஆகாத மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.
30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் சுழல் நிதி உதவிகள்.
31. இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழுக்கள்.
32. இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் திட்டம்.
33. எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் திட்டம்.
34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.
35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.
36. நமக்கு நாமே திட்டம்.
37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
38. திருச்சியில் உய்யகொண்டான் திட்டம்
39. மாநிலத்திற்குள் நதிகளை இணைக்கும் மாபெரும் திட்டம்.
40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக்கடைத் திட்டம்.
41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம்.
42. சிங்காரச் சென்னை திட்டம்.
43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
44. பத்தாயிரம் புதிய பேருந்துகள் திட்டம்.
45. புதிய சட்டமன்ற வளாகம் தலைமைச் செயலகம்.
46. உலகத் தரத்தில் அண்ணா அரசு நவீன நூலகம்.
47. உழவர் சந்தைத் திட்டம்.
48. அரசுத் துறைகளில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
50. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.
51. இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள்.
52. வருமுன் காப்போம் திட்டம்.
53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.
54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம் திட்டம்.
55. புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்வோருக்கு வீட்டு மனைப்பட்டா.
56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு திட்டம்.
57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.
58. மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு.
59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.
60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.
61. அரசு அலுவலர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டம்.
62. விடுதலை வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள், நிதி உதவி.
63. சென்னையில் வள்ளுவர் கோட்டம்
64. அரசு போக்குவரத்துக் கழகங்கள் அமைப்பு
65. சேலத்தில் திருமணிமுத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.
66. குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.
67. கான்கிரீட் சாலை திட்டம்.
68. கிராமப்புற இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு
69. உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு
70. ஆசியாவில் முதல் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம்.
71. கோவை விவசாய பல்கலைக்கழகம்.
72. நேரடி நெல் கொள்முதல் திட்டம்
73. தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதிக்கீடு இலவச கல்வி திட்டம்
74. பசுமை புரட்சி திட்டம்.
75. மனு நீதி திட்டம்.
76. பூம்புகார் கப்பல் நிறுவன திட்டம்.
77. SIDCO SIPCOT திட்டம்.
78. சேலம் உறுகாலை, நெய்வேலி நிலக்கரி மின்னுற்பத்தி திட்டம்.
79. சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை திட்டம்.
80. கிராமங்களுக்கு சாலை வழித்தடம்
81. கருணை இல்லம் திட்டம்
82. நிலவிற்பனை வரையறை திட்டம்
83. எந்நேர மருத்துவ சேவை திட்டம்
84. உருது அகாடமி
85. இலக்கை தமிழர்களுக்குகான போராட்டம்
86. மேற்படிப்பிற்கு உதவித்தொகை திட்டம்
87. தியாகிகளுக்கு மணிமண்டபங்கள்.
88. பல துறைகளுக்கு புதிய புதிய கட்டிடங்கள்
89. கால்நடை பாதுகாப்பு திட்டம்
90. மதுரை உயர்நீதிமன்றம் அமைத்தது
91. டைடல் பார்க் நிறுவியது
92. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைத்தது
அப்பப்பா
மெட்ராஸ் சென்னை ஆக்கியது.

Saturday, August 4, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - உற்ற நண்பன்

நவீன திருக்குறள்
அதிகாரம் - உற்ற நண்பன்
--------------------------------------------

1. துன்பமும் நெருங்கிட யோசிக்கும் உற்ற
நண்பனும் அருகில் இருக்கையிலே.

2. உடன் வரும் செல்லுமிடம் உயர்வை
தரும் படித்த படிப்பு.

3. ஆறறிவு நம்பிக்கை உழைப்பு நேர்மை 
என்றும் உற்ற நண்பன்.

4. நினைக்கலாம் நண்பனும் தீங்கு ஒருபோதும்
நினையார் பெற்ற பெற்றோர்.

5. உன் உறவுகளை தேர்ந்தெடுப்பது ஊழ்வினை
நண்பனைத் தேர்ந்தெடுப்பது நீயே.

6. எதிரியின் முத்தங்களை விட உற்ற
நண்பனின் திட்டுகளே சிறந்தது.

7. பிறரிடம் அன்பாக இருப்பது சிறந்தது
உன்னிடமே இருப்பது சாலச்சிறந்தது.

8. நம்பிக்கையை காப்பவன் மனிதன் நம்பும் 
கையை விரிப்பவன் மாந்தன்.

9. நிகழ்காலம் வீணடித்தால் வரும் எதிர்காலம்
உனக்கு எதிரான காலமாகும்.

10. மனிதனுக்கு மானமும் மதியும்  அழகு
மரியாதையும் மனசும் பேரழகு.

Friday, August 3, 2018

காதல் பாடல் #12

காதல் பாடல் #12
-------------------------------

தேடி தேடி பார்த்தாலும் அன்பே உன்ன போல வருமா.
கோடி கொட்டி கொடுத்தாலும் கண்ணே உனக்கு ஈடு யாரம்மா.
நாடி பிடித்து பார்க்கையிலே ஆயுள் ஓட்டம் நீயம்மா.
பாடி பேசி நிற்க்கையிலே வருவ தொல்லாம் உன் பெயரம்மா.

சரணம்
-------------
என் உறக்கத்திலும் உன்னை கொஞ்ச மனம் கெஞ்சுதம்மா.
என் கனவிலும் முத்தங்கள் கொடுக்க காதல் தாகம் தீரலம்மா.
அழகிற்கே உருவம் நீயம்மா. 
கவிதைக்கு காரணம் நீயம்மா
அடியே செல்லம்மா காதல் சொல்லம்மா 
எனையே கொல்லம்மா இல்லையேல் காதல் கொள்ளம்மா.

சரணம்
--------------
எந்த தேடலிலும் ஆரம்பம் முடிவு உந்தன் முகம்தானம்மா.
வந்த முடிவிலும் முடிவில்லா முகம் உந்தன் முகம்தானம்மா.
வாழ்வே நீதானே கன்னம்மா.
நீயில்லா வாழ்க்கை வீணம்மா.
அடியே செல்லம்மா காதல் சொல்லம்மா 
எனையே கொல்லம்மா இல்லையேல் காதல் கொள்ளம்மா.

Thursday, August 2, 2018

வர்ணனை பாடல்

வர்ணனை பாடல்
*******************

கண்ணே வெட்கப்படு உன்னை பார்த்தால்
மருதாணியும் கடன் கேட்கும்.
பெண்ணே சிரித்துவிடு உன்னை பார்த்தால்
பூக்களோ உடன் வியக்கும்.
சுற்றும் பூமியும் நின்று உன்னை பார்க்கும்.
வானம் தலை நிமிர்ந்து உனக்காக குடை பிடிக்கும்.
அழகோ அழகின் அழகோ 
இயற்கை போற்றும் பேரழகோ.

சரணம்
*********

மெல்லிய தென்றல் உன் முகம் 
பாலினும் வெண்மை உன் அகம்
இருபது வயது மழலை உன் பேச்சு 
ஆச்சரியம் கூட்டும் எரிமலை உன் மூச்சு 
பாடும் குயிலின் ஓசை உன் குரல் 
சிதறிய மயில் தோகை உன் கூந்தல் 
சிப்பிக்குள் அடைக்க பட்டிருக்கும் முத்துக்கள் உன் பற்கள் 
இமயம் போல் உயர்ந்திருக்கும் புருவங்கள் 
மாசற்ற மாணிக்கம் உன் கண்கள்
சொல்ல சொல்ல இயற்கை கொஞ்சும் அழகு
மெல்ல மெல்ல இயற்கையே கெஞ்சும் அழகு.

சரணம்
*********

இரண்டு வாழைத்தண்டு கால்களிலே நாதஸ்வரம்.
ஓயாமல் ஒலிக்கும் இடி ஓசை கேட்கும் வரம்.
வெண்மேகம் தானே அவள் கொண்ட தேகம்.
வருமே அடிக்கடி என்னில் எனக்கே சந்தேகம். 
பொன்னகை திமிர் போனது காரணம் உன் புன்னகை.
முயலின் ஆட்டம் உன் நடை 
பார்த்தால் மனம் சறுக்கும் மெல்லிடை
உடுத்திட மேலும் அழகாகும் உடுத்தும் உடை
உலகம் தேடும் அழகிற்கு நீதானே விடை.
சொல்ல சொல்ல இயற்கை கொஞ்சும் அழகு
மெல்ல மெல்ல இயற்கையே கெஞ்சும் அழகு.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...