Saturday, June 30, 2018
காதல் பாடல் #7
காதல் பாடல் #7
*****************
சூரியன் சுடவில்லை சந்திரன் ஒளிரவில்லை
மேகங்கள் அலையவில்லை விண்மீன்கள் ஜொலிக்கவில்லை
இரவு பகல் தெரியவில்லை காலம் நேரம் அறியவில்லை
காரணம் என்னை ஏனோ என்னில் காணவில்லை
கண்ணே உன்னில் தேடிட காதல் குறையவில்லை
சரணம்
********
படுக்கையில் படுத்திட உறக்கம் வரவில்லை
கண்கள் மூடிட கனவுகள் தீரவில்லை
தேவதை நீவந்திட காட்சிகள் ஓயவில்லை
தேவைகள் நீதந்திட விடியல் தெரியவில்லை
இரவில் என்னை கடத்தி கனவில் குடும்பம் நடத்தி
விழியில் நாளும் நிறுத்தி ஜாலம் செய்யும் ஒருத்தி
காரணம் என்னை ஏனோ என்னில் காணவில்லை
கண்ணே உன்னில் தேடிட காதல் குறையவில்லை
சரணம்
********
நடக்கையிலே பாதையின் நீளம் குறையவில்லை
நினைக்கையிலே உன்னை தவிர ஏதுமில்லை
பேசுகையிலே வருவது உன்பெயரின்றி வேரில்லை
வேலையிலே வேளைக்கு வேளை மறக்கவில்லை
பகலில் என்னை உடுத்தி எங்கும் பாடாய் படுத்தி
அலைய விடுகிறாய் சிறுக்கி அலைகின்றேன் நான் பொறுக்கி
காரணம் என்னை ஏனோ என்னில் காணவில்லை
கண்ணே உன்னில் தேடிட காதல் குறையவில்லை
Wednesday, June 27, 2018
நவீன திருக்குறள் - அதிகாரம் - உன்னால் ஆகும்
நவீன திருக்குறள்
அதிகாரம் - உன்னால் ஆகும்
#######################
1. நாளை உன்னால் ஆகும் ஆனாதென்றால்
உன் நாளும் ஆகும்.
2. ஆகாததும் உன்னால் ஆகும் ஆகுமென்ற
எண்ணம் உன்னுள் ஓங்கியிருந்தால்.
3. முன்னேறி செல் முன்னேற செல்
எதுவும் உன்னால் ஆகும்.
4. வெறுப்பது களைந்து விருப்பது மிகுந்து
வாழ் உன்னால் ஆகும்.
5. நாளை நாளையென்று நாட்களை நகர்தாதே
நம்பிக்கைகொள் உன்னால் ஆகும்.
6. துளிர்விடும் நம்பிக்கையில் ஒளிந்துள்ள திறமைகளை
ஒளிரவிடு உன்னால் ஆகும்.
7. உன்னால் ஆகும் உன்னாலே ஆகும்
முயன்று முயற்சி செய்தால்.
8. ஆகும் ஆகுமென யேசி ஆயிரம்
வந்தாலும் உன்னால் ஆகும்.
9. தேவைஉள்ளதற்கு தொடர்புள்ளியும் தேவையில்லாததற்கு முற்றுப்புள்ளியும்
வைத்திடு உன்னால் ஆகும்.
10. முடியாததென உலகிலில்லை முயன்றுபார் முடியாததும்
நிச்சயம் உன்னால் ஆகும்.
Saturday, June 23, 2018
காதல் பாடல்#6
காதல் பாடல்#6
++++++++++++++
காதல் என்றும் பழையது
நாம் செய்யசெய்ய ஆகும் புதியது.
அனைவர் மனதில் நிகழ்வது
நம் உயிர்மெய்யில் என்றும் கலந்தது.
கொல்வோம் மோதல் சாதல்
கொள்வோம் காதல் காதல்
சரணம்
+++++++
இளமையில் ஏற்கவைக்கும் முதுமையில் நினைக்கவைக்கும்
தனிமையில் உளரவைக்கும் இனிமையில் மலரவைக்கும்
மடமையில் புலம்பவைக்கும் கொடுமையில் அளறவைக்கும்
ஆயிரம் ஆயினும் உண்மையில் உன்னை அழகாக்கும் காதல்.
நினைத்தாலே துரத்தும் மறந்தாலோ நினைவூட்டும் காதல்.
என்றும் உடன்வரும் காதல் காதல்.
உன்னுடன் உடன்ஏறும் காதல் காதல்.
சரணம்
+++++++
பார்க்கையில் பற்றிக்கொள்ளும் பேசுகையில் தொற்றிக்கொள்ளும்
சிரிக்கையில் குழையவைக்கும் பழகுகையில் நெழியவைக்கும்
அசைகையில் அதிரவைக்கும் அமைகையில் சிதறவைக்கும்
என்னதான் ஆனாலும் சேருகையில் வாழ்வை அர்த்தமாக்கும் காதல்.
நினைத்தாலே துரத்தும் மறந்தாலோ நினைவூட்டும் காதல்.
என்றும் உடன்வரும் காதல் காதல்.
உன்னுடன் உடன்ஏறும் காதல் காதல்.
எழுந்து வா பாடல்
எழுந்து வா பாடல்
??????????????????
எழுந்து வா விரைந்து வா தோழா
விழுந்ததே எழுகதானே தோழா!
நடந்ததை நினைப்பதால் தோழா
பயன்ஏதும் இல்லைதானே தோழா!
ஏற்றி விட வருவாரென எண்ணாதே தோழா
நீயே எழக் கற்று கொள் வெற்றி அதுதானே தோழா!
சரணம்
????????
அறிவை திறந்து வா
அச்சம் துறந்து வா தோழா!
ஆயுதம் புதைத்து வா
அன்பை விதைத்து வா தோழா!
விழுந்தால் விதையாக இரு தோழா!
எழுந்தால் விருட்சமாக மாறு தோழா!
வா வா எழுந்து வா தோழா
வானம் தொட்டு விட வேண்டுமென்று வையமும் வென்று விட கூடுமென்று வா வா விரைந்து வா தோழா!
சரணம்
????????
கால்களில் ரெக்கை வை
கைகளில் நம்பிக்கை வை தோழா!
கண்களில் நேர்மை வை
கனவுகளில் உண்மை வை தோழா!
அறிவினை விரிவாக்கம் செய் தோழா!
அண்டமும் உனதாகும் கேள் தோழா!
வா வா எழுந்து வா தோழா
வானம் முழுதும் உன் பெயரெழுத வையம் முழுதும் உன் புகழெழுத
வா வா விரைந்து வா தோழா!
Friday, June 22, 2018
காதல் பாடல்#5
காதல் பாடல்#5
*****************
உன்னாலே உன்னாலே
உளறுகிறேன் உறங்கையிலே.
தன்னாலே தன்னாலே
தவிக்கிறேன் தனிமையிலே.
நான் என்ன செய்ய என்ன செய்ய கண்ணுக்குள்ள நீதானே.
நான் உன்ன மட்டும் உன்ன மட்டும் நெஞ்க்குள்ள வைச்சேனே.
சரணம்(ஆண்)
****************
சுற்றி சுற்றி பார்க்குறேன் தலைசுற்றி நிக்குறேன்
பார்க்கும் இடமெல்லாம் உன்முகம்.
முட்டி முட்டி மோதுறேன் தூக்கமின்றி தவிக்குறேன்
தூங்கத்தில் கனவெங்கும் உன்வரம்.
பூவை பார்த்தா ரசிக்கிறேன் எனக்குள் நானே சிரிக்குறேன்.
மழலையாக மாறி தவழ்கிறேன் மடியில் ஏறி குதிக்குறேன்
காதல் இதுதானானு எனக்குள்ள நானே கேட்குறேன்
சொல் செல்லமே செல்லம்.
சரணம் (பெண்)
******************
ஏனோ எனை மறக்குறேன் பசிதூக்கம் இழக்குறேன்
காரணம் எல்லாமே உன்லீலை.
தேனே மானே படிக்குறேன் தேர்விலும்மே எழுதுறேன்
காரணம் யோசித்தால் உன்ரகளை.
உன்னையே நித்தம் யோசிக்கிறேன்
எனக்குள் மாற்றம் உணர்கிறேன்
கண்ணிமை மூட மறுக்கிறேன் இமைகள்மூட கனவில் மிதக்கிறேன்.
காதல் இதுதானானு எனக்குள்ள நானே சொல்கின்றேன்
கண்ணே எந்தன் கண்ணாலனே.
Thursday, June 21, 2018
வலிகள்
அ'தீத அன்பு அக்கறை,
ஆ'னந்தம் தரும் நினைவுகள்,
இ'டைவிடாது உழைத்து பயன்படாது போதல்,
ஈ'கை செய்து ஏமாறுதல்,
உ'டையும் உன்னத உறவுகள்,
ஊ'ரைவிட்டு பரதேசியாக தரிதல்,
எ'திர்பாராது வரும் தோல்விகள்,
ஏ'ளனம் அவமானம் நிகழ்ந்தது,
ஐ'யம் கொண்ட நட்பு,
ஒ'ருதலை காதல்,
ஓ'டி கிடைக்காத நிமிடங்கள்,
ஔ'டதம் தொடர்ந்து எடுத்தல்
அஃ'து வலிக்கும்.
Wednesday, June 20, 2018
மகளை பற்றி பாடல்
மகளை பற்றி பாடல்
**********************
மகளே செல்லமகளே
பூவாய் பிறந்தவளே. பூவாகி நின்றவளே பூமுகமாய் சிரிப்பவளே.
பூக்களெல்லாம் தலைவணங்கும் பூவுலக தலைமகளே.
பூக்களும் உன்னை சூடிக் கொள்ள ஏங்கிடும் குலமகளே.
சரணம்
*********
சிரிப்பையும் அழுகையும் அழகென்று அறிய வைத்தாய்.
யாழினிது குழலினிது அர்த்தம் புரிய வைத்தாய்.
ஆணாதிக்க திமிர் உடையை உரிய வைத்தாய்.
அன்பே கடவுள் என்பதை தெரிய வைத்தாய் அன்பு மகளே!
இன்பப்புள்ளியில் தொடங்கி
துன்பத்தை முற்றுப்புள்ளியாக்கி
நான் வரைந்த வண்ண மிகு கோலம் நீ அன்பு மகளே!!
சரணம்
*********
அன்பையும் பாசத்தையும் கற்றுதந்த முதல் ஆதாரமே.
மண்ணோ விண்ணோ கண்டிடாத அழகு முத்தாரமே.
உலக மானுட பிறவிகளின் முதல் வித்தாரமே.
என்றும் வாழ்க்கையில் மகளே இல்லை சேதாரமே அன்பு மகளே!
உன்னன்பில் தொடங்கி
உன்னன்பிலேயே முடிகிறதே
நான் சுற்றும் எல்லை இல்ல உலகம் நீ அன்பு மகளே!!
Monday, June 18, 2018
கவிதையும் பெண்ணும் பாடல்
கவிதையும் பெண்ணும் பாடல்
%%%%%%%%%%%%%%%%%%%%%%
பெண்ணே உன்னை உனக்கு தெரியுமா
நீதானே கவிதை என்பது புரியுமா?
படைப்பிலே நீயும் கவிதையும் ஒன்றென்பதை உலகம் தெளியுமா அறியுமா!?
சரணம்
%%%%%%
வார்த்தை கோலங்களோ அவள் மாயாஜாலங்கள்.
சிரிக்கும் சிரிப்போ வரும் எதுகை மோனை.
நடையில் இடையினம் பேசினால் மெல்லினம் கோபித்தால் வல்லினம்.
கவிதையால் நீ அழகோ உன்னால் கவிதைக்கு அழகோ.
இரண்டுமென்றால் அழகிற்கு அழகோ.
சரணம்
%%%%%%
எழுத்தை கோர்ப்பதாலோ அவள் வார்த்தையாகிறாள்.
வார்த்தைக்கு வார்த்தை வரும் வர்ணனை வாழ்க்கை.
எழுத்தில் புதுகவிதை ஆச்சர்யத்தில் ஹைக்கூ நிகரில்லா மரபுகவிதை.
கவிதையால் நீ அழகோ உன்னால் கவிதைக்கு அழகோ.
இரண்டுமென்றால் அழகிற்கு அழகோ.
Friday, June 15, 2018
காதல் பாடல்#4
காதல் பாடல்#4
பல்லவி
--------------
நீயோ ஒரு காதல் புத்தகம்
அன்பே உன் வாசகன் நான்
படிக்க படிக்க திகட்டாத சிறுகதையே
முடிக்க முடிக்க தொடரும் தொடர்கதையே
விதையாய் என்னுள் விழுந்து விருட்சமான கவிதையே
சரணம்
-------------
வாசிக்க வாசிக்க ஆகின்றேன் நானோ கவிஞன்.
நேசிக்க நேசிக்க ஆகிறாய் நீயோ அறிஞன்.
பக்கத்திற்கு பக்கம் புரட்ட புரட்ட படிக்கிறேன் பாடம்.
துணுக்குக்கு துணுக்கு திரட்ட திரட்ட அனைத்தும் மனப்பாடம்.
எனது எழுத்துகளில் வார்த்தைகளில் வாக்கியத்தில் வாய்மொழி அகராதி நீ நீ நீ.
சரணம்
--------------
தேடிட்டு தேடிட்டு நிற்கையில் புரியா வாக்கியம்.
கோடிட்டு கோடிட்டு படிக்கையில் ஆவாய் முக்கியம்.
வயசிற்க்கு வயசு துடிக்க துடிக்க வாராதே பாரம்.
மனசிற்க்கு மனசு படிக்க படிக்க ஆவாயோ சம்சாரம்.
எனது வாழ்க்கையின் பக்கங்களை வடித்துவிட்டு பார்க்கையில் முழுவதும் நீ நீ நீ.
Wednesday, June 13, 2018
காதல் பாடல்#3
காதல் பாடல்#3
*****************
அடியே உன்னதானே நெனச்சிருக்கேன் புள்ள.
அந்த நெனப்புலதான் உயிர்நிலைக்கும் உள்ள.
நீ இல்லாட்டா நான் உலகத்துல ஒண்ணுமில்ல.
நீதானே என் வாழ்வின் உலக எல்ல.
சரணம்
********
உன்னை காணது கண்களில் தூக்கம் இல்ல
இமைகள் மூடினால் கனவில் நீதானே புள்ள.
நீதானே அழகுனு உன்னைபத்தி ஊரே சொல்ல
எனக்கோ நீ காணா அதிசயம் புள்ள.
சொல்ல சொல்ல இனிக்கும் உள்ள உள்ளுக்குள்ள ஏதோ துள்ள
மனம் தொட்டு சத்தியமாய் சொல்ல
உன்னபோல எவளும் உலகத்துல இல்ல.
சரணம்
*********
என்னை கொள்ளை செய்தது நீதானே புள்ள
புதுபுது கவிதைகள் வடிக்க வைத்தாயே மெல்ல.
எனக்குள் சலனம் விதைத்தாயே புள்ள
எனையே முழுதாய் களவாடி போனாயே நல்ல.
அள்ள அள்ள குறையாது உள்ள
உன்மேலஉள்ள நேசம் புள்ள.
இந்த உலகம் காணாத காதல் உன்மேல எதற்கும் ஈடுஇணையே இல்ல.
Tuesday, June 12, 2018
நம்பிக்கை பாடல்
நம்பிக்கை பாடல்
&&&&&&&&&&&&&&
பல்லவி
&&&&&&&
ஆயிரம் தடைகள் வருமடா
அதை நீ உடைத்து செல்லடா
துணிவே துணையாய் கொள்ளடா
துணிந்தே எதையும் செய்யடா
வேதனைகளை வேரறுத்து காட்டடா
சோதனைகளை சாதனைகளாய் மாற்றடா!
சரணம்
&&&&&&&
ஊரார் சொல்லில் இல்லையடா
உனது உள்ளத்தில் இருக்கிறது மாற்றமடா.
உள்ளங்கை ரேகையில் இல்லையடா
உனது நம்பிக்'கையில் இருக்கிறது வாழ்க்கையடா.
நீ வெறும் தீயல்ல எரிமலை என்று சொல்லடா.
வரும் தோல்வியை தோளில் தூக்கி வைத்து அதன் தோளில் ஏறி வெற்றிக்கொடி கட்டடா.
சரணம்
&&&&&&
உன்னை அறிந்து கொள்ளடா
உன்னால் முடியும் என்றே சொல்லடா.
எதற்கும் பயந்தால் ஆகாதடா
அதை உழைத்தே விரட்டி ஓட்டடா.
வா முடியாது என்றல்ல வாழமுடியும் என்று சொல்லடா.
வரும் தொல்லைகளை தொலைவில் துரத்தி விரட்டு கனவு எல்லையில் ஏறி உண்மைக்கொடி வீசடா.
Saturday, June 9, 2018
அம்மா பாடல்
அம்மா பாடல்
###########
பல்லவி
#######
அம்மா என்றால் அதில் உலகம் அடங்குதம்மா.
உயிர்கள் அனைத்தும் அந்த சொல்லில் அடங்குமம்மா.
உலகில் கடவுள் என்றொன்று சொன்னால் அது அம்மாதானே.
தன்னலம் பார்க்காது நம்நலம் மட்டுமே பார்க்கும் அன்னை தாயே
பல்லாண்டு வாழ்க நீயே.
சரணம்
#######
தன் உயிரை பணயம்வைத்து உயிராய் பெற்றவள்.
தன் இரத்தத்தை பாலாக்கி பரிவோடு ஊட்டுபவள்.
தன் தூக்கத்தை துறந்து இசையோடு தாலாட்டுபவள்.
தன் பசியை மறந்து பிள்ளைக்கு உணவளிப்பவள்.
அன்பிலும் அரவணைப்பிலும் உனக்கு ஈடேதம்மா.
கொடுப்பதிலும் விட்டுக்கொடுப்பதிலும் நீ நீயே அம்மா.
உண்மையில் நான் வெறும் மெய்யே உன்னால் தானே ஆனேன் நான் உயிர்மெய்யே.
சரணம்
#######
தன் மனம் வாடினாலும் நொடிக்காது காப்பவள்.
தன் தேவையை நினைக்காது குடும்பதிற்காக உழைப்பவள்.
தன் உலகம் பிள்ளை குடும்பம்மென வாழ்பவள்.
தன் வாழ்வை நமக்காக சுகமாய் கரைபவள்.
துன்பத்தை தவிடுபொடியாக்கும் வல்லமை நீயேஅம்மா.
உயிராவதும் உயிராயிருப்பதும் நீ நீயே அம்மா.
உண்மையில் நான் வெறும் மெய்யே உன்னால் தானே ஆனேன் நான் உயிர்மெய்யே.
Thursday, June 7, 2018
கிறுக்கல்கள் V ✍ 10.3
கிறுக்கல்கள் V ✍ 10.3
அன்பின் உச்சகட்டம் அரவணைப்பு!
பாசத்தின் உச்சகட்டம் அம்மா!
நட்பின் உச்சகட்டம் உதவி!
வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை!
கோபத்தின் உச்சகட்டம் பொறுமை!
தண்டனையின் உச்சகட்டம் மன்னிப்பு!
காதலின் உச்சகட்டம் பிரிவு!
கடவுளின் உச்சகட்டம் கருணை!
ஆனந்தத்தின் உச்சகட்டம் கண்ணீர்!
தவறின் உச்சகட்டம் மனசாட்சி!
பாசத்தின் உச்சகட்டம் அம்மா!
நட்பின் உச்சகட்டம் உதவி!
வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை!
கோபத்தின் உச்சகட்டம் பொறுமை!
தண்டனையின் உச்சகட்டம் மன்னிப்பு!
காதலின் உச்சகட்டம் பிரிவு!
கடவுளின் உச்சகட்டம் கருணை!
ஆனந்தத்தின் உச்சகட்டம் கண்ணீர்!
தவறின் உச்சகட்டம் மனசாட்சி!
மனிதனின் உச்சகட்டம் மனிதம்!
Facebook love song
Facebook love song
@@@@@@@@@@
@@@@@@@@@@
பல்லவி
@@@@@
@@@@@
Facebookகில் கண்டேன் முகம்
Outlookகில் மகிழ்ந்தேன் அகம்
Likeகால் தினம் அள்ளுது அள்ளுது
Strikeகால் மனம் கொல்லுது கொல்லுது
Friend request கொடுக்க சொல்லுது சொல்லுது
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
Outlookகில் மகிழ்ந்தேன் அகம்
Likeகால் தினம் அள்ளுது அள்ளுது
Strikeகால் மனம் கொல்லுது கொல்லுது
Friend request கொடுக்க சொல்லுது சொல்லுது
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
சரணம்
@@@@@
@@@@@
தினம் Friends list கூடிக் கொண்டே போகலாம்.
உன்னை தினமும் நினைக்கும் ஒரே Friend நான்தானே.
நீ போடும் Postக்கு Likes comments குவியலாம்.
உன்னையே Like பண்ணும் எனக்கு கொடுப்பாயோ காதல் Post.
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
உன்னை தினமும் நினைக்கும் ஒரே Friend நான்தானே.
நீ போடும் Postக்கு Likes comments குவியலாம்.
உன்னையே Like பண்ணும் எனக்கு கொடுப்பாயோ காதல் Post.
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
சரணம்
@@@@@
@@@@@
உனது Profile பார்த்தே என் Profile மாறியது.
போடும் Photos videosக்கு ஒரே ரசிகன் நான்தானே.
நீ Online வந்தால் மனமே பறக்கும் சிறகடிக்கும்.
Messenger Download செய்தேன் உனக்காக அனுப்புவாயா ஆம்மென்ற Message.
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
போடும் Photos videosக்கு ஒரே ரசிகன் நான்தானே.
நீ Online வந்தால் மனமே பறக்கும் சிறகடிக்கும்.
Messenger Download செய்தேன் உனக்காக அனுப்புவாயா ஆம்மென்ற Message.
What you say கண்ணே கண்ணே.
Accept to live பெண்ணே பெண்ணே.
Sunday, June 3, 2018
நவீன திருக்குறள் அதிகாரம் - உண்மை தத்துவம்
நவீன திருக்குறள்
அதிகாரம் - உண்மை தத்துவம்
@@@@@@@@@@@@@@@@@@
அதிகாரம் - உண்மை தத்துவம்
@@@@@@@@@@@@@@@@@@
1. செல்வத்திற்காக ஆரோக்கியம் இழப்பான் பின்நாளில்
செல்வத்தை செலவளிப்பான் ஆரோக்கியத்திற்காக.
செல்வத்தை செலவளிப்பான் ஆரோக்கியத்திற்காக.
2. நாளை நாளையென்று இருக்கும் நாட்களை
கழிப்பான் நேரமில்லையென்றும் புலம்புவான்.
கழிப்பான் நேரமில்லையென்றும் புலம்புவான்.
3. எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தை வீணாக்குவான் பிற்காலத்தில்
கடந்தகாலத்தை நினைத்தே ஏங்குவான்.
கடந்தகாலத்தை நினைத்தே ஏங்குவான்.
4. ஆசை ஆசையென்று சேர்த்து கொள்வான்
பேராசையால் ஆபத்தை பார்ப்பான்.
பேராசையால் ஆபத்தை பார்ப்பான்.
5. எப்படி நீ யோசிக்கிறாயோ அப்படிதான்
உன் வாழ்க்கை அமையும்.
உன் வாழ்க்கை அமையும்.
6. அடக்கம் அடங்காமை இரண்டும் அடங்கும்
முடங்கும்நாள் அனைவருக்கும் அடக்கம்.
முடங்கும்நாள் அனைவருக்கும் அடக்கம்.
7. நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பிக்கையை நம்பி
முயற்சியை கைவிட்டு விடாதே.
முயற்சியை கைவிட்டு விடாதே.
8. விலை கொடுத்து ஆயிரம் வாங்கினாலும்
வாங்கயியலா ஆபரணம் பண்பு.
வாங்கயியலா ஆபரணம் பண்பு.
9. ஆயிரம் சதுரடியில் மாளிகை கட்டுவான்
ஆறடிநிலம்தான் செந்தமென்று தெரியாமல்.
ஆறடிநிலம்தான் செந்தமென்று தெரியாமல்.
10. மரணமில்லை என்பதுபோல வாழ்வான் ஏதேனும்
நிகழ்ந்தால் மரணமே வாழ்வென்பான்.
நிகழ்ந்தால் மரணமே வாழ்வென்பான்.
ஆக்டிங் ஓவர் ஆக்டிங் பாடல்
ஆக்டிங் ஓவர் ஆக்டிங் பாடல்
பல்லவி
..................
..................
மேலே ஒருவன் நடத்துறான் நாடகம்.
மேடைல நடித்து அசத்துறோம் நாமும்.
வாழ்க்கை ஒரு நாடக மேடைதான்.
வந்தோம் சேர கூத்து கட்டத்தான்.
நீயென்ன நானென்ன போய் சேருமிடம் எல்லாம் ஒண்ணுதான்.
மேடைல நடித்து அசத்துறோம் நாமும்.
வாழ்க்கை ஒரு நாடக மேடைதான்.
வந்தோம் சேர கூத்து கட்டத்தான்.
நீயென்ன நானென்ன போய் சேருமிடம் எல்லாம் ஒண்ணுதான்.
சரணம்
.................
.................
மாதம் முழுதும் ஓடுறோம் உழைக்கிறோம்
துட்டு கிடைக்க நாயா நசுங்குறோம்
பிடிக்காத போதும் சிரிப்பா சிரிக்கிறோம்
பிடிச்சி இருந்தும் எரிஞ்சு விழுகிறோம்
இப்படி நடிச்சி நடிச்சி நம்ம தொலைக்கிறோம்.
யேசிச்சி பாரு உனக்கிங்கு யாரு
உண்ம புரிஞ்சா ரொம்ப ஜோரு.
துட்டு கிடைக்க நாயா நசுங்குறோம்
பிடிக்காத போதும் சிரிப்பா சிரிக்கிறோம்
பிடிச்சி இருந்தும் எரிஞ்சு விழுகிறோம்
இப்படி நடிச்சி நடிச்சி நம்ம தொலைக்கிறோம்.
யேசிச்சி பாரு உனக்கிங்கு யாரு
உண்ம புரிஞ்சா ரொம்ப ஜோரு.
சரணம்
..................
..................
காதல் தொல்லைனு ஆசையா நடிக்குறோம்
மனைவி பிள்ளைனு பாசமா நடிக்கிறோம்
உறவு பிரிவுனு என்னமா நடிக்கிறோம்
நட்பு உயிர்னு தொடர்ந்து நடிக்கிறோம்
இப்படி நடிப்பா நடிச்சி அவார்டு வாங்குறோம்
ஓவர் எக்டிங் டேஞ்சர் பாரு.
கொடுத்த பாத்திரம் நடிச்சுக்க உஷாரு.
மனைவி பிள்ளைனு பாசமா நடிக்கிறோம்
உறவு பிரிவுனு என்னமா நடிக்கிறோம்
நட்பு உயிர்னு தொடர்ந்து நடிக்கிறோம்
இப்படி நடிப்பா நடிச்சி அவார்டு வாங்குறோம்
ஓவர் எக்டிங் டேஞ்சர் பாரு.
கொடுத்த பாத்திரம் நடிச்சுக்க உஷாரு.
Friday, June 1, 2018
நவீன திருக்குறள் அதிகாரம் - அப்பாவும் அம்மாவும்
நவீன திருக்குறள்
அதிகாரம் - அப்பாவும் அம்மாவும்
#################################
அதிகாரம் - அப்பாவும் அம்மாவும்
#################################
1. உலகத்தை அறிமுகப்படுத்தியவள் அம்மா உலகம்யாதென
தெரிய செய்தவர் அப்பா.
தெரிய செய்தவர் அப்பா.
2. உயிர்மெய் கொடுத்தாள் அம்மா உயிருடன்
வாழ்க்கையும் கொடுத்தவர் அப்பா.
வாழ்க்கையும் கொடுத்தவர் அப்பா.
3. பட்டினிகிடக்க விடமாட்டாள் அம்மா உணவினருமை
புரிய வைப்பார் அப்பா.
புரிய வைப்பார் அப்பா.
4. விழுந்தால் தூக்கிவிடுவாள் அம்மா விழுந்தால்
முயன்று எழுயென்பார் அப்பா.
முயன்று எழுயென்பார் அப்பா.
5. கடமையை கூடவிடென்பாள் அம்மா ஒழுங்காக
கடமையாற்று என்பார் அப்பா.
கடமையாற்று என்பார் அப்பா.
6. வயிற்றில் சுமந்தவள்அம்மா காலமும்
வாழ்க்கையில் சுமப்பவர் அப்பா.
வாழ்க்கையில் சுமப்பவர் அப்பா.
7. நடைபழக சொல்வாள் அம்மா எப்படி
நடக்க வேண்டுமென்பார் அப்பா.
நடக்க வேண்டுமென்பார் அப்பா.
8. அனுபவத்தை சொல்வாள் அம்மா அனுபவத்தில்
கற்றுக்கொள் என்பார் அப்பா.
கற்றுக்கொள் என்பார் அப்பா.
9. பாசத்தில் பறிதவிப்பாள் அம்மா பாசமிருப்பின்
காட்டிக்கொள்ள மாட்டார் அப்பா.
காட்டிக்கொள்ள மாட்டார் அப்பா.
10. குடும்பம் பிள்ளையென்பாள் அம்மா சமுதாயத்தில்
குடும்பம் எப்படியென்பார் அப்பா.
குடும்பம் எப்படியென்பார் அப்பா.
Subscribe to:
Posts (Atom)
கல்வி
ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த, நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...
-
உயிரெழுத்து V 0.1 அ'ம்மா அனைத்திற்கும் ஆ'தாரம் அடிப்படை.. இ'கழ்ந்தால் நீ இழப்பாய் ஈ'ட்டிய செல்வங்களை.. உ'யிராய் உச்சி...
-
ரொமான்ஸ் 😉 V 0.1 அன்பே.. நட்பே.. நகம் இழந்தபோது விரலாய் இருக்கிறாய்.. விரல் இழந்தபோது கையாய் இருக்கிறாய்.. கை இழந்தபோது ...