Tuesday, November 20, 2018

ஆத்திசூடி - அம்மா

ஆத்திசூடி - அம்மா

1. அ'கிலத்தின் தொடக்கம்

2. ஆ'ண்டவனின் உண்மை உருவம்

3. இ'ல்லத்தின் விடிவெள்ளி

4. ஈ'கையின் குணம்

5. உ'யிர்களுக்கெல்லாம் உயிர்   

6. ஊ'ன் வளர்ப்பவள்

7. எ'ல்லோரும் உச்சரிக்கும் வார்த்தை

8. ஏ'ணியாய் நிற்பவள்

9. ஐ'யமில்லா அன்பு

10. ஒ'ப்பில்லா உலகம்

11. ஓ'யாது உழைப்பவள்

12. ஔ'டத சொல்

13. அஃ'றிணைகளும் அடங்குமிடம்

14. க'ண் கண்ட தெய்வம்

15. ங'ப்போல் குடும்பத்திற்க்காக வளைபவள்

16. ச'ங்கடங்களின் தீர்வு

17. ஞ'யமாய் பேசுபவள் 

18. வட'மென கட்டி காப்பாள்

19. வண'க்கத்திற்கு உரியவள்

20. ந'லம் போற்றுவாள்  

21. மன'தார செய்பவள்

22. ப'ண்பை விதைத்தவள்

23. ம'ண்ணில் ஒரு மாணிக்கம்

24. இய'ல்பாய் இயங்குபவள்

25. ர'ணமாற காரணம்

26. தல'ங்கள் தலைவனக்குமிடம்

27. வ'யிறு காய்ந்தாலும் பசியாற்றுபவள்

28. அழ'கு தன்பிள்ளை என்பாள்

29. வள'ர்த்துவிட்ட வாழ்வாள்

30. சிற'ப்புற செய்வாள்

31. தின'ம்தினம் பேணுவாள்.

32. க'ருவறை கொண்ட கோவில்.

33. கா'ணிக்கை கேட்காத கடவுள்.

34. கி'ழமை விடாதவள்

35. கீ'தமாய் இசைப்பவள்

36. கு'டும்ப விளக்கொளி

37. கூ'ட்டணி தலைமையவள் 

38. கெ'டுப்பதை தடுப்பவள்

39. கே'ள்வியை தொடுப்பவள்

40. கை'கோர்த்து முகத்தோடு அணைப்பவள்

41. கொ'ள்ளை மனமேடுபவள்

42. கோ'டிகளுக்குள் அடங்காதவள் 

43.  கெள'ரவம் அவளது பாசம்

44. ச'த்தியத்தின் குரு

44 சா'தனை சின்னம்.

45. சி'த்திரம் கொஞ்சுமழகு

46. சீ'ர்பட செய்பவள்.

47. சு'மைகளை சுகமாக்குபவள்

48. சூ'துவாது அறியாதவள்.

49.  செ'துக்கும் உளி

50. சே'ய்களுக்கு சேய்

51. சை'கையிலும் மொழிவாள்

52.  சொ'ர்க்கப்பூமியும் அவள்

53.  சோ'கத்தை விரட்டுபவள்

54.  த'வற்றைப் பொறுப்பவள்

55.  தா'ங்கி நம்மையும் தாங்குபவள்

56.  தி'த்திக்கும் சொல் அவள்

57. தீ'மையை தீர்த்திடுவாள்

58.  து'க்கத்தை எதிர்ப்பவள்

59.  தூ'ங்காது நம்மைக் காத்தவள்

60.  தெ'கட்டாத தேன்.

61. தே'சம் போற்றினாலும் நம் தேசம்

62. தை'ரியம் கூடும் அவளை நினைக்கையில்

63. தொ'ழு அனுதினம்

64. தோ'ல்வியிலும் தேற்றுபவள்

65. ந'டமாடும் தெய்வம்

66. நா'னாக இருக்க (நானிருக்க) நீயே காரணம்

67. நி'கரில்லை உன்போல்.

68. நீ'யின்றி ஏதுமில்லை

69. நு'ட்பம் அறிந்தவள்

70. நூ'ற்சேலை உடுத்தினாலும் நம்மை அழகுபார்ப்பவள்

71. நெ'ஞ்சிலும் சுமப்பவள்

72. நே'சிக்க மட்டுமே தெரிந்தவள்

73. நை'ச தாலாட்டுபவள்

74. நொ'டிக்கு நொடி நினைப்பவள்.

75. நோ'ய்தீர நோபிருப்பவள்.

76. ப'ரிதவிப்பவள்

77. பா'சக்கடல் அவள்

78.  பி'ணித்தீர்க்கும் மருந்து அவள்.  

79. பீ'டுநடை போட மகிழ்பவள்

80.  பு'ன்னகை அழகி அவள்

81.  பூ'வின் மணம் அவள்

82. பெ'யர் சொல்லி பெருமைப்படுபவள்

83. பே'றுபெற வாழ்த்துபவள்

84. பை'ந்தமிழின் அழகு  அவள்

85. பொ'றுமையின் சிகரம் அவள்

86.  போ'ற்றும் உலகம் அவள்.

87.  ம'னதை நன்கு அறிந்தவள்.

88.  மா'றாத; மறவாத அன்புடையவள்.

89.  மி'ன்னும் நட்சத்திரம் அவள்

90. மீ'ட்டும் நரம்புவாள்

91.  மு'த்தமிழும் அவள்

92. மூ'ன்றெழுத்து கவிதை

93.  மெ'ல்லிய காற்று அவள்

94. மே'ன்மக்களுக்கு மேல்

95. மை'விழியார் மான்விழியாள்

96. மொ'ழிவதில் பிள்ளைமொழியாள்

97. மோ'கனம் படுபவள்

98.  வ'னத்தின் வாசம் அவள்

99.  வா'ழ்க்கையே அவள்.

100.  வி'வேகத்தின் வேகம் அவள்

101. வீ'டே சொர்க்கமென ஆக்குபவள்

102. உ'லகம் வியக்கும் உறவு.

103. ஊ'க்கமளிப்பவள்

104. வெ'றுமையில் வெளிச்சம் அவள்

105. வே'ண்டினால் வரமளிப்பவள்

106. வை'கறைத் திங்களவள்

107. ஒ'ழுக்கம் போதிப்பவள்

108. ஓ'ய்வில் அவள் மடியே மடம்.

1 comment:

  1. அருமையோ அருமை அய்யா👌👌👌...உங்கள் ஆத்திசூடிக்கு அடிமையாகிவிட்டேன் நான்🙏...

    ReplyDelete

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...