சத்தி இருந்தும் சங்கடங்கள் நிறைய
யுக்தி தெரிந்தும் சாதனைகள் குறைய
எங்கே போகுது நாடு எங்கே போகுது
பணம் இருந்தால் தான் எல்லாம் இங்கே நடக்குது.
வெயிலில் வெகுது ஜனம் பசியில் வாடுது
பிணம் ஆனாலும் பணம் இல்லாம என்ன நடக்குது.
சரணம்
************
தேவைக்கு அதிகமான சோறு வாந்தியா போகும்
தேவைக்கு அதிகமான பணம் குப்பையா மாறும்
பணத்தை மதிப்பவன் மனதை மிதிக்கிறான் குணத்தைப் பெற்றவன் நாளும் குட்டுப்படுகிறான்
பணத்தை கொண்டவன் உலகை ஆளுகிறான் திறமை பெற்றவன் இடிந்து போகிறான்
பணத்தை மூட்டை கட்டி வச்சு என்ன கொண்டு செல்ல
மண்ணில் இருந்து வந்த நீ மண்ணில் போக போற
என்று மாறுமோ இந்த நிலை வென்று தீருமோ அவல நிலை
தேவைக்கு அதிகமான பணம் குப்பையா மாறும்
பணத்தை மதிப்பவன் மனதை மிதிக்கிறான் குணத்தைப் பெற்றவன் நாளும் குட்டுப்படுகிறான்
பணத்தை கொண்டவன் உலகை ஆளுகிறான் திறமை பெற்றவன் இடிந்து போகிறான்
பணத்தை மூட்டை கட்டி வச்சு என்ன கொண்டு செல்ல
மண்ணில் இருந்து வந்த நீ மண்ணில் போக போற
என்று மாறுமோ இந்த நிலை வென்று தீருமோ அவல நிலை
சரணம்
************
பணத்தை உருவாக்கியது மனிதன் என்பது உண்மை பணமோ மனிதனை ஆளுகிறது என்பதும் உண்மை
உணவு சாப்பிடவும் பணம் கொடுக்கணும் வருக்காலம் உயிர் வாழ்ந்திடவே பணமாகிடும்.
பணத்துக்காக குணத்தை மாற்றுபவன் மிருகம் இல்லாதவனுக்கு இருப்பதை கொடுக்குறவன் தெய்வம்
ஆயிரம் ஆட்டம் போட்டு என்ன இறுதியில் ஓடோடி வந்து
நெற்றியில் ஒட்டிக் கொள்வது அந்த ஒரு ரூபாதானே
என்று மாறுமோ இந்த நிலை வென்று தீருமோ அவல நிலை
No comments:
Post a Comment