Wednesday, November 28, 2018

காதல் பாடல் #24

hi ஸ்மார்ட் போன் பெண்ணே 
my ஹார்ட் உந்தன் பின்னே
டச் மீ டச் மீனு சொல்கிறாய்
ஸ்வாப் மீ ஸ்வாப் மீனு சிலிர்க்கிறாய்
இருந்தும் லாக் பண்ணி கீபேட் தந்து சீக்கிரட் பின் கேட்கிறாய்  

சரணம்
*********

உன்னை பார்த்ததும் கண்ணில் brightness கூடுதே
எனக்குள் lifetime புதிதாய் recharge ஆகுதே 
விழித்திரை திறந்து திறந்து மூடுகையில் 
மனக்குறை குறைந்து குறைந்து போகுதடி
என்னைவிட்டு தள்ளி தள்ளி ஓடுகையில்
சிக்னல்கெட்டு நீயும் நீயும் நிற்பாயடி
காதல் செய்ய காலம் தந்த கருவி நீ
காலம் முழுதும் வாழ உந்தன் சிம் நானடி

சரணம்
*********

Cameraவா கண்ணடித்து உந்தன் நெஞ்சில் பதிவிடு
நமது பெயரை Memory cardல் நிரப்பிடு
Facebookல் பேஸ் பேஸ் பார்த்து Whatsappல் வாய்ஸ் வாய்ஸ் கேட்போமடி
காதல்Apps install install பண்ணி
நம்முள் Gapsசை gapsசை தள்ளடி. 
பூமிக்கு வந்த Online தேவதை நீ
டேட்டா குறையாமல் டே-டூ-டே பேசுபவன் நானடி. 

Tuesday, November 27, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - வாழ்வியல் தத்துவம் #4

1.   தின்பதே  நோய்க்கு வழிவகுக்கும் தின்னா 
திருப்பான் நோயில்லா திருப்பான்.

2. அறிஞர்களாலும் ஞானிகளாலும் உணரவைக்க முடியாததை
அனுபவம் உணரவைத்து விடும்.

3. விழுந்தாலும் அழுதாலும் எழுந்திடும் குழந்தையிடம்
வாழ்க்கையை கேளுங்கள் யாதென   

4. பலமில்லா உடம்போ பகலில் தூங்கும்
தூங்காது இரவில் மனசு

5. முன்னே செல்பவரிடம் கற்றுக்கொள் பின்னே
வருபவரிடம் எச்சரிக்கை கொள்

6. பிச்சை இடுவதும் கூட சுயநலமே
புண்ணியம் கிடைக்குமென்று இட்டால்.

7. மதிப்பீடு பணத்திற்கு உண்டு செலவழித்தால்
மனிதனுக்கும் உண்டு கடன்கேட்டால்.

8. வலியில்லா வாழ்க்கை வாழ விழைகின்றோம்
வலிமறக்க சிரித்தே வாழ்கின்றோம்.

9. உண்மையில் உழைத்து வரும் சம்பாத்தியம் 
பெரும்பாலும் உண்டியலுக்கு வருவதில்லை.

10. நல்லவனென்று நிலைநிறுத்த பிறரை கெட்டவனென்றால்
நல்லவனென்பது நிலைக்காது வெகுநாள்.

Saturday, November 24, 2018

காதல் பாடல் #23

உன் பார்வை பட்டதும் நெஞ்சினில் வீசும் பூங்காற்று
ஒரு வார்த்தை சொன்னதும் உள்ளே சுழலும் புயல்காற்று
காதல் மழை சாரல் தூவ வானில் தேகம் லேசா போக
பறக்குறேன் நான் மேல மேல தேவதை உன்ன காண காண 
சரணம்
**********
நாடா'வா கண்ணே நீ வந்தாலும் மனம் உன்னை நாடிடவே துடிக்கிறது.
ஒக்கி'யா பெண்ணே நீ முறைத்தாலும் உசுரா உன்னை பார்க்கவே நினைக்கிறது.
கஜாவின் தங்கச்சியா இருந்திட்டு போ
வார்தாவின் தோழியா இருந்திட்டு போ
தன்னிலை இழந்த வானிலை தான் இப்போ என்னிலை இந்நிலை மாற காதல் மையம் கொண்டு உன்னை நிலை நிறுத்தடி.
சரணம்
**********
மழையாய் அன்பே நீ தூறினாலும் பூமியாய் உன்னை ஏற்கவே தோன்றுகிறது.
புயலாய் முன்பே நீ நின்றாலும் சுவாசமாய் உன்னை இழுக்கவே நினைக்கிறது.
கரைகளை ஒதுங்கி வட்டமிட்டிட்டு போ
கரைசேர என்னை உன்னிலிட்டு போ
என்னில் காதல் புயலின் எச்சரிக்கை விடுத்து செய்திகள் பறக்குது அன்பே நிவாரண நிதியாய் ஒரு முத்தத்தை மனம் கேட்குது.

கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

மழை வேண்டித்தானே நின்றோம் கஜா
பிழை செய்து போனாயே கஜா

மண்ணை பார்த்து வேலை செய்தோம் கஜா
மண்ணை வாரி தூவிட்டியே கஜா

பொண்ண போல பார்த்து வளர்த்தோம் கஜா
பொரட்டி போட்டு போயிட்டியே கஜா

கண்ணை போல கட்டி காத்தோம் கஜா
கண்ணில் கண்ணீர் வச்சிட்டியே கஜா

விண்ணை போல போற்றி புகழ்ந்தோம் கஜா
வில்லை வீட்டையும் ஒடச்சிட்டியே கஜா

ஆசை வச்சு காட காத்தோம் கஜா
காடு கழனியெல்லாம் மூழ்கி போச்சு கஜா

இயற்கை உன்னை சுவாசித்தோம் கஜா
இல்லாம ஓட்டாண்டி ஆக்கிட்டியே கஜா  

கூரை ஓடெல்லாம் மட்டமாச்சு  கஜா
கைகூப்பி நிற்க விட்டுட்டியே கஜா

நட்ட மரமெல்லாம் சாஞ்சது கஜா
பட்ட பாடெல்லாம் வீணா போச்சே கஜா

வாழை மரங்களை வளைச்சிட்டியே கஜா
வாழ்க்கையே சேதச்சிட்டியே கஜா

ராஜாவா வாழ்ந்தோம் இங்கே கஜா
கூஜா ஏந்த வச்சிட்டியே கஜா

செய்வது அறியாது தவிக்கின்றோம் கஜா
நல்ல வச்சி செஞ்சிட்டேயே கஜா

ஆடு மாடெல்லாம் செத்தாச்சு கஜா
வெறும் உயிரை வெச்சி நிற்கிறோம் கஜா

எதற்க்காக இங்கு வந்தாய் கஜா
உன்னை யார் இங்கு அழைத்தது கஜா

Wednesday, November 21, 2018

காதல் பாடல் #22

அழகு சிலைதான் இவள போல எவதான்
ஆய கலைதான் பிரம்மன் செய்த தவம்தான்
ஊரே வியக்கும் அவளை பார்த்து மூக்குல விரலை வைக்கும்
தேரே போகும் கடவுளே பார்த்து வரம் கேட்டு நிற்கும்
( hear me beauty for me hearty  love you cutie  love me sweetie)
சரணம்
++++++++
மல்லிகை ஏங்குதடி உன் கூந்தலில் இடம் கேட்டு  குடிபுக
செவ்வானம் வந்ததடி உன் உதட்டோர சிவப்பை கடன் கேட்க
மைதீட்டிய உன் விழிகள் புதுமொழி பேசுதடி
வானத்தில் உன் புருவங்கள் கவிழ்ந்த பிறையடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்
சரணம்
++++++++
கவியுலகம் தேடுதடி உன் நாசிக்கு புதியதோர் உவமை ஒன்று
காந்தள் நானுதடி உன் அழகிய விரல்களை கண்டு கண்டு
காதோர உன் லோலாக்கு புதுநடனம் பயிலுதடி
ஐந்தடி உன் உயரம்நீ அலங்கரித்த அழகுதேரடி
பிரம்மா நன்றி வியந்தேன் உன் படைப்பை இவளை
பார்த்த பின்பு வியந்தேன்

Tuesday, November 20, 2018

ஆத்திசூடி - அம்மா

ஆத்திசூடி - அம்மா

1. அ'கிலத்தின் தொடக்கம்

2. ஆ'ண்டவனின் உண்மை உருவம்

3. இ'ல்லத்தின் விடிவெள்ளி

4. ஈ'கையின் குணம்

5. உ'யிர்களுக்கெல்லாம் உயிர்   

6. ஊ'ன் வளர்ப்பவள்

7. எ'ல்லோரும் உச்சரிக்கும் வார்த்தை

8. ஏ'ணியாய் நிற்பவள்

9. ஐ'யமில்லா அன்பு

10. ஒ'ப்பில்லா உலகம்

11. ஓ'யாது உழைப்பவள்

12. ஔ'டத சொல்

13. அஃ'றிணைகளும் அடங்குமிடம்

14. க'ண் கண்ட தெய்வம்

15. ங'ப்போல் குடும்பத்திற்க்காக வளைபவள்

16. ச'ங்கடங்களின் தீர்வு

17. ஞ'யமாய் பேசுபவள் 

18. வட'மென கட்டி காப்பாள்

19. வண'க்கத்திற்கு உரியவள்

20. ந'லம் போற்றுவாள்  

21. மன'தார செய்பவள்

22. ப'ண்பை விதைத்தவள்

23. ம'ண்ணில் ஒரு மாணிக்கம்

24. இய'ல்பாய் இயங்குபவள்

25. ர'ணமாற காரணம்

26. தல'ங்கள் தலைவனக்குமிடம்

27. வ'யிறு காய்ந்தாலும் பசியாற்றுபவள்

28. அழ'கு தன்பிள்ளை என்பாள்

29. வள'ர்த்துவிட்ட வாழ்வாள்

30. சிற'ப்புற செய்வாள்

31. தின'ம்தினம் பேணுவாள்.

32. க'ருவறை கொண்ட கோவில்.

33. கா'ணிக்கை கேட்காத கடவுள்.

34. கி'ழமை விடாதவள்

35. கீ'தமாய் இசைப்பவள்

36. கு'டும்ப விளக்கொளி

37. கூ'ட்டணி தலைமையவள் 

38. கெ'டுப்பதை தடுப்பவள்

39. கே'ள்வியை தொடுப்பவள்

40. கை'கோர்த்து முகத்தோடு அணைப்பவள்

41. கொ'ள்ளை மனமேடுபவள்

42. கோ'டிகளுக்குள் அடங்காதவள் 

43.  கெள'ரவம் அவளது பாசம்

44. ச'த்தியத்தின் குரு

44 சா'தனை சின்னம்.

45. சி'த்திரம் கொஞ்சுமழகு

46. சீ'ர்பட செய்பவள்.

47. சு'மைகளை சுகமாக்குபவள்

48. சூ'துவாது அறியாதவள்.

49.  செ'துக்கும் உளி

50. சே'ய்களுக்கு சேய்

51. சை'கையிலும் மொழிவாள்

52.  சொ'ர்க்கப்பூமியும் அவள்

53.  சோ'கத்தை விரட்டுபவள்

54.  த'வற்றைப் பொறுப்பவள்

55.  தா'ங்கி நம்மையும் தாங்குபவள்

56.  தி'த்திக்கும் சொல் அவள்

57. தீ'மையை தீர்த்திடுவாள்

58.  து'க்கத்தை எதிர்ப்பவள்

59.  தூ'ங்காது நம்மைக் காத்தவள்

60.  தெ'கட்டாத தேன்.

61. தே'சம் போற்றினாலும் நம் தேசம்

62. தை'ரியம் கூடும் அவளை நினைக்கையில்

63. தொ'ழு அனுதினம்

64. தோ'ல்வியிலும் தேற்றுபவள்

65. ந'டமாடும் தெய்வம்

66. நா'னாக இருக்க (நானிருக்க) நீயே காரணம்

67. நி'கரில்லை உன்போல்.

68. நீ'யின்றி ஏதுமில்லை

69. நு'ட்பம் அறிந்தவள்

70. நூ'ற்சேலை உடுத்தினாலும் நம்மை அழகுபார்ப்பவள்

71. நெ'ஞ்சிலும் சுமப்பவள்

72. நே'சிக்க மட்டுமே தெரிந்தவள்

73. நை'ச தாலாட்டுபவள்

74. நொ'டிக்கு நொடி நினைப்பவள்.

75. நோ'ய்தீர நோபிருப்பவள்.

76. ப'ரிதவிப்பவள்

77. பா'சக்கடல் அவள்

78.  பி'ணித்தீர்க்கும் மருந்து அவள்.  

79. பீ'டுநடை போட மகிழ்பவள்

80.  பு'ன்னகை அழகி அவள்

81.  பூ'வின் மணம் அவள்

82. பெ'யர் சொல்லி பெருமைப்படுபவள்

83. பே'றுபெற வாழ்த்துபவள்

84. பை'ந்தமிழின் அழகு  அவள்

85. பொ'றுமையின் சிகரம் அவள்

86.  போ'ற்றும் உலகம் அவள்.

87.  ம'னதை நன்கு அறிந்தவள்.

88.  மா'றாத; மறவாத அன்புடையவள்.

89.  மி'ன்னும் நட்சத்திரம் அவள்

90. மீ'ட்டும் நரம்புவாள்

91.  மு'த்தமிழும் அவள்

92. மூ'ன்றெழுத்து கவிதை

93.  மெ'ல்லிய காற்று அவள்

94. மே'ன்மக்களுக்கு மேல்

95. மை'விழியார் மான்விழியாள்

96. மொ'ழிவதில் பிள்ளைமொழியாள்

97. மோ'கனம் படுபவள்

98.  வ'னத்தின் வாசம் அவள்

99.  வா'ழ்க்கையே அவள்.

100.  வி'வேகத்தின் வேகம் அவள்

101. வீ'டே சொர்க்கமென ஆக்குபவள்

102. உ'லகம் வியக்கும் உறவு.

103. ஊ'க்கமளிப்பவள்

104. வெ'றுமையில் வெளிச்சம் அவள்

105. வே'ண்டினால் வரமளிப்பவள்

106. வை'கறைத் திங்களவள்

107. ஒ'ழுக்கம் போதிப்பவள்

108. ஓ'ய்வில் அவள் மடியே மடம்.

அம்மா


Wednesday, November 14, 2018

மனிதன் கணிதன்


குழந்தைகளே குழந்தைகளே

குழந்தைகளே குழந்தைகளே எனதருமை குழந்தைகளே!
செல்லங்களே செல்லங்களே நம்வீட்டு செல்லங்களே!
துன்பங்கள் பறக்கும் சிரிப்புகளே இன்பங்கள் நிறைக்கும் சுட்டிகளே!
இறுக்கங்கள் குறைக்கும் இனிப்புகளே சறுக்கங்கள் நொறுக்கும் இனிமைகளே!
சொர்க்கம் வீடென காட்டி தினம் தினம் சொக்கவைக்கும் பொடுசுகளே!

சரணம்
**********
உங்கள் கைகால்கள் ஆட்டி நடக்கையில் காண்கிறோம் தாமரை
உங்கள்  தேகம் வீசும் வாசனையில் நுகர்கிறோம் ரோஜா
உங்கள் சிரிப்பு கோபங்கள் தீர்க்கும் முல்லை வனப்பு தாழம்பூ சொல்லும் எல்லை
உங்கள் கண்கள் நேரெதிர் பார்க்கும் நேர்மை கரையாத மனதும் கரைந்திடும் உண்மை
வீட்டின் உற்சாக அருவிகள் எங்கும் பாடித்திரியும் குருவிகள்
நம் வாழ்வை வளமாக்க வந்த சுருதிகள்
நம் நாட்டினை உயர்வாக்க வந்த கருவிகள் 

சரணம்
**********
ஊரும் அழகாச்சு உன்னை நாடுகையில் உறவுகளும் அழகாச்சு
பாரம் மறந்தாச்சு உன்னை கொஞ்சுகையில் கவலைகளும் பறந்தாச்சு
காலை என்ன மாலை என்ன எதுவும் உன்னிடம் மயங்குமே  தினம் தினம்
கோபம் என்ன தாபம் என்ன எதுவும் உன்னிடம் பொசுங்குமே கணம் கணம்  
பொம்மையும் கொஞ்சிடும் பொம்மைகள் ஆய்ந்து பார்த்திடும் ஜீவிகள்
பல பெருமை வாங்கிட வந்த இளவல்கள்
வீறு நடை போட்டிட வந்த செல்வங்கள்

Saturday, November 10, 2018

காதல் பாடல் #21

ஆசை மெல்ல மெல்ல துளிர்க்கும்
அதை சொல்ல சொல்ல இனிக்கும்
அழகு கொள்ள கொள்ள பறிக்கும்  
அமுதம் அள்ள அள்ள தெறிக்கும்
மனம் காதல் காதலென்று பறக்கும்
தினம் வானில் சிறகுகள் விரிக்கும்

சரணம்
**********
நெற்றியில் குங்கும பொட்டாக ஒட்டி கொள்ள ஆசை
கூந்தலில் அழகு பூஞ்சரமாய் கட்டி தொங்க ஆசை
விரலில் மோதிரமாக ஒட்டிக்கொண்டு முத்தமிட ஆசை
கைக்கடிகாரமாக நான் மாறி உன்னை கட்டிக் கொள்ள ஆசை
வளையளாக உனது கைகளில் வழுக்கி விளையாட ஆசை
என்னில் காதல் வரைந்து வரைந்து உன்னில் கரைந்து கரைந்து விட ஆசை.

சரணம்
**********
சேலைக்குள் நூலாக  தேகத்தை சுற்றிக்கொள்ள ஆசை
ஒட்டியாணமாக இடையை இருக்கி கொடியாக படர ஆசை
கால் கொலுசில் வரும் இசையாக இணைந்திருக்க ஆசை
உருவம் இல்லாத கற்புக்கு உருவமாக இருக்க ஆசை
உயிரினில் உள்ளே உதிரமாய் ஓடி கொண்டிருக்க ஆசை
உன்னில் இதயம் நுழைந்து நுழைந்து உன்னுள்ளே கலந்து கலந்துவிட ஆசை

Thursday, November 8, 2018

காற்று


நவீன திருக்குறள் அதிகாரம் - காதலென்பது

1. கண்களில் படும் நெஞ்சினில் சுடும்
வயிற்றினில் படபடக்கும் பட்டாம்பூச்சி 

2. நான்கு கண்களும் சேர்ந்து நமக்குள் 
காணும் ஒரே காட்சி.

3. தொட்டாலும் பட்டாலும் சதைப்பசி தாண்டிய 
ஓர் நளின உணர்வு.

4. பூட்டிப் பூட்டி பொத்தி வைத்தாலும்
எட்டி எட்டிப் பார்க்கும்.

5. உலகில் இயங்கும் சக்திகளுக்கெல்லாம் தலையானது
உள்ளங்களை பிணைக்கும் மாபெரும்சக்தி.

6. ஆனந்தம் கொள்ள வைத்து மூழ்கடிக்கும்
ஆனந்த கண்ணீரிலும் நனைக்கும்.

7. ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் அன்பின்
இறுக்கத்தின் புரிதலோடு பிரசவிப்பது.

8. இயற்கையானது தூய்மையானது நம்பிக்கையுடையது சிறுபிள்ளைத்தனமானது
மரணத்தை மரணிக்கச் செய்வது.

9. வயதின் விதி வாலிபத்தின் சதி
வென்றால் இருவரும் சதிபதி

10. இரண்டு இருதயங்களில் ஒருவரில் லப்
இன்னொருவரில் கேட்கும் டப்.

கன்னக்குழி


Tuesday, November 6, 2018

10000வாலா

கண்கள் ராக்கெட்
முகம் பூந்தொட்டி
நெற்றி ட்ரை கலர்
கன்னம் ஸ்டார் ட்ரம்
வாய் 1000வாலா
பற்கள் 2000வாலா
பேச்சு குருவி வெடி 
அழுகல் ஹைட்ரஜன் பாம்
மூக்கு துப்பாக்கி 
மூச்சு புஸ்வானம்
நெஞ்சு பிஜிலி
மனசு பேபி ராக்கெட் 
நடை பாம்பு மாத்திரை 
உடை பேப்பர் பாம்
இடை புல்லட் பாம்
தொடை ரங்மேளா
சிரிப்பு மத்தாப்பு
கைகள் சாட்டை 
விரல்கள் பென்சில்
கோபம் ஆட்டம்பாம் 
கால்கள் சங்குசக்கரம்
மொத்தத்தில்
என்னவள் 10000வாலா

Sunday, November 4, 2018

தீபாவளி தீபாவளி

தீபாவளி தீபாவளி
இல்லம் எங்கும் தீபஒளி தீபஒளி.
தீபாவளி தீபாவளி
தீமை நீங்கும் இன்பஒளி இன்பஒளி.
பார்க்கும் தெருவெல்லாம் மத்தாப்பு
சிரிக்கும் மனசெல்லாம் தித்திப்பு
சரணம்
**********
நல் எண்ணை தேய்த்து தீய எண்ணம் நீங்கு
புற வெளிச்சம் கொடுத்து உள் இருளை போக்கு
இன்முகம் காட்டி இனிதாய் குதூகலிக்கும் உறவுகள்.
விதவிதமாய் உடை அணிந்து ஆடிவிளையாடும் மழலைகள்.
வகை வகையாய் பலகாரம் செய்திட 
முடியாமல் வடை சட்டிக்கும் வாய் வலித்திட
நித்தமும் இல்லத்தில் மகிழ்ச்சியே நிலவட்டும்.
சித்தமும் சிறந்தே சிந்தனையும் செழிக்கட்டும.


சரணம் 
**********
சிறு சண்டைகளை சீக்கிரம் ஊசி வெடியாய் வெடி.
பயம் கொண்ட நெஞ்சினை பாயும் ராக்கெட்டாயாய் மாறு.
ஆட்டம்பாம் போல ஏறிடும் விலைவாசி புஸ்வானமாகட்டும்.
சரவெடியாய் நிம்மதி எங்கும் படபடவென வெடிக்கட்டும்.
சங்கு சக்கரமாய் வேலைகள் செய்திட
ஆசைகள் எல்லாம் மத்தாப்பாய் நிறைவேறி பூத்திட
பொய்புரட்டு சூதுலஞ்சம் பசிபட்டினி கருகட்டும்.
புதுஉதயம் புதுவாழ்வு புத்துணர்ச்சி பொங்கட்டும்.

Friday, November 2, 2018

சிறுக்கி


வெட்கம்


பணம்

சத்தி இருந்தும் சங்கடங்கள் நிறைய
யுக்தி தெரிந்தும் சாதனைகள் குறைய
எங்கே போகுது நாடு எங்கே போகுது
பணம் இருந்தால் தான் எல்லாம் இங்கே நடக்குது.
வெயிலில் வெகுது ஜனம் பசியில் வாடுது
பிணம் ஆனாலும் பணம் இல்லாம என்ன நடக்குது.

சரணம்
************
தேவைக்கு அதிகமான சோறு வாந்தியா போகும்
தேவைக்கு அதிகமான பணம் குப்பையா மாறும்
பணத்தை மதிப்பவன் மனதை மிதிக்கிறான் குணத்தைப் பெற்றவன் நாளும் குட்டுப்படுகிறான்
பணத்தை கொண்டவன் உலகை ஆளுகிறான் திறமை பெற்றவன்  இடிந்து போகிறான்
பணத்தை மூட்டை கட்டி வச்சு என்ன கொண்டு செல்ல
மண்ணில் இருந்து வந்த நீ மண்ணில் போக போற
என்று மாறுமோ இந்த நிலை வென்று தீருமோ அவல நிலை

சரணம்
************
பணத்தை உருவாக்கியது மனிதன் என்பது உண்மை
பணமோ மனிதனை ஆளுகிறது என்பதும் உண்மை
உணவு சாப்பிடவும் பணம் கொடுக்கணும் வருக்காலம் உயிர் வாழ்ந்திடவே பணமாகிடும்.  
பணத்துக்காக குணத்தை மாற்றுபவன் மிருகம் இல்லாதவனுக்கு இருப்பதை கொடுக்குறவன் தெய்வம்
ஆயிரம் ஆட்டம் போட்டு என்ன இறுதியில் ஓடோடி வந்து 

நெற்றியில் ஒட்டிக் கொள்வது அந்த ஒரு ரூபாதானே 
என்று மாறுமோ இந்த நிலை வென்று தீருமோ அவல நிலை

Thursday, November 1, 2018

நவீன திருக்குறள் அதிகாரம் - பாடம்

நவீன திருக்குறள்
அதிகாரம் - பாடம்
************************

1. தலைக்கணம் மிகுந்தவன் வாழ்க்கையில் அழிந்து
போவான் சொல்கிறது தீக்குச்சி. 

2. நேற்றென்ன கிழித்தாய் இன்றென்ன கிழிக்கப்போகிறாய்
கிழிக்கவந்தாய் கேட்கிறது காலண்டர்.

3. அனைத்து மனிதர்களுக்கும் உணர்த்துகிறது நிழல் 
கருப்புதானென்று இரத்தம் சிகப்புதானென்று. 

4. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பக்கம் இறுதியைநோக்கி
கற்பிக்கிறது வாழ்க்கை புத்தகம்.

5. என்னுடனே ஓடிவா இல்லையென்றால் உன்னைவிட்டு
ஓடிவிடுவேன் காட்டுகிறது கடிகாரம்.

6. ஆயிரம் தடைகள் வந்தாலும் போராடி
முன்னேறு  என்கிறது வாழை.

7. என்னைப்போல் இருந்துவிடு பூத்துக்கொண்டே காலமும்
இருப்பாய் நிரூபிக்கின்றது பூச்செடி.

8. காற்றென்னை தூற்றினாலும் துரத்தினாலும் வேலையை
செய்வேனென்று அழுகிறது மேகம்.

9. சமுதாயத்தை தலைநிமிர்த்தியது தலைகுனிந்து போதும் 
பெருமிதம் கொள்கிறது எழுதுகோல்.

10. எதிர்பார்ப்புகளுடன் ஏமாற்றங்களையும் சேர்த்துக்கொள் வெற்றிதான்
வாழ்க்கையில் அறிவிக்கிறது தோல்வி.

கல்வி

 ஆசை யாரைவிட்டது... பெற்றோரை துரத்த,  நான் உலகம் கண்டேன், அது மேலும் கூட, கனவுகளும் கூடியது. மண்ணில் ஓடி விளையாட ஆரம்பித்தேன், மழலைக்கல்வி த...